Skip to main content

ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௬

فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَيْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ   ( سبإ: ١٦ )

But they turned away
فَأَعْرَضُوا۟
ஆனால் புறக்கணித்தனர்
so We sent
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
upon them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
(the) flood
سَيْلَ
பெரும் வெள்ளத்தை
(of) the dam
ٱلْعَرِمِ
அடியோடு அரித்து செல்கின்ற
and We changed for them
وَبَدَّلْنَٰهُم
இன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்கு
their two gardens
بِجَنَّتَيْهِمْ
அவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாக
(with) two gardens
جَنَّتَيْنِ
இரண்டு தோட்டங்களை
producing fruit
ذَوَاتَىْ
உடைய
producing fruit
أُكُلٍ
பழங்கள்
bitter
خَمْطٍ
துர்நாற்றமுள்ள
and tamarisks
وَأَثْلٍ
இன்னும் காய்க்காத மரங்கள்
and (some)thing of lote trees few
وَشَىْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ
இன்னும் மிகக் குறைவான சில இலந்தை மரங்களை

Fa-a''radoo fa-arsalnaa 'alaihim Sailal 'Arimi wa baddalnaahum bijannataihim jannataini azwaatai ukulin khamtinw wa aslinw wa shai'im min sidrin qaleel (Sabaʾ 34:16)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்கள் (அதனைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தான தொரு ஏரியை உடைக்கக் கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களையும், சில இலந்தை மரங்களையும் கொண்ட தோப்புகளாக மாற்றிவிட்டோம்.

English Sahih:

But they turned away [refusing], so We sent upon them the flood of the dam, and We replaced their two [fields of] gardens with gardens of bitter fruit, tamarisks and something of sparse lote trees. ([34] Saba : 16)

1 Jan Trust Foundation

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.