Skip to main content

ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௧௧

وَاِنْ فَاتَكُمْ شَيْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِيْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَآ اَنْفَقُوْاۗ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ   ( الممتحنة: ١١ )

And if have gone from you
وَإِن فَاتَكُمْ
தப்பிச் சென்று விட்டால்
any
شَىْءٌ
யாராவது
of your wives
مِّنْ أَزْوَٰجِكُمْ
உங்கள் மனைவிமார்களில்
to the disbelievers
إِلَى ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்களிடம்
then your turn comes
فَعَاقَبْتُمْ
நீங்கள் தண்டித்தால்
then give
فَـَٔاتُوا۟
கொடுத்து விடுங்கள்
(to) those who
ٱلَّذِينَ
எவர்கள்
have gone
ذَهَبَتْ
சென்றுவிட்டார்களோ
their wives
أَزْوَٰجُهُم
அவர்களுடைய மனைவிமார்கள்
(the) like
مِّثْلَ
போன்று
(of) what they had spent
مَآ أَنفَقُوا۟ۚ
அவர்கள் செலவு செய்ததை
And fear
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
(in) Whom
ٱلَّذِىٓ
எவன்
you
أَنتُم
நீங்கள்
[in Him]
بِهِۦ
அவனை
(are) believers
مُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்

Wa in faatakum shai'um min azwaajikum ilal kuffaari fa'aaqabtum fa aatul lazeena zahabat azwaajuhum misla maaa anfaqoo; wattaqul laahal lazeee antum bihee mu'minoon (al-Mumtaḥanah 60:11)

Abdul Hameed Baqavi:

உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கை கொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்றுவிட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்.

English Sahih:

And if you have lost any of your wives to the disbelievers and you subsequently obtain [something], then give those whose wives have gone the equivalent of what they had spent. And fear Allah, in whom you are believers. ([60] Al-Mumtahanah : 11)

1 Jan Trust Foundation

மேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள்; அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.