Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௯

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّآ اِلَّآ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلُۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ  ( المائدة: ٥٩ )

Say
قُلْ
கூறுவீராக
"O People (of) the Book!
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
Do you resent
هَلْ تَنقِمُونَ
நீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?)
[of] us
مِنَّآ
எங்களை
except
إِلَّآ
தவிர
that we believe
أَنْ ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and what has been revealed
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
to us
إِلَيْنَا
எங்களுக்கு
and what was revealed
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
from before
مِن قَبْلُ
முன்னர்
and that
وَأَنَّ
நிச்சயமாக அதிகமானவர்கள்
most of you
أَكْثَرَكُمْ
நிச்சயமாக அதிகமானவர்கள் உங்களில்
(are) defiantly disobedient"
فَٰسِقُونَ
பாவிகள்

Qul yaaa Ahlal Kitaabi hal tanqimoona minnaaa illaaa an aamannaa billaahi wa maaa unzila ilainaa wa maa unzila min qablu wa annna aksarakum faasiqoon (al-Māʾidah 5:59)

Abdul Hameed Baqavi:

"வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீங்கள் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றீர்கள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)" என்று கூறுங்கள்.

English Sahih:

Say, "O People of the Scripture, do you resent us except [for the fact] that we have believed in Allah and what was revealed to us and what was revealed before and because most of you are defiantly disobedient?" ([5] Al-Ma'idah : 59)

1 Jan Trust Foundation

“வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.