Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே!
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
رَبَّكُمُ
உங்கள் இறைவனை
ٱلَّذِى
எவன்
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
مِّن نَّفْسٍ
ஓர் ஆன்மாவிலிருந்து
وَٰحِدَةٍ
ஒரே
وَخَلَقَ
இன்னும் படைத்தான்
مِنْهَا
அதிலிருந்து
زَوْجَهَا
அவருடைய மனைவியை
وَبَثَّ
இன்னும் பரப்பினான்
مِنْهُمَا
அவ்விருவரிலிருந்து
رِجَالًا
ஆண்களை
كَثِيرًا
அதிகமான
وَنِسَآءًۚ
இன்னும் பெண்களை
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ ٱلَّذِى
அல்லாஹ்வை/எவன்
تَسَآءَلُونَ
உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள்
بِهِۦ
அவனைக்கொண்டு
وَٱلْأَرْحَامَۚ
இன்னும் இரத்தபந்தங்களை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَلَيْكُمْ
உங்கள் மீது
رَقِيبًا
கண்காணிப்பாளனாக

Yaaa aiyuhan naasut taqoo Rabbakumul lazee khalaqakum min nafsinw waahidatinw wa khalaqa minhaa zawjahaa wa bas sa minhumaa rijaalan kaseeranw wa nisaaa'aa; wattaqul laahallazee tasaaa 'aloona bihee wal arhaam; innal laaha kaana 'alaikum Raqeeba

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلْيَتَٰمَىٰٓ
அநாதைகளுக்கு
أَمْوَٰلَهُمْۖ
செல்வங்களை/அவர்களுடைய
وَلَا تَتَبَدَّلُوا۟
மாற்றி விடாதீர்கள்
ٱلْخَبِيثَ
கெட்டதை
بِٱلطَّيِّبِۖ
நல்லதிற்கு பதிலாக
وَلَا تَأْكُلُوٓا۟
விழுங்காதீர்கள்
أَمْوَٰلَهُمْ
செல்வங்களை/அவர்களுடைய
إِلَىٰٓ أَمْوَٰلِكُمْۚ
உங்கள்/செல்வங்கள்/உடன்
إِنَّهُۥ
நிச்சயமாக அது
كَانَ
இருக்கிறது
حُوبًا
பாவமாக
كَبِيرًا
பெரும்

Wa aatul yataamaaa amwaalahum wa laa tatabad dalul khabeesa bittaiyibi wa laa taakulooo amwaalahum ilaaa amwaalikum; innahoo kaana hooban kabeeraa

நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.

Tafseer

وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
أَلَّا تُقْسِطُوا۟
நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
فِى ٱلْيَتَٰمَىٰ
அநாதைகள் விஷயத்தில்
فَٱنكِحُوا۟
மணம் புரியுங்கள்
مَا طَابَ
எவளை/விருப்பமாகி விட்டார்
لَكُم
உங்களுக்கு
مِّنَ ٱلنِّسَآءِ
பெண்களிலிருந்து
مَثْنَىٰ
இரண்டிரண்டாக
وَثُلَٰثَ
இன்னும் மும்மூன்றாக
وَرُبَٰعَۖ
இன்னும் நான்கு நான்காக
فَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
أَلَّا تَعْدِلُوا۟
நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
فَوَٰحِدَةً
ஒருத்தியை
أَوْ
அல்லது
مَا مَلَكَتْ
எவளை/ சொந்தமாக்கியது
أَيْمَٰنُكُمْۚ
வலக்கரங்கள்/உங்கள்
ذَٰلِكَ
இதுவே
أَدْنَىٰٓ
சுலபமாகும்
أَلَّا تَعُولُوا۟
நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு

Wa in khiftum allaa tuqsitoo fil yataamaa fankihoo maa taaba lakum minan nisaaa'i masnaa wa sulaasa wa rubaa'a fa'in khiftum allaa ta'diloo fawaahidatan aw maa malakat aimaanukum; zaalika adnaaa allaa ta'ooloo

அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.

