Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௧

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَآ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًاۚ  ( النساء: ٦١ )

And when it is said
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
to them
لَهُمْ
அவர்களுக்கு
"Come
تَعَالَوْا۟
வாருங்கள்
to
إِلَىٰ
பக்கம்
what (has) revealed
مَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
and to the Messenger"
وَإِلَى ٱلرَّسُولِ
இன்னும் பக்கம்/தூதர்
you see
رَأَيْتَ
காண்பீர்
the hypocrites
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
turning away
يَصُدُّونَ
புறக்கணிக்கிறார்கள்
from you
عَنكَ
உம்மை விட்டு
(in) aversion
صُدُودًا
புறக்கணித்தல்

Wa izaa qeela lahum ta'aalaw ilaa maaa anzalallaahu wa ilar Rasooli ra aital munaafiqeena yasuddoona 'anka sudoodaa (an-Nisāʾ 4:61)

Abdul Hameed Baqavi:

"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந் நயவஞ்சகர்கள் உங்களைவிட்டு முற்றிலும் விலகிவிடுவதையே நீங்கள் காண்பீர்கள்.

English Sahih:

And when it is said to them, "Come to what Allah has revealed and to the Messenger," you see the hypocrites turning away from you in aversion. ([4] An-Nisa : 61)

1 Jan Trust Foundation

மேலும் அவர்களிடம்| “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.