Skip to main content

وَأَخْذِهِمُ
இன்னும் அவர்கள் வாங்குவது
ٱلرِّبَوٰا۟
வட்டியை
وَقَدْ نُهُوا۟
அவர்களுமோ தடுக்கப்பட்டிருக்க
عَنْهُ
அதிலிருந்து
وَأَكْلِهِمْ
இன்னும் அவர்கள் சாப்பிடுவது
أَمْوَٰلَ
செல்வங்களை
ٱلنَّاسِ
மக்களின்
بِٱلْبَٰطِلِۚ
தப்பான வழியில்
وَأَعْتَدْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
مِنْهُمْ
அவர்களில்
عَذَابًا
வேதனையை
أَلِيمًا
துன்புறுத்தக் கூடிய(து)

Wa akhzihimur ribaa wa qad nuhoo 'anhu wa aklihim amwaalan naasi bilbaatil; wa a'tadnaa lilkaafireena minhum 'azaaban aleema

அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம். மறுமையிலோ) அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

لَّٰكِنِ
எனினும்
ٱلرَّٰسِخُونَ
தேர்ச்சி பெற்றவர்கள்
فِى ٱلْعِلْمِ
கல்வியில்
مِنْهُمْ
அவர்களில்
وَٱلْمُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
وَمَآ
இன்னும் எது
أُنزِلَ
இறக்கப்பட்டது
مِن قَبْلِكَۚ
உமக்கு முன்னர்
وَٱلْمُقِيمِينَ
இன்னும் நிலை நிறுத்துபவர்கள்
ٱلصَّلَوٰةَۚ
தொழுகையை
وَٱلْمُؤْتُونَ
இன்னும் கொடுப்பவர்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَٱلْمُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் மறுமை நாளை
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
سَنُؤْتِيهِمْ
கொடுப்போம்/இவர்களுக்கு
أَجْرًا عَظِيمًا
கூலியை/மகத்தானது

Laakinir raasikhoona fil'ilmi minhum walmu'minoona yu'minoona bimaaa unzila ilaika wa maaa unzila min qablika walmuqeemeenas Salaata walmu'toonaz Zakaata walmu 'minoona billaahi wal yawmil Aakhir; ulaaa'ika sanu'teehim ajran 'azeemaa

எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உங்கள்மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உங்களுக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவார்கள். இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
كَمَآ
போன்றே
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَىٰ نُوحٍ
நூஹுக்கு
وَٱلنَّبِيِّۦنَ
இன்னும் நபிமார்களுக்கு
مِنۢ بَعْدِهِۦۚ
அவருக்குப் பின்னர்
وَأَوْحَيْنَآ
இன்னும் வஹீ அறிவித்தோம்
إِلَىٰٓ إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுக்கு
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
وَعِيسَىٰ
இன்னும் ஈஸா
وَأَيُّوبَ
இன்னும் அய்யூப்
وَيُونُسَ
இன்னும் யூனுஸ்
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூன்
وَسُلَيْمَٰنَۚ
இன்னும் ஸுலைமான்
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
دَاوُۥدَ
தாவூதுக்கு
زَبُورًا
ஸபூரை

innaaa awhainaaa ilaika kamaaa awhainaaa ilaa Noohinw wan nabiyyeena mim ba'dih; wa awhainaaa ilaaa ibraaheema wa Ismaaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa 'Eesaa wa Ayyooba wa Yoonusa wa haaroona wa Sulaimaan; wa aatainaa Daawooda Zabooraa

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே உங்களுக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம். அன்றி இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹீ அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்.

Tafseer

وَرُسُلًا
இன்னும் தூதர்களை
قَدْ
திட்டமாக
قَصَصْنَٰهُمْ عَلَيْكَ
விவரித்தோம்/அவர்களை/உமக்கு
مِن قَبْلُ
முன்னர்
وَرُسُلًا
இன்னும் தூதர்களை
لَّمْ نَقْصُصْهُمْ
விவரிக்கவில்லை/அவர்களை
عَلَيْكَۚ
உமக்கு
وَكَلَّمَ ٱللَّهُ
பேசினான்/அல்லாஹ்
مُوسَىٰ
மூஸாவுடன்
تَكْلِيمًا
பேசுதல்

Wa Rusulan qad qasas naahum 'alaika min qablu wa Rusulal lam naqsushum 'alaik; wa kallamallaahu Moosaa takleemaa

(இவர்களைப் போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உங்களுக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹீ அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

Tafseer

رُّسُلًا مُّبَشِّرِينَ
தூதர்களை/நற்செய்தி கூறுபவர்களாக
وَمُنذِرِينَ
இன்னும் எச்சரிப்பவர்களாக
لِئَلَّا يَكُونَ
இல்லாதிருக்க
لِلنَّاسِ
மக்களுக்கு
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
حُجَّةٌۢ
ஓர் ஆதாரம்
بَعْدَ
பின்னர்
ٱلرُّسُلِۚ
தூதர்கள்
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
عَزِيزًا
மிகைத்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Rusulam mubashshireena wa munzireena li'allaa yakoona linnaasi 'alal laahi hujjatum ba'dar Rusul; wa kaanallaahu 'Azeezan Hakeema

அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு யாதொரு வழியும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சுவர்க்கத்தைக் கொண்டு) நற்செய்தி கூறுகின்றவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّٰكِنِ ٱللَّهُ
என்றாலும்/அல்லாஹ்
يَشْهَدُ
சாட்சி கூறுகிறான்
بِمَآ أَنزَلَ
இறக்கியதற்கு
إِلَيْكَۖ
உமக்கு
أَنزَلَهُۥ
இறக்கினான்/அதை
بِعِلْمِهِۦۖ
அவனுடைய அறிவைக் கொண்டே
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
يَشْهَدُونَۚ
சாட்சி கூறுகின்றனர்
وَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
شَهِيدًا
சாட்சியாளனாக

Laakinil laahu yashhadu bimaaa anzala ilaika anzalahoo bi'ilmihee wal malaaa'ikatu yashhadoon; wa kafaa billaahi Shaheeda

(நபியே! இவர்கள் உங்களை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உங்கள்மீது அருளப்பட்ட வேதம் உண்மையான தென்றும் (உங்களுடைய மேலான தகுதியை) அறிந்தே அதனை (உங்கள்மீது அவன்) இறக்கி வைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகின்றான். (அவ்வாறே) மலக்குகளும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்கள்
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
قَدْ ضَلُّوا۟
திட்டமாக வழி கெட்டனர்
ضَلَٰلًۢا
வழிகேடாக
بَعِيدًا
தூரமான(து)

Innal lazeena kafaroo wa saddoo 'an sabeelil laahi qad dalloo dalaalam ba'eedaa

(நபியே! உங்களை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து தடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்றுவிட்டனர்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَظَلَمُوا۟
இன்னும் அநியாயம் செய்தார்கள்
لَمْ يَكُنِ
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيَغْفِرَ
மன்னிப்பவனாக
لَهُمْ
அவர்களை
وَلَا
இன்னும் இல்லை
لِيَهْدِيَهُمْ
அவர்களுக்கு வழிகாட்டுபவனாக
طَرِيقًا
ஒரு வழியை

Innal lazeenakafaroo wa zalamoo lam yakkunillaahu liyaghfira lahum wa laa liyahdiyahum tareeqaa

(நபியே!) எவர்கள் (உங்களை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.

Tafseer

إِلَّا طَرِيقَ
தவிர/வழி
جَهَنَّمَ
நரகத்தின்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَآ
அதில்
أَبَدًاۚ
என்றென்றும்
وَكَانَ ذَٰلِكَ
ஆகிவிட்டது/இது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
يَسِيرًا
சுலபமாக

Illaa tareeqa jahannamma khaalideena feehaa abadaa; wa kaana zaalika 'alal laahi yaseeraa

நரகத்தின் வழியைத்தவிர வேறு நேரான வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான். அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ் வுக்கு மிகச் சுலபமே!

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
قَدْ
வந்து விட்டார்
جَآءَكُمُ
உங்களிடம்
ٱلرَّسُولُ
இத்தூதர்
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
مِن
இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
خَيْرًا
மிக்க நன்று
لَّكُمْۚ
உங்களுக்கு
وَإِن تَكْفُرُوا۟
நீங்கள் நிராகரித்தால்
فَإِنَّ
நிச்சயமாக
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
مَا فِى
எவை/வானங்களில்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமி
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Yaaa aiyuhan naasu qad jaaa'akumur Rasoolu bilhaqqi mir Rabbikum fa ammminoo khairal lakum; wa in takfuroo fainnna lillaahi maa fis samaawaati wal ard; wa kaanal laahu 'Aleemann hakeemaa

மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்து விட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer