Skip to main content

وَكَيْفَ
எவ்வாறு ?
تَأْخُذُونَهُۥ
அதை எடுப்பீர்கள்
وَقَدْ
திட்டமாக
أَفْضَىٰ
கலந்து விட்டார்
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
إِلَىٰ بَعْضٍ
சிலருடன்
وَأَخَذْنَ
(அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள்
مِنكُم
உங்களிடம்
مِّيثَٰقًا
வாக்குறுதியை
غَلِيظًا
உறுதியானது

Wa kaifa taakhuzoonahoo wa qad afdaa ba'dukum ilaa ba'dinw wa akhazna minkum meesaaqan ghaleezaa

அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே!

Tafseer

وَلَا تَنكِحُوا۟
மணம் புரியாதீர்கள்
مَا
எவர்களை
نَكَحَ
மணம் புரிந்தார்
ءَابَآؤُكُم
உங்கள் தந்தைகள்
مِّنَ
இருந்து
ٱلنِّسَآءِ
பெண்கள்
إِلَّا
தவிர
مَا قَدْ
எது/முன்னர் நடந்து விட்டது
إِنَّهُۥ
நிச்சயமாக இது
كَانَ
இருக்கிறது
فَٰحِشَةً
மானக்கேடானதாக
وَمَقْتًا
இன்னும் வெறுக்கப்பட்டதாக
وَسَآءَ
இன்னும் கெட்டுவிட்டது
سَبِيلًا
பழக்கம்

Wa laa tankihoo maa nakaha aabaaa'ukum minan nisaaa'i illaa maa qad salaf; inahoo kaana faahishatanw wa maqtanw wa saaa'a sabeelaa

முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக் கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.

Tafseer

حُرِّمَتْ
தடுக்கப்பட்டுள்ளது
عَلَيْكُمْ
உங்கள் மீது
أُمَّهَٰتُكُمْ
உங்கள் தாய்கள்
وَبَنَاتُكُمْ
இன்னும் உங்கள் மகள்கள்
وَأَخَوَٰتُكُمْ
இன்னும் உங்கள்சகோதரிகள்
وَعَمَّٰتُكُمْ
இன்னும் உங்கள் மாமிகள்
وَخَٰلَٰتُكُمْ
இன்னும் உங்கள் தாயின் சகோதரிகள்
وَبَنَاتُ
இன்னும் மகள்கள்
ٱلْأَخِ
சகோதரனின்
وَبَنَاتُ
இன்னும் மகள்கள்
ٱلْأُخْتِ
சகோதரியின்
وَأُمَّهَٰتُكُمُ
இன்னும் உங்கள் தாய்கள்
ٱلَّٰتِىٓ
எவர்கள்
أَرْضَعْنَكُمْ
பாலூட்டினர்/ உங்களுக்கு
وَأَخَوَٰتُكُم
இன்னும் உங்கள்சகோதரிகள்
مِّنَ ٱلرَّضَٰعَةِ
பால்குடியினால்
وَأُمَّهَٰتُ
தாய்கள்
نِسَآئِكُمْ
உங்கள்மனைவிகளின்
وَرَبَٰٓئِبُكُمُ
இன்னும் உங்கள் வளர்ப்புப் பிள்ளைகள்
ٱلَّٰتِى
எவர்கள்
فِى حُجُورِكُم
உங்கள் மடிகளில்
مِّن
இருந்து
نِّسَآئِكُمُ
உங்கள் மனைவிகள்
ٱلَّٰتِى
எவர்கள்
دَخَلْتُم
உறவு கொண்டீர்கள்
بِهِنَّ
அவர்களுடன்
فَإِن لَّمْ
நீங்கள் இல்லையென்றால்
دَخَلْتُم
உறவு கொண்டீர்கள்
بِهِنَّ
அவர்களுடன்
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَحَلَٰٓئِلُ
இன்னும் மனைவிகள்
أَبْنَآئِكُمُ
உங்கள் மகன்களின்
ٱلَّذِينَ
எவர்கள்
مِنْ
இருந்து
أَصْلَٰبِكُمْ
உங்கள் முதுகந்தண்டு
وَأَن تَجْمَعُوا۟
இன்னும் நீங்கள் ஒன்று சேர்ப்பது
بَيْنَ
மத்தியில்
ٱلْأُخْتَيْنِ
இரு சகோதரிகள்
إِلَّا
தவிர
مَا
எது
قَدْ سَلَفَۗ
முன்னர் நடந்தது
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Hurrimat 'alaikum umma haatukum wa bannaatukum wa akhawaatukum wa 'ammaatukum wa khaalaatukum wa banaatul akhi wa banaatul ukhti wa ummahaatu kumul laateee arda' nakum wa akhawaatukum minarradaa'ati wa ummahaatu nisaaa'ikum wa rabaaa'i bukumul laatee fee hujoorikum min nisaaa'ikumul laatee dakhaltum bihinna Fa il lam takoonoo dakhaltum bihina falaa junaaha 'alaikum wa halaaa'ilu abnaaa'ikumul lazeena min aslaabikum wa an tajma'oo bainal ukhtaini illaa maa qad salaf; innallaaha kaana Ghafoorar Raheema

உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனுக்குப் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது). அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்டிருக்கிறது). இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது. இதற்கு முன்னர் நடந்து விட்டவைகளைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَٱلْمُحْصَنَٰتُ
மணமானவர்கள்
مِنَ
இருந்து
ٱلنِّسَآءِ
பெண்களில்
إِلَّا
தவிர
مَا مَلَكَتْ
எவர்கள்/சொந்தமாக்கிக் கொண்டது
أَيْمَٰنُكُمْۖ
உங்கள் வலக்கரங்கள்
كِتَٰبَ
சட்டம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
وَأُحِلَّ
அனுமதிக்கப்பட்டது
لَكُم
உங்களுக்கு
مَّا وَرَآءَ
எவர்கள்/தவிர
ذَٰلِكُمْ
இவர்(கள்)
أَن تَبْتَغُوا۟
நீங்கள் தேடுவது
بِأَمْوَٰلِكُم
உங்கள் செல்வங்கள் மூலம்
مُّحْصِنِينَ
ஒழுக்கமுள்ளவர்களாக
غَيْرَ مُسَٰفِحِينَۚ
விபச்சாரர்களாக இல்லாமல்
فَمَا
எவள்
ٱسْتَمْتَعْتُم
சுகம்அனுபவித்தீர்கள்
بِهِۦ
அவளிடம்
مِنْهُنَّ
அவர்களில்
فَـَٔاتُوهُنَّ
கொடுங்கள் அவர்களுக்கு
أُجُورَهُنَّ
மஹர்களை அவர்களுடைய
فَرِيضَةًۚ
கடமையாக
وَلَا جُنَاحَ
குற்றமில்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
فِيمَا
எதில்
تَرَٰضَيْتُم
விரும்பினீர்கள்
بِهِۦ
அதில்
مِنۢ بَعْدِ
பின்னர்
ٱلْفَرِيضَةِۚ
கடமை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَلِيمًا
நன்கறிபவனாக
حَكِيمًا
ஞானவானாக

Walmuhsanaatu minan nisaaa'i illaa maa malakat aimaanukum kitaabal laahi 'alaikum; wa uhilla lakum maa waraaa'a zaalikum an tabtaghoo bi amwaali kum muhsineena ghaira musaa fiheen; famastamta'tum bihee minhunna fa aatoohunna ujoorahunna fareedah; wa laa junaaha 'alaikum feemaa taraadaitum bihee mim ba'dil fareedah; innal laaha kaana 'Aleeman Hakeemaa

கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் (திருமணக் கட்டணமாகிய "மஹரைக்" கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரோடு வீடு கூடிவிட்டீர்களோ அவருக்கு குறிப்பிட்ட "மஹரை" அவரிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்து விடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதனைக் குறைக்கவோ கூட்டவோ) இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது யாதொரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمَن
எவர்
لَّمْ يَسْتَطِعْ
சக்தி பெறவில்லை
مِنكُمْ
உங்களில்
طَوْلًا
பொருளாதாரம்
أَن يَنكِحَ
மணம் முடிப்பதற்கு
ٱلْمُحْصَنَٰتِ
சுதந்திர பெண்களை
ٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கைகொண்ட பெண்களை
فَمِن
ஆகவே, இருந்து
مَّا مَلَكَتْ
எவர்கள்/ சொந்தமாக்கின
أَيْمَٰنُكُم
உங்கள் வலக்கரங்கள்
مِّن
இருந்து
فَتَيَٰتِكُمُ
உங்கள் அடிமைப் பெண்கள்
ٱلْمُؤْمِنَٰتِۚ
நம்பிக்கைகொண்ட பெண்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِإِيمَٰنِكُمۚ
உங்கள் நம்பிக்கையை
بَعْضُكُم
உங்களில் சிலர்
مِّنۢ بَعْضٍۚ
சிலரைச் சேர்ந்தவரே
فَٱنكِحُوهُنَّ
ஆகவே மணமுடியுங்கள் அவர்களை
بِإِذْنِ
அனுமதியுடன்
أَهْلِهِنَّ
அவர்களின் உரிமையாளரின்
وَءَاتُوهُنَّ
கொடுங்கள்/ அவர்களுக்கு
أُجُورَهُنَّ
அவர்களுடைய மஹர்களை
بِٱلْمَعْرُوفِ
நல்ல முறையில்
مُحْصَنَٰتٍ
பத்தினிகளாக
غَيْرَ مُسَٰفِحَٰتٍ
விபச்சாரிகளாக இல்லாமல்
وَلَا مُتَّخِذَٰتِ
ஆக்கிக் கொள்ளாதவர்களாக
أَخْدَانٍۚ
ரகசிய நண்பர்களை
فَإِذَآ أُحْصِنَّ
அல்லது மணமுடிக்கப்பட்டால்
فَإِنْ أَتَيْنَ
அவர்கள் செய்தால்
بِفَٰحِشَةٍ
மானக்கேடானதை
فَعَلَيْهِنَّ
அவர்கள் மீது
نِصْفُ
பாதி
مَا عَلَى
எது/மீது
ٱلْمُحْصَنَٰتِ
சுதந்திரமானபெண்கள்
مِنَ
இருந்து
ٱلْعَذَابِۚ
தண்டனை
ذَٰلِكَ
இது
لِمَنْ
எவருக்கு
خَشِىَ
பயந்தார்
ٱلْعَنَتَ
பாவத்தை
مِنكُمْۚ
உங்களில்
وَأَن تَصْبِرُوا۟
நீங்கள்சகித்திருப்பது
خَيْرٌ
நன்று
لَّكُمْۗ
உங்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Wa mal lam yastati' minkum tawlan ai yankihal muhsanaatil mu'minaati famimmaa malakat aimaanukum min fatayaatikumul mu'minaat; wallaahu a'lamu bi eemaanikum; ba'dukum mim ba'd; fankihoohunna bi izni ahlihinna wa aatoohunna ujoorahunna bilma'roofi muhsanaatin ghaira musaa fihaatinw wa laa muttakhizaati akhdaan; fa izaaa uhsinna fa in ataina bifaahi shatin fa'alaihinnna nisfu maa 'alal muhsanaati minal 'azaab; zaalika liman khashiyal 'anata minkum; wa an tasbiroo khairul lakum; wallaahu Ghafoorur Raheem

உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கின்றான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்கவேண்டும். விபச்சாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகின்றாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

يُرِيدُ
நாடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُبَيِّنَ
தெளிவுபடுத்துவதற்கு
لَكُمْ
உங்களுக்கு
وَيَهْدِيَكُمْ
இன்னும் நேர்வழி நடத்துவதற்கு/உங்களை
سُنَنَ
வழிகளை
ٱلَّذِينَ
எவர்களின்
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
وَيَتُوبَ
இன்னும் பிழை பொறுப்பதற்கு
عَلَيْكُمْۗ
உங்கள் மீது
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Yureedul laahu liyubai yina lakum wa yahdiyakum sunanal lazeena min qablikum wa yatooba 'alaikum; wallaahu 'Aleemun Hakeem

அல்லாஹ் (தன்னுடைய கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி (உங்கள் குற்றங்களை மன்னித்து) உங்கள் மீது அன்பு புரிவதையே விரும்புகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
يُرِيدُ
நாடுகிறான்
أَن يَتُوبَ
பிழைபொறுக்க
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَيُرِيدُ
நாடுகிறார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
يَتَّبِعُونَ
பின்பற்றுகிறார்கள்
ٱلشَّهَوَٰتِ
அற்ப ஆசைகளை
أَن تَمِيلُوا۟
நீங்கள் சாய்வதை
مَيْلًا
சாய்வது
عَظِيمًا
முற்றிலும்

Wallaahu yureedu ai yatooba 'alaikum wa yureedul lazeena yattabi 'oonash shahawaati an tameeloo mailan 'azeemaa

அல்லாஹ்வோ, நீங்கள் பாவத்திலிருந்து மீளுவதையே விரும்புகின்றான். (எனினும்) முற்றிலும் (சரீர) இச்சைகளை பின்பற்றி நடப்பவர்களோ (நேரான வழியிலிருந்து) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (பாவத்தில் ஆழ்ந்து) விடுவதையே விரும்புகின்றனர்.

Tafseer

يُرِيدُ
நாடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يُخَفِّفَ
இலகுவாக்க
عَنكُمْۚ
உங்களுக்கு
وَخُلِقَ
இன்னும் படைக்கப்பட்டுள்ளான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
ضَعِيفًا
பலவீனனாக

Yureedul laahu ai yukhaffifa 'ankum; wa khuliqal insaanu da'eefaa

அன்றி, அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَأْكُلُوٓا۟
புசிக்காதீர்கள்
أَمْوَٰلَكُم
உங்கள் செல்வங்களை
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
بِٱلْبَٰطِلِ
தவறான முறையில்
إِلَّآ
தவிர
أَن تَكُونَ
இருப்பது
تِجَٰرَةً
வர்த்தகமாக
عَن تَرَاضٍ
பரஸ்பர விருப்பத்துடன்
مِّنكُمْۚ
உங்களின்
وَلَا تَقْتُلُوٓا۟
இன்னும் கொல்லாதீர்கள்
أَنفُسَكُمْۚ
உங்கள் உயிர்களை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
بِكُمْ
உங்கள் மீது
رَحِيمًا
பெரும் கருணையாளனாக

Yaaa aiyuhal lazeena aamanoo laa taakulooo amwaalakum bainakum bilbaatili 'illaaa an takoona tijaaratan 'an taraadim minkum; wa laa taqtulooo anfusakum; innal laaha kaana bikum Raheemaa

நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். அன்றி (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான்.

Tafseer

وَمَن
எவர்
يَفْعَلْ
செய்வாரோ
ذَٰلِكَ
அதை
عُدْوَٰنًا
வரம்பை மீறி
وَظُلْمًا
இன்னும் அநியாயமாக
فَسَوْفَ نُصْلِيهِ
எரிப்போம்/அவரை
نَارًاۚ
நரகத்தில்
وَكَانَ
இருக்கிறது
ذَٰلِكَ
அது
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
يَسِيرًا
சுலபமாக

Wa mai yaf'al zaalika 'udwaananw wa zulman fasawfa nusleehi Naaraa; wa kaana zaalika 'alal laahi yaseeraa

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதே!

Tafseer