Tafseer

وَءَاتُوا۟
கொடுங்கள்
ٱلنِّسَآءَ
பெண்களுக்கு
صَدُقَٰتِهِنَّ
மணக்கொடைகளை /அவர்களுடைய
نِحْلَةًۚ
கடமையாக
فَإِن طِبْنَ
அவர்கள் விரும்பினால்
لَكُمْ
உங்களுக்கு
عَن شَىْءٍ
ஒரு சிறிதை
مِّنْهُ
அதிலிருந்து
نَفْسًا
மனதால்
فَكُلُوهُ
அதைப் புசியுங்கள்
هَنِيٓـًٔا
இன்பமாக
مَّرِيٓـًٔا
மகிழ்ச்சியாக

Wa aatun nisaaa'a sadu qaatihinna nihlah; fa in tibna lakum 'an shai'im minhu nafsan fakuloohu hanee'am mareee'aa

நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை" (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்.

Tafseer

وَلَا تُؤْتُوا۟
கொடுக்காதீர்கள்
ٱلسُّفَهَآءَ
புத்திக் குறைவானவர்களுக்கு
أَمْوَٰلَكُمُ
செல்வங்களை/உங்கள்
ٱلَّتِى
எது
جَعَلَ
ஆக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
قِيَٰمًا
வாழ்வாதாரமாக
وَٱرْزُقُوهُمْ
உணவளியுங்கள்
فِيهَا
அதில்/அவர்களுக்கு
وَٱكْسُوهُمْ
இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு
وَقُولُوا۟
கூறுங்கள்
لَهُمْ
அவர்களுக்கு
قَوْلًا
சொல்லை
مَّعْرُوفًا
நல்லது

Wa laa tu'tus sufahaaa'a amwaalakumul latee ja'alal laahu lakum qiyaamanw-warzuqoohum feehaa waksoohum wa qooloo lahum qawlam ma'roofaa

(அநாதைகளின் பொருளுக்குக் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக!

Tafseer

وَٱبْتَلُوا۟
சோதியுங்கள்
ٱلْيَتَٰمَىٰ
அநாதைகளை
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا بَلَغُوا۟
அவர்கள் அடைந்தால்
ٱلنِّكَاحَ
திருமணத்தை
فَإِنْ ءَانَسْتُم
நீங்கள் கண்டால்
مِّنْهُمْ
அவர்களிடம்
رُشْدًا
தெளிவான அறிவை
فَٱدْفَعُوٓا۟
ஒப்படையுங்கள்
إِلَيْهِمْ
அவர்களிடம்
أَمْوَٰلَهُمْۖ
செல்வங்களை/ அவர்களுடைய
وَلَا تَأْكُلُوهَآ
சாப்பிடாதீர்கள் / அவற்றை
إِسْرَافًا
அளவு கடந்து
وَبِدَارًا
இன்னும் அவரை அவசரமாக
أَن يَكْبَرُوا۟ۚ
அவர்கள் பெரியவர்களாகுவதை
وَمَن
எவர்
كَانَ
இருக்கிறார்
غَنِيًّا
செல்வந்தராக
فَلْيَسْتَعْفِفْۖ
அவர் தவிர்க்கவும்
وَمَن
இன்னும் எவர்
كَانَ
இருக்கிறார்
فَقِيرًا
ஏழையாக
فَلْيَأْكُلْ
புசிக்கவும்
بِٱلْمَعْرُوفِۚ
முறையுடன்
فَإِذَا دَفَعْتُمْ
நீங்கள் ஒப்படைத்தால்
إِلَيْهِمْ
அவர்களிடம்
أَمْوَٰلَهُمْ
செல்வங்களை/ அவர்களுடைய
فَأَشْهِدُوا۟
சாட்சியாக்குங்கள்
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
وَكَفَىٰ
இன்னும் போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்
حَسِيبًا
துல்லியமாக கணக்கெடுப்பவனாக

Wabtalul yataamaa hattaaa izaa balaghun nikaaha fa in aanastum minhum rushdan fad fa'ooo ilaihim amwaalahum wa laa taa kuloohaaa israafanw wa bidaaran ai yakbaroo; wa mai kaana ghaniyyan falyasta' fif wa mai kaana faqeeran falyaakul bilma'roof; fa izaa dafa'tum ilaihim amwaalahum fa'ashhidoo 'alaihim; wa kafaa billaahi Haseeba

அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருள்களைப் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய பொருள்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு விடாதீர்கள். (அநாதையின் பொருள்களுடைய பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (தனக்காக அநாதையின் பொருள்களிலிருந்து யாதொன்றையும் பயன் பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய பொருள்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (ஆகவே அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.)

