Skip to main content

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لَا تَغْلُوا۟
அளவு கடக்காதீர்
فِى دِينِكُمْ
உங்கள் மார்க்கத்தில்
وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
إِلَّا ٱلْحَقَّۚ
உண்மையைத் தவிர
إِنَّمَا
எல்லாம்
ٱلْمَسِيحُ
மஸீஹ்
عِيسَى
ஈஸா
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
رَسُولُ
தூதர்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَكَلِمَتُهُۥٓ
இன்னும் அவனுடைய வார்த்தை
أَلْقَىٰهَآ
சேர்ப்பித்தான்/அதை
إِلَىٰ مَرْيَمَ
மர்யமின் பக்கம்
وَرُوحٌ
இன்னும் உயிர்
مِّنْهُۖ
அவன் புறத்திலிருந்து
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرُسُلِهِۦۖ
இன்னும் அவனுடைய தூதர்களை
وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
ثَلَٰثَةٌۚ
மூவர்
ٱنتَهُوا۟
விலகுங்கள்
خَيْرًا
மிக நன்று
لَّكُمْۚ
உங்களுக்கு
إِنَّمَا ٱللَّهُ
அல்லாஹ் எல்லாம்
إِلَٰهٌ
ஒரு கடவுள்
وَٰحِدٌۖ
ஒரே
سُبْحَٰنَهُۥٓ
அவன் மிக பரிசுத்தமானவன்
أَن يَكُونَ
இருப்பதைவிட்டு
لَهُۥ
அவனுக்கு
وَلَدٌۘ
குழந்தை
لَّهُۥ
அவனுக்கே
مَا
எவை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَمَا فِى
இன்னும் எவை/பூமியில்
وَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
وَكِيلًا
பொறுப்பாளனாக

Yaaa Ahlal Kitaabi laa taghloo fee deenikum wa laa taqooloo 'alal laahi illalhaqq; innamal Maseehu 'Eesab-nu-Maryamma Rasoolul laahi wa Kalimatuhooo alqaahaaa ilaa Maryamma wa roohum minhum fa aaminoo billaahi wa Rusulihee wa laa taqooloo salaasah; intahoo khairallakum; innamal laahu Ilaahunw Waahid, Subhaanahooo ani yakoona lahoo walad; lahoo maa fissamaawaati wa maa fil ard; wa kafaa billaahi Wakeelaa

வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அன்றி, அவனுடைய ("குன்" என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கின்றார். அல்லாஹ் (தன்னுடைய) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) "மூவர்" என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரித்தானவைகளே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.)

Tafseer

لَّن يَسْتَنكِفَ
திமிரு கொள்ளமாட்டார்(கள்)
ٱلْمَسِيحُ
ஈஸா # மஸீஹ்
أَن يَكُونَ
இருப்பதைவிட்டு
عَبْدًا
அடிமையாக
لِّلَّهِ
அல்லாஹ்விற்கு
وَلَا
இன்னும் இல்லை
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
ٱلْمُقَرَّبُونَۚ
நெருக்கமானவர்கள்
وَمَن
எவர்(கள்)
يَسْتَنكِفْ
திமிரு கொள்வார்(கள்)
عَنْ
விட்டு
عِبَادَتِهِۦ
அவனைவணங்குவது
وَيَسْتَكْبِرْ
இன்னும் பெருமை கொள்வார்(கள்)
فَسَيَحْشُرُهُمْ
ஒன்று திரட்டுவான் அவர்கள்
إِلَيْهِ
தன் பக்கம்
جَمِيعًا
அனைவரையும்

Lanny yastankifal Maseehu ai yakoona 'abdal lillaahi wa lal malaaa'ikatul muqarraboon; wa mai yastankif 'an ibaadatihee wa yastakbir fasa yahshuruhum ilaihi jamee'aa

ஈஸாவும், சிறப்பு வாய்ந்த மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருதமாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டு வரச் செய்வான்.

Tafseer

فَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
فَيُوَفِّيهِمْ
முழுமையாக நிறைவேற்றுவான்/ அவர்களுக்கு
أُجُورَهُمْ
கூலிகளை/அவர்களுடைய
وَيَزِيدُهُم
இன்னும் அதிகப்படுத்துவான் அவர்களுக்கு
مِّن فَضْلِهِۦۖ
தன் அருளிலிருந்து
وَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ
எவர்கள்
ٱسْتَنكَفُوا۟
திமிரு பிடித்தார்கள்
وَٱسْتَكْبَرُوا۟
இன்னும் பெருமையடித்தார்கள்
فَيُعَذِّبُهُمْ
வேதனை செய்வான்/அவர்களை
عَذَابًا
வேதனையால்
أَلِيمًا
துன்புறுத்தும்
وَلَا يَجِدُونَ
இன்னும் காணமாட்டார்கள்
لَهُم
தங்களுக்கு
مِّن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
وَلِيًّا
பாதுகாவலரை
وَلَا نَصِيرًا
இன்னும் உதவியாளரை

Fa ammal lazeena aamanoo wa 'amilus saalihaati fa yuwaffeehim ujoorahum wa yazeeduhum min fadlihee wa ammal lazeenas tankafoo wastakbaroo fa yu'azzibuhum 'azaaban aleemanw wa laa yajidoona lahum min doonil laahi waliyyanw wa laa naseeraa

ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வையன்றி தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே!
قَدْ
திட்டமாக
جَآءَكُم
வந்துள்ளது உங்களிடம்
بُرْهَٰنٌ
ஓர் அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
وَأَنزَلْنَآ
இன்னும் இறக்கினோம்
إِلَيْكُمْ
உங்களுக்கு
نُورًا
ஓர் ஒளியை
مُّبِينًا
தெளிவானது

yaa aiyuhan naasu qad jaaa'akum burhaanum mir Rabbikum wa anzalnaaa ilaikum Nooram Mubeena

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சி நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டது. தெளிவான ஒளியையே நாம் உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம்.

