Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௮

وَجَاوَزْنَا بِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ ۚقَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّنَآ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ۗقَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ  ( الأعراف: ١٣٨ )

And We led across
وَجَٰوَزْنَا
கடக்க வைத்தோம்
(the) Children (of) Israel
بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
the sea
ٱلْبَحْرَ
கடலை
Then they came
فَأَتَوْا۟
வந்தனர்
upon
عَلَىٰ
அருகில்
a people
قَوْمٍ
ஒரு சமுதாயத்தின்
devoted
يَعْكُفُونَ
வழிபாட்டுக்காக தங்கியிருக்கின்றனர்
to idols
عَلَىٰٓ أَصْنَامٍ
சிலைகளுக்கருகில்
of theirs
لَّهُمْۚ
தங்கள்
They said
قَالُوا۟
கூறினர்
"O Musa!
يَٰمُوسَى
மூஸாவே!
Make
ٱجْعَل
ஏற்படுத்து
for us
لَّنَآ
எங்களுக்கு
a god
إِلَٰهًا
வணங்கப்படும் ஒரு கடவுளை
like what
كَمَا
போல்
they have
لَهُمْ
அவர்களுக்கு
gods
ءَالِهَةٌۚ
வணங்கப்படும் கடவுள்கள்
He said
قَالَ
கூறினார்
"Indeed, you
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
(are) a people
قَوْمٌ
சமுதாயம்
ignorant
تَجْهَلُونَ
அறியமாட்டீர்கள்

Wa jaawaznaa bi Banneee Israaa'eelal bahra fa ataw 'alaa qawminy ya'kufoona 'alaaa asnaamil lahum; qaaloo yaa Moosaj'al lanaa ilaahan kamaa lahum aalihah; qaala innakum qawmun tajhaloon (al-ʾAʿrāf 7:138)

Abdul Hameed Baqavi:

நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதனைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வையுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார்.

English Sahih:

And We took the Children of Israel across the sea; then they came upon a people intent in devotion to [some] idols of theirs. They [the Children of Israel] said, "O Moses, make for us a god just as they have gods." He said, "Indeed, you are a people behaving ignorantly. ([7] Al-A'raf : 138)

1 Jan Trust Foundation

நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.