Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௭௨

وَقَالَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِيْٓ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْٓا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَۚ  ( آل عمران: ٧٢ )

And said
وَقَالَت
கூறினர்
a group
طَّآئِفَةٌ
ஒரு கூட்டத்தினர்
of (the) People (of) the Book
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
"Believe
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
in what
بِٱلَّذِىٓ
எதை
was revealed
أُنزِلَ
இறக்கப்பட்டது
on those who
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
believe[d]
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
(at the) beginning (of) the day
وَجْهَ ٱلنَّهَارِ
பகலின் ஆரம்பம்
and reject
وَٱكْفُرُوٓا۟
இன்னும் நிராகரியுங்கள்
at its end
ءَاخِرَهُۥ
அதன் இறுதியில்
perhaps they may return
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக

Wa qaalat taaa'ifatum min Ahlil Kitaabi aaminoo billazeee unzila 'alal lazeena aamanoo wajhan nahaari wakfurooo aakhirahoo la'alla hum yarji'oon (ʾĀl ʿImrān 3:72)

Abdul Hameed Baqavi:

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: "நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதனை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கை கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்" (என்றும்)

English Sahih:

And a faction of the People of the Scripture say [to each other], "Believe in that which was revealed to the believers at the beginning of the day and reject it at its end that perhaps they will return [i.e., abandon their religion], ([3] Ali 'Imran : 72)

1 Jan Trust Foundation

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்)| “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்.