Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௩

لَيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْٓا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ۗوَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ࣖ   ( المائدة: ٩٣ )

Not
لَيْسَ
இல்லை
on those who
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
believe
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
and do
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
the good deeds
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
any sin
جُنَاحٌ
குற்றம்
for what
فِيمَا
எதில்
they ate
طَعِمُوٓا۟
புசித்தார்கள்
when that they fear (Allah)
إِذَا مَا ٱتَّقَوا۟
தவிர்ந்து கொண்டால்
and they believe
وَّءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
and they do
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
[the] good deeds
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
then
ثُمَّ
பிறகு
they fear (Allah)
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
and believe
وَّءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
then
ثُمَّ
பிறகு
they fear (Allah)
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
and do good
وَّأَحْسَنُوا۟ۗ
இன்னும் நல்லறம் செய்தார்கள்
and Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
loves
يُحِبُّ
நேசிக்கிறான்
the good-doers
ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிவோரை

Laisa 'alal lazeena aamanoo wa 'amilus saalihaati junaahun feemaa ta'imooo izaa mat taqaw wa aamanoo wa 'amilus saalihaati summat taqaw wa aamanoo summat taqaw wa ahsanoo; wallaahu yuhibbul muhsineen (al-Māʾidah 5:93)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது. அவர்கள் (தடுக்கப்பட்டபின் அவைகளிலிருந்து) விலகி நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான்.

English Sahih:

There is not upon those who believe and do righteousness [any] blame concerning what they have eaten [in the past] if they [now] fear Allah and believe and do righteous deeds, and then fear Allah and believe, and then fear Allah and do good; and Allah loves the doers of good. ([5] Al-Ma'idah : 93)

1 Jan Trust Foundation

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.