Tafseer

فَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱعْتَصَمُوا۟
இன்னும் பற்றிப்பிடித்தார்கள்
بِهِۦ
அவனை
فَسَيُدْخِلُهُمْ
நுழைப்பான்/ அவர்களை
فِى رَحْمَةٍ
கருணையில்
مِّنْهُ
தன் புறத்திலிருந்து
وَفَضْلٍ
இன்னும் அருள்
وَيَهْدِيهِمْ
இன்னும் வழிகாட்டுவான்/அவர்களுக்கு
إِلَيْهِ
தன் பக்கம்
صِرَٰطًا
வழியை
مُّسْتَقِيمًا
நேரானது

Fa ammal lazeena aamanoo billaahi wa'tasamoo bihee fasa yudkhiluhum fee rah matim minhu wa fadlinw wa yahdeehim ilaihi Siraatam Mustaqeema

ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவ(னது வழியி)னைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களோ அவர்களை அவன் தன்னுடைய அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகின்றான். அன்றி, தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகின்றான்.

Tafseer

يَسْتَفْتُونَكَ
தீர்ப்பு கேட்கின்றனர்/உம்மிடம்
قُلِ
கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்
يُفْتِيكُمْ
உங்களுக்கு கட்டளையிடுகிறான்
فِى ٱلْكَلَٰلَةِۚ
வாரிசு அற்றவர் பற்றி
إِنِ ٱمْرُؤٌا۟
(ஆண்) மனிதன்
هَلَكَ
இறந்து விட்டான்
لَيْسَ لَهُۥ
இல்லை/அவனுக்கு
وَلَدٌ
சந்ததி
وَلَهُۥٓ
இன்னும் அவனுக்கு
أُخْتٌ
ஒரு சகோதரி
فَلَهَا نِصْفُ
அவளுக்கு/பாதி
مَا تَرَكَۚ
எது/விட்டுச்சென்றான்
وَهُوَ
அவன்
يَرِثُهَآ
வாரிசாக ஆவான்/அவளுக்கு
إِن لَّمْ
இல்லையென்றால்
لَّهَا
அவளுக்கு
وَلَدٌۚ
சந்ததி
فَإِن كَانَتَا
இருந்தால்
ٱثْنَتَيْنِ
இரு பெண்களாக
فَلَهُمَا
அவ்விருவருக்கும்
ٱلثُّلُثَانِ
மூன்றில் இரண்டு
مِمَّا
எதிலிருந்து
تَرَكَۚ
விட்டுச் சென்றான்
وَإِن كَانُوٓا۟
அவர்கள் இருந்தால்
إِخْوَةً
உடன் பிறந்தவர்கள்
رِّجَالًا
ஆண்களாக
وَنِسَآءً
இன்னும் பெண்களாக
فَلِلذَّكَرِ
ஆணுக்கு
مِثْلُ
போன்று
حَظِّ
பங்கு
ٱلْأُنثَيَيْنِۗ
இரு பெண்களின்
يُبَيِّنُ
விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
أَن تَضِلُّوا۟ۗ
நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காக
وَٱللَّهُ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்

Yastaftoonaka qulillaahu yafteekum fil kalaalah; inimru'un halaka laisa lahoo waladunw wa lahoo ukhtun falahaa nisfu maa tarak; wa huwa yarisuhaaa il lam yakkul lahaa walad; fa in kaanatas nataini falahumas sulusaani mimmmaa tarak; wa in kaanooo ikhwatar rijaalanw wa nisaaa'an faliz zakari mislu hazzil unsayayn; yubaiyinullaahu lakum an tadilloo; wallaahu bikulli shai'in Aleem

(நபியே!) "கலாலா" பற்றிய (அதாவது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத பொருளைப் பற்றிய) மார்க்கக் கட்டளையை அவர்கள் உங்களிடம் கேட்கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் பாதி கிடைக்கும். (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்குச் சந்ததி இல்லாமலிருந்(து ஒரே ஒரு சகோதரன் மட்டும் இருந்)தால் அவள் விட்டுச்சென்ற அனைத்தையும் அவன் அடைவான். ஆணின்றி இரு பெண்கள் (மட்டும்) இருந்தால், அவள் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பாகத்தை இவ்விருவரும் அடைவார்கள். அன்றி, ஆணும் பெண்ணும் (ஆகப் பலர்) சகோதரர்களாயிருந்தால், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆணுக்குப் பெண்ணுக்கிருப்பதைப் போல இரண்டு பங்கு உண்டு. (அதாவது பெண்ணுக்கு ஒரு பங்கும் ஆணுக்கு இரு பங்குகளும் கிடைக்கும்.) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவைகளை) அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer