Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௭

۞ اِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ ۗوَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ ِمّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ۗوَيَوْمَ يُنَادِيْهِمْ اَيْنَ شُرَكَاۤءِيْۙ قَالُوْٓا اٰذَنّٰكَ مَا مِنَّا مِنْ شَهِيْدٍ ۚ   ( فصلت: ٤٧ )

To Him
إِلَيْهِ
அவன் பக்கமே
is referred
يُرَدُّ
திருப்பப்படுகிறது
(the) knowledge
عِلْمُ
அறிவு
(of) the Hour
ٱلسَّاعَةِۚ
மறுமையைப் பற்றிய
And not comes out
وَمَا تَخْرُجُ
வெளிவருவதில்லை
any fruits
مِن ثَمَرَٰتٍ
பழங்களில் எதுவும்
from their coverings
مِّنْ أَكْمَامِهَا
அவற்றின் பாலைகளில் இருந்து
and not bears
وَمَا تَحْمِلُ
கர்ப்பமடைவதுமில்லை
any female
مِنْ أُنثَىٰ
பெண்களில் எவரும்
and not gives birth
وَلَا تَضَعُ
இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை
except with His knowledge
إِلَّا بِعِلْمِهِۦۚ
அவனது ஞானமில்லாமல்
And (the) Day
وَيَوْمَ
நாளில்
He will call them
يُنَادِيهِمْ
அவர்களை அவன் அழைக்கின்ற
"Where (are)
أَيْنَ
எங்கே
My partners
شُرَكَآءِى
எனது இணைகள்
They will say
قَالُوٓا۟
அவர்கள்கூறுவார்கள்
"We announce (to) You
ءَاذَنَّٰكَ
நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்
not among us
مَا مِنَّا
எங்களில் இல்லை
any witness"
مِن شَهِيدٍ
சாட்சி சொல்பவர் யாரும்

Ilaihi yuraddu 'ilmus Saaa'ah; wa maa takhruju min samaraatim min akmaamihaa wa maa tahmilu min unsaa wa laa tada'u illaa bi'ilmih; wa Yawma yunaadeehim aina shurakaaa'ee qaalooo aazannaaka maa minnaa min shaheed (Fuṣṣilat 41:47)

Abdul Hameed Baqavi:

(நபியே! "விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?" என அவர்கள் அடிக்கடி உங்களிடம் கேட்கின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் யாதொரு கனியும் அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை. யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கு இணையாக்கியவை(களாகிய பொய்யான தெய்வங்)கள் எங்கே?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "எங்களில் அவ்வாறு கூறுபவர்கள் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று (எங்கள் இறைவனே!) உனக்கு அறிவித்து விடுகின்றோம்" என்று கூறுவார்கள்.

English Sahih:

To Him [alone] is attributed knowledge of the Hour. And fruits emerge not from their coverings nor does a female conceive or give birth except with His knowledge. And the Day He will call to them, "Where are My 'partners'?" they will say, "We announce to You that there is [no longer] among us any witness [to that]." ([41] Fussilat : 47)

1 Jan Trust Foundation

(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.