Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௧௮

لِلَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰىۗ وَالَّذِيْنَ لَمْ يَسْتَجِيْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ۗ اُولٰۤىِٕكَ لَهُمْ سُوْۤءُ الْحِسَابِ ەۙ وَمَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗوَبِئْسَ الْمِهَادُ ࣖ  ( الرعد: ١٨ )

For those who
لِلَّذِينَ
எவர்களுக்கு
responded
ٱسْتَجَابُوا۟
பதிலளித்தார்கள்
to their Lord
لِرَبِّهِمُ
தங்கள் இறைவனுக்கு
(is) the bliss
ٱلْحُسْنَىٰۚ
மிக அழகிய நன்மை
And for those who
وَٱلَّذِينَ
எவர்கள்
(did) not respond
لَمْ يَسْتَجِيبُوا۟
அவர்கள் பதிலளிக்கவில்லை
to Him
لَهُۥ
அவனுக்கு
if that
لَوْ أَنَّ
நிச்சயமாகஇருந்திருந்தால்
they had
لَهُم
அவர்களுக்கு
whatever (is) in the earth
مَّا فِى ٱلْأَرْضِ
பூமியிலுள்ளவை
all
جَمِيعًا
அனைத்தும்
and like of it
وَمِثْلَهُۥ
இன்னும் அதுபோன்றது
with it
مَعَهُۥ
அதனுடன்
surely they would offer ransom with it
لَٱفْتَدَوْا۟ بِهِۦٓۚ
அதை பிணை கொடுத்திருப்பார்கள்
Those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
for them
لَهُمْ
அவர்களுக்கு
(is) a terrible
سُوٓءُ
கடினமானது
reckoning
ٱلْحِسَابِ
விசாரணை
and their abode
وَمَأْوَىٰهُمْ
இன்னும் தங்குமிடம் அவர்களுடைய
(is) Hell
جَهَنَّمُۖ
நரகம்தான்
and wretched
وَبِئْسَ
மிகக் கெட்டுவிட்டது
(is) the resting place
ٱلْمِهَادُ
தங்குமிடத்தால்

Lillazeenas tajaaboo lirabbihimul husnaa; wallazeena lam yastajeeboo lahoo law anna lahum maa fil ardi jamee'anw wa mislahoo ma'ahoo laftadaw bih; ulaaa'ika lahum sooo'ul hisaab; wa maawaahum Jahannamu wa bi'sal mihaad (ar-Raʿd 13:18)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். அன்றி, எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) அன்றி, அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது.

English Sahih:

For those who have responded to their Lord is the best [reward], but those who did not respond to Him – if they had all that is in the earth entirely and the like of it with it, they would [attempt to] ransom themselves thereby. Those will have the worst account, and their refuge is Hell, and wretched is the resting place. ([13] Ar-Ra'd : 18)

1 Jan Trust Foundation

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.