Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௩

۞ وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ۗ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِۗ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَاۤرَّ وَالِدَةٌ ۢبِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗوَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ   ( البقرة: ٢٣٣ )

And the mothers
وَٱلْوَٰلِدَٰتُ
தாய்மார்கள்
shall suckle
يُرْضِعْنَ
பாலூட்டுவார்கள்
their children
أَوْلَٰدَهُنَّ
தங்கள் குழந்தைகளுக்கு
(for) two years
حَوْلَيْنِ
ஈராண்டுகள்
complete
كَامِلَيْنِۖ
(இரு) முழுமையான
for whoever
لِمَنْ
யாருக்கு
wishes
أَرَادَ
நாடினார்
to complete
أَن يُتِمَّ
அவர் முழுமைப்படுத்துவதை
the suckling
ٱلرَّضَاعَةَۚ
பாலூட்டுதலை
And upon
وَعَلَى
மீது
the father (on) him
ٱلْمَوْلُودِ لَهُۥ
எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை)
(is) their provision
رِزْقُهُنَّ
அவர்களுக்கு உணவளிப்பது
and their clothing
وَكِسْوَتُهُنَّ
இன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பது
in a fair manner
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
Not is burdened
لَا تُكَلَّفُ
நிர்ப்பந்திக்கப்படாது
any soul except
نَفْسٌ إِلَّا
ஓர் ஆத்மா/தவிர
its capacity
وُسْعَهَاۚ
அதன் வசதி
Not made to suffer
لَا تُضَآرَّ
துன்புறுத்தப்பட மாட்டாள்
(the) mother
وَٰلِدَةٌۢ
ஒரு தாய்
because of her child
بِوَلَدِهَا
தன் குழந்தைக்காக
and not (the) father (be)
وَلَا مَوْلُودٌ لَّهُۥ
இன்னும் இல்லை/ தந்தை
because of his child
بِوَلَدِهِۦۚ
அவருடைய குழந்தை மூலம்
And on the heirs
وَعَلَى ٱلْوَارِثِ
வாரிசுதாரர் மீது
(is a duty) like
مِثْلُ
போன்றே
that
ذَٰلِكَۗ
அது
Then if they both desire
فَإِنْ أَرَادَا
அவ்விருவரும் நாடினால்
weaning
فِصَالًا
பால்குடி நிறுத்த
through mutual consent
عَن تَرَاضٍ
பரஸ்பர திருப்தியுடன்
of both of them
مِّنْهُمَا
அவ்விருவரின்/ (தங்கள்)
and consultation
وَتَشَاوُرٍ
இன்னும் பரஸ்பர ஆலோசனை
then no blame
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
on both of them
عَلَيْهِمَاۗ
அவ்விருவர் மீது
And if you want
وَإِنْ أَرَدتُّمْ
நீங்கள் விரும்பினால்
to ask another women to suckle
أَن تَسْتَرْضِعُوٓا۟
நீங்கள் பாலூட்டத் தேடுவது
your child
أَوْلَٰدَكُمْ
உங்கள் குழந்தைகளுக்கு
then (there is) no blame
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
on you
عَلَيْكُمْ
உங்கள் மீது
when you pay
إِذَا سَلَّمْتُم
நீங்கள் ஒப்படைத்தால்
what
مَّآ
எதை
(is) due (from) you
ءَاتَيْتُم
நீங்கள் கொடுத்தீர்கள்
in a fair manner
بِٱلْمَعْرُوفِۗ
நல்ல முறையில்
And fear
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
and know
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
that Allah
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
of what
بِمَا
எதை
you do
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்
(is) All-Seer
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Walwaa lidaatu yurdi'na awlaada hunna hawlaini kaamilaini liman araada ai yutimmar radaa'ah; wa 'alalmawloodi lahoo rizuhunna wa kiswatuhunna bilma'roof; laatukallafu nafsun illaa wus'ahaa; laa tudaaarra waalidatum biwaladihaa wa laa mawloodul lahoo biwaladih; wa 'alal waarisi mislu zaalik; fa in araadaa Fisaalan 'an taraadim minhumaa wa tashaawurin falaa junaaha 'alaimaa; wa in arattum an tastardi'ooo awlaadakum falaa junaaha 'alaikum izaa sallamtum maaa aataitum bilma'roof; wattaqul laaha wa'lamooo annal laaha bimaa ta'maloona baseer (al-Baq̈arah 2:233)

Abdul Hameed Baqavi:

எவரேனும் (தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரையில்) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும். யாதொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்படமாட்டாது. (ஆகவே) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்படமாட்டாது. தவிர இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதனை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. அன்றி, நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரையில் பாலூட்டி வந்த பெற்ற தாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக் கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவ னாகவே இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

English Sahih:

Mothers may nurse [i.e., breastfeed] their children two complete years for whoever wishes to complete the nursing [period]. Upon the father is their [i.e., the mothers'] provision and their clothing according to what is acceptable. No person is charged with more than his capacity. No mother should be harmed through her child, and no father through his child. And upon the [father's] heir is [a duty] like that [of the father]. And if they both desire weaning through mutual consent from both of them and consultation, there is no blame upon either of them. And if you wish to have your children nursed by a substitute, there is no blame upon you as long as you give payment according to what is acceptable. And fear Allah and know that Allah is Seeing of what you do. ([2] Al-Baqarah : 233)

1 Jan Trust Foundation

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.