Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௩

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَآ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْۗ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِۗ ذٰلِكُمْ فِسْقٌۗ اَلْيَوْمَ يَىِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِۗ اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًاۗ فَمَنِ اضْطُرَّ فِيْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ  ( المائدة: ٣ )

Are made unlawful
حُرِّمَتْ
விலக்கப்பட்டன
on you
عَلَيْكُمُ
உங்களுக்கு
the dead animals
ٱلْمَيْتَةُ
செத்தது
and the blood
وَٱلدَّمُ
இன்னும் இரத்தம்
and flesh (of) the swine
وَلَحْمُ ٱلْخِنزِيرِ
இன்னும் இறைச்சி/பன்றி
and what
وَمَآ
இன்னும் எது
has been dedicated
أُهِلَّ
பெயர் கூறப்பட்டது
to other than
لِغَيْرِ
அல்லாதவற்றிற்காக
Allah
ٱللَّهِ
அல்லாஹ்
[on it]
بِهِۦ
அதை
and that which is strangled (to death)
وَٱلْمُنْخَنِقَةُ
இன்னும் கழுத்து நெருக்கிச் செத்தது
and that which is hit fatally
وَٱلْمَوْقُوذَةُ
இன்னும் அடிப்பட்டுச் செத்தது
and that which has a fatal fall
وَٱلْمُتَرَدِّيَةُ
இன்னும் விழுந்து செத்தது
and that which is gored by horns
وَٱلنَّطِيحَةُ
இன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது
and that which ate (it)
وَمَآ أَكَلَ
இன்னும் எதை/தின்றது
the wild animal
ٱلسَّبُعُ
மிருகங்கள்
except
إِلَّا
தவிர
what you slaughtered
مَا ذَكَّيْتُمْ
எதை/அறுத்தீர்கள்
and what is sacrificed
وَمَا ذُبِحَ
இன்னும் எது/அறுக்கப்பட்டது
on the stone altars
عَلَى ٱلنُّصُبِ
மீது/நடப்பட்டவை, சிலைகள்
and that you seek division
وَأَن تَسْتَقْسِمُوا۟
இன்னும் பாகம் பிரித்துக் கொள்வது
by divining arrows -
بِٱلْأَزْلَٰمِۚ
அம்புகளைக்கொண்டு
that
ذَٰلِكُمْ
இவை
(is) grave disobedience This day
فِسْقٌۗ ٱلْيَوْمَ
பாவம்/இன்று
(have) despaired
يَئِسَ
நம்பிக்கை இழந்தனர்
those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
of
مِن
விட்டு
your religion
دِينِكُمْ
உங்கள் மார்க்கம்
so (do) not
فَلَا
ஆகவே பயப்படாதீர்கள்
fear them
تَخْشَوْهُمْ
ஆகவே பயப்படாதீர்கள் அவர்களை
but fear Me
وَٱخْشَوْنِۚ
என்னை பயப்படுங்கள்
This day
ٱلْيَوْمَ
இன்று
I have perfected
أَكْمَلْتُ
முழுமையாக்கினேன்
for you
لَكُمْ
உங்களுக்கு
your religion
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
and I have completed
وَأَتْمَمْتُ
இன்னும் முழுமையாக்கினேன்
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
My Favor
نِعْمَتِى
என் அருளை
and I have approved
وَرَضِيتُ
இன்னும் திருப்தியடைந்தேன்
for you
لَكُمُ
உங்களுக்கு
[the] Islam
ٱلْإِسْلَٰمَ
இஸ்லாமை
(as) a religion
دِينًاۚ
மார்க்கமாக
But whoever
فَمَنِ
ஆகவே எவர்
(is) forced
ٱضْطُرَّ
நிர்ப்பந்திக்கப்பட்டார்
by hunger
فِى مَخْمَصَةٍ
கடுமையான பசியில்
(and) not inclining
غَيْرَ مُتَجَانِفٍ
சாயாதவராக
to sin
لِّإِثْمٍۙ
பாவத்தின் பக்கம்
then indeed
فَإِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
Most Merciful
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Hurrimat 'alaikumul maitatu waddamu wa lahmul khinzeeri wa maaa uhilla lighiril laahi bihee walmun khani qatu wal mawqoozatu wal mutarad diyatu wanna teehatu wa maaa akalas sabu'u illaa maa zakkaitum wa maa zubiha 'alan nusubi wa an tastaqsimoo bil azlaam; zaalikum fisq; alyawma ya'isal lazeena kafaroo min deenikum falaa takhshawhum wakh shawn; alyawma akmaltu lakum deenakum wa atmamtu 'alaikum ni'matee wa radeetu lakumul Islaama deenaa; famanidturra fee makhmasatin ghaira mutajaanifil li ismin fa innallaaha Ghafoorur Raheem (al-Māʾidah 5:3)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவைகளும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப்பல்லும், வீர நகமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவைகளில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவைகளைத் தவிர. (அவ்வாறு அறுக்கப் பட்டவைகளைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வைகளுக்காக அறுக்கப் பட்டவைகளும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன.) இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்படவேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவைகளைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான்.

English Sahih:

Prohibited to you are dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allah, and [those animals] killed by strangling or by a violent blow or by a head-long fall or by the goring of horns, and those from which a wild animal has eaten, except what you [are able to] slaughter [before its death], and those which are sacrificed on stone altars, and [prohibited is] that you seek decision through divining arrows. That is grave disobedience. This day those who disbelieve have despaired of [defeating] your religion; so fear them not, but fear Me. This day I have perfected for you your religion and completed My favor upon you and have approved for you IsLam as religion. But whoever is forced by severe hunger with no inclination to sin – then indeed, Allah is Forgiving and Merciful. ([5] Al-Ma'idah : 3)

1 Jan Trust Foundation

(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.