Skip to main content

ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௩

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَآ اِلَّا رَجُلٌ يُّرِيْدُ اَنْ يَّصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَاۤؤُكُمْ ۚوَقَالُوْا مَا هٰذَآ اِلَّآ اِفْكٌ مُّفْتَرًىۗ وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَاۤءَهُمْۙ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ   ( سبإ: ٤٣ )

And when are recited
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
to them
عَلَيْهِمْ
அவர்கள் முன்
Our Verses
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
clear
بَيِّنَٰتٍ
தெளிவான
they say
قَالُوا۟
அவர்கள் கூறினர்
"Not (is) this
مَا هَٰذَآ
இவர் இல்லை
but
إِلَّا
தவிர
a man
رَجُلٌ
ஓர் ஆடவரே
who wishes
يُرِيدُ
நாடுகின்றனர்
to hinder you
أَن يَصُدَّكُمْ
இவர் உங்களைத் தடுக்க
from what used (to) worship
عَمَّا كَانَ يَعْبُدُ
வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும்
your forefathers"
ءَابَآؤُكُمْ
மூதாதைகள் உங்கள்
And they say
وَقَالُوا۟
இன்னும் அவர்கள்கூறினர்
"Not (is) this
مَا هَٰذَآ
இது இல்லை
except
إِلَّآ
தவிர
a lie
إِفْكٌ
பொய்
invented"
مُّفْتَرًىۚ
இட்டுக்கட்டப்பட்ட
And said
وَقَالَ
இன்னும் கூறினர்
those who disbelieved
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
about the truth
لِلْحَقِّ
சத்தியம்
when
لَمَّا
வந்த போது
it came to them
جَآءَهُمْ
தங்களிடம்
"Not (is) this
إِنْ هَٰذَآ
இது இல்லை
except
إِلَّا
தவிர
a magic
سِحْرٌ
சூனியமே
obvious"
مُّبِينٌ
தெளிவான

Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaaloo maa haazaa illaa rajuluny yureedu ai-yasuddakum 'ammaa kaana ya'budu aabaaa'ukum wa qaaloo maa haazaaa illaaa ifkum muftaraa; wa qaalal lazeena kafaroo lilhaqqi lammaa jaaa'ahum in haazaaa illaa sihrum mubeen (Sabaʾ 34:43)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) "இவர் ஒரு சாதாரண மனிதரே அன்றி வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவைகளிலிருந்து உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்றும் (நம்முடைய தூதர் கூறுகிற) "இது வெறும் கட்டுக்கதையேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். அன்றி "(திருக்குர்ஆனாகிய) இந்த உண்மை வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.

English Sahih:

And when Our verses are recited to them as clear evidences, they say, "This is not but a man who wishes to avert you from that which your fathers were worshipping." And they say, "This is not except a lie invented." And those who disbelieve say of the truth when it has come to them, "This is not but obvious magic." ([34] Saba : 43)

1 Jan Trust Foundation

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்| “இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் “இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்| திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.