Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮௩

اَلَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَآ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ النَّارُ ۗ قُلْ قَدْ جَاۤءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِيْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِيْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ   ( آل عمران: ١٨٣ )

Those who
ٱلَّذِينَ
எவர்கள்
said
قَالُوٓا۟
கூறினார்கள்
"Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(has) taken promise
عَهِدَ
உறுதிமொழி வாங்கினான்
from us
إِلَيْنَآ
எங்களிடம்
that not we (should) believe
أَلَّا نُؤْمِنَ
நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று
in a Messenger
لِرَسُولٍ
ஒரு தூதருக்கு
until
حَتَّىٰ
வரை
he brings to us
يَأْتِيَنَا
வருவார்/எங்களிடம்
a sacrifice
بِقُرْبَانٍ
ஒரு பலியைக்கொண்டு
consumes it
تَأْكُلُهُ
சாப்பிடும்/அதை
the fire"
ٱلنَّارُۗ
நெருப்பு
Say
قُلْ
கூறுவீராக
"Surely
قَدْ
திட்டமாக
came to you
جَآءَكُمْ
வந்தார்(கள்) உங்களிடம்
Messengers
رُسُلٌ
பல தூதர்கள்
from before me
مِّن قَبْلِى
எனக்கு முன்னர்
with the clear Signs
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
and with what you speak
وَبِٱلَّذِى قُلْتُمْ
இன்னும் எதைக்கொண்டு/கூறினீர்கள்
So why you killed them
فَلِمَ قَتَلْتُمُوهُمْ
ஆகவே ஏன்?/கொலை செய்தீர்கள்/அவர்களை
if you are
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
truthful
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Allazeena qaalooo innal laaha 'ahida ilainaaa allaa nu'mina liRasoolin hatta yaa tiyanaa biqurbaanin taa kuluhun naar; qul qad jaaa'akum Rusulum min qablee bilbaiyinaati wa billazee qultum falima qataltumoohum in kuntum saadiqeen (ʾĀl ʿImrān 3:183)

Abdul Hameed Baqavi:

(அன்றி) இவர்கள் "எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும் வரையில் அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாதென்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக் கின்றான்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதனையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சி களையும் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருக்க உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?’

English Sahih:

[They are] those who said, "Indeed, Allah has taken our promise not to believe any messenger until he brings us an offering which fire [from heaven] will consume." Say, "There have already come to you messengers before me with clear proofs and [even] that of which you speak. So why did you kill them, if you should be truthful?" ([3] Ali 'Imran : 183)

1 Jan Trust Foundation

மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!)| “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.