Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௯

قُلْ اَمَرَ رَبِّيْ بِالْقِسْطِۗ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۗ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَۗ  ( الأعراف: ٢٩ )

Say
قُلْ
கூறுவீராக
"(Has been) ordered
أَمَرَ
ஏவினான்
"(by) my Lord
رَبِّى
என் இறைவன்
justice
بِٱلْقِسْطِۖ
நீதத்தை
and set
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
your faces
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
at every
عِندَ كُلِّ
இடம்/எல்லாம்
masjid
مَسْجِدٍ
மஸ்ஜிது
and invoke Him
وَٱدْعُوهُ
அழையுங்கள்/அவனை
(being) sincere to Him
مُخْلِصِينَ لَهُ
தூய்மைப்படுத்தியவர்களாக/அவனுக்கு
(in) the religion
ٱلدِّينَۚ
வழிபடுவதை
As He originated you
كَمَا بَدَأَكُمْ
போன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களை
(so) will you return"
تَعُودُونَ
திரும்புவீர்கள்

Qul amara Rabbee bilqisti wa aqeemoo wujoohakum 'inda kulli masjidin wad'oohu mukhliseena lahud deen; kamaa bada akum ta'oodoon (al-ʾAʿrāf 7:29)

Abdul Hameed Baqavi:

அன்றி, "என் இறைவன் நீதத்தையே கட்டளை யிட்டிருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து) வெளியாக்கியது போல (இறந்த பின்னரும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) நீங்கள் மீளுவீர்கள்" என்றும் கூறுங்கள்.

English Sahih:

Say, [O Muhammad], "My Lord has ordered justice and that you direct yourselves [to the Qiblah] at every place [or time] of prostration, and invoke Him, sincere to Him in religion." Just as He originated you, you will return [to life] – ([7] Al-A'raf : 29)

1 Jan Trust Foundation

“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.