அந்த சிகரங்களில் உள்ளவர்கள் அவர்களின் (முக) அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக்குள்ளானவர்கள் என தாங்கள் அறிந்த சில மனிதர்களை நோக்கி) "நீங்கள் (உலகத்தில் சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவைகளும், நீங்கள் எவைகளைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவைகளும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!" என்றும்,
English Sahih:
And the companions of the Elevations will call to men [within Hell] whom they recognize by their mark, saying, "Of no avail to you was your gathering and [the fact] that you were arrogant." ([7] Al-A'raf : 48)
1 Jan Trust Foundation
சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்| “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சிகரவாசிகள் சில மனிதர்களை அழைப்பார்கள். (சிகரவாசிகள்) அவர்களை அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். “உங்கள் சேமிப்பு(ம் உங்கள் கூட்டமு)ம், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களுக்குப் பலனளிக்கவில்லை!” என்று கூறுவார்கள்.