Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௩

مُهْطِعِيْنَ مُقْنِعِيْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ ۚوَاَفْـِٕدَتُهُمْ هَوَاۤءٌ ۗ   ( ابراهيم: ٤٣ )

Racing ahead
مُهْطِعِينَ
விரைந்தவர்களாக
raised up
مُقْنِعِى
உயர்த்தியவர்களாக
their heads
رُءُوسِهِمْ
தங்கள் தலைகளை
not returning
لَا يَرْتَدُّ
திரும்பாது
towards them
إِلَيْهِمْ
அவர்களிடம்
their gaze
طَرْفُهُمْۖ
அவர்களின் பார்வை
and their hearts
وَأَفْـِٔدَتُهُمْ
அவர்களுடைய உள்ளங்கள்
(are) empty
هَوَآءٌ
வெற்றிடமாக

Muhti'eena muqni'ee ru'oosihim laa yartaddu ilaihim tarfuhum wa af'idatuhum hawaaa' (ʾIbrāhīm 14:43)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்.

English Sahih:

Racing ahead, their heads raised up, their glance does not come back to them, and their hearts are void. ([14] Ibrahim : 43)

1 Jan Trust Foundation

(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.