Tafseer

لِّلرِّجَالِ
ஆண்களுக்கு
نَصِيبٌ
ஒரு பாகம்
مِّمَّا تَرَكَ
எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
ٱلْوَٰلِدَانِ
பெற்றோர்
وَٱلْأَقْرَبُونَ
இன்னும் நெருங்கிய உறவினர்கள்
وَلِلنِّسَآءِ
இன்னும் பெண்களுக்கு
نَصِيبٌ
ஒரு பாகம்
مِّمَّا تَرَكَ
எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
ٱلْوَٰلِدَانِ
பெற்றோர்
وَٱلْأَقْرَبُونَ
இன்னும் நெருங்கிய உறவினர்கள்
مِمَّا قَلَّ
எதிலிருந்து/குறைந்தது
مِنْهُ
அதில்
أَوْ
அல்லது
كَثُرَۚ
அதிகமானது
نَصِيبًا
பாகமாக
مَّفْرُوضًا
கடமையாக்கப்பட்டது

Lirrijaali naseebum mimmaa tarakal waalidaani wal aqraboona wa lin nisaaa'i naseebum mimmaa tarakal waalidaani wal aqraboona mimmaa qalla minhu aw kasur; naseebam mafroodaa

(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வாறே) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்.

Tafseer

وَإِذَا حَضَرَ
வந்தால்
ٱلْقِسْمَةَ
பங்கு வைக்கும்போது
أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ
உறவினர்கள்
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அனாதைகள்
وَٱلْمَسَٰكِينُ
இன்னும் ஏழைகள்
فَٱرْزُقُوهُم
கொடுங்கள் அவர்களுக்கு
مِّنْهُ
அதிலிரு ந்து
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
لَهُمْ
அவர்களுக்கு
قَوْلًا
சொல்லை
مَّعْرُوفًا
நல்லது

Wa izaa hadaral qismata ulul qurbaa walyataamaa walmasaakeenu farzuqoohum minhu wa qooloo lahum qawlam ma'roofaa

(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி) விடுங்கள்.

Tafseer

وَلْيَخْشَ
பயப்படட்டும்
ٱلَّذِينَ
எவர்கள்
لَوْ تَرَكُوا۟
அவர்கள் விட்டுச் சென்றால்
مِنْ
இருந்து
خَلْفِهِمْ
அவர்களுக்குப் பின்
ذُرِّيَّةً
ஒரு சந்ததியை
ضِعَٰفًا
பலவீனர்கள்
خَافُوا۟
பயப்படுவார்கள்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
فَلْيَتَّقُوا۟
ஆகவே அவர்கள் அஞ்சட்டும்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَلْيَقُولُوا۟
இன்னும் அவர்கள் சொல்லட்டும்
قَوْلًا
சொல்லை
سَدِيدًا
நேர்மையானது

Walyakhshal lazeena law tarakoo min khalfihim zurriyyatan di'aafan khaafoo 'alaihim falyattaqul laaha walyaqooloo qawlan sadeedaa

எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَأْكُلُونَ
விழுங்குகிறார்கள்
أَمْوَٰلَ
செல்வங்களை
ٱلْيَتَٰمَىٰ
அநாதைகளின்
ظُلْمًا
அநியாயமாக
إِنَّمَا
எல்லாம்
يَأْكُلُونَ
விழுங்குகிறார்கள்
فِى بُطُونِهِمْ
வயிறுகளில்/ அவர்களுடைய
نَارًاۖ
நெருப்பை
وَسَيَصْلَوْنَ
இன்னும் எரிவார்கள்
سَعِيرًا
நரக ஜுவாலையில்

Innal lazeena yaakuloona amwaalal yataamaa zulman innamaa yaakuloona fee butoonihim Naaranw-wa sayaslawna sa'eeraa

எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துன்னிஸாவு
القرآن الكريم:النساء
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):An-Nisa'
ஸூரா:4
வசனம்:176
Total Words:3054
Total Characters:6030
Number of Rukūʿs:24
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:92
Starting from verse:493