Skip to main content
bismillah

الٓرۚ
அலிஃப்; லாம்; றா.
كِتَٰبٌ
ஒரு வேதம்
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
إِلَيْكَ
உம்மீது
لِتُخْرِجَ
நீர் வெளியேற்றுவதற்காக
ٱلنَّاسَ
மக்களை
مِنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
إِلَى ٱلنُّورِ
பக்கம்/ஒளியின்
بِإِذْنِ
அனுமதி கொண்டு
رَبِّهِمْ
அவர்களுடைய இறைவனின்
إِلَىٰ صِرَٰطِ
பக்கம்/பாதையின்
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْحَمِيدِ
மகா புகழாளன்

Alif-Laaam-Raa; Kitaabun anzalnaahu ilaika litukhrijan-naasa minaz zulumaati ilan noori bi-izni Rabbihim ilaa siraatil 'Azeezil Hameed

அலிஃப்; லாம்; றா. (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உங்கள்மீது இறக்கியிருக்கின்றோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீங்கள் கொண்டு வாருங்கள்! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும்.

Tafseer

ٱللَّهِ
அல்லாஹ்
ٱلَّذِى
எத்தகையவன்
لَهُۥ
அவனுக்கே
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
பூமியில் உள்ளவை
وَوَيْلٌ
கேடு உண்டாகுக!
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
مِنْ عَذَابٍ
வேதனையின்
شَدِيدٍ
கடினமானது

Allaahil lazee lahoo maa fis samaawaati wa maa fill ard; wa wailul lilkaafireena min 'azaabin shadeed

அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்த மானவையே! ஆகவே, (இதனை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெருங்கேடுதான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَسْتَحِبُّونَ
விரும்புவார்கள்
ٱلْحَيَوٰةَ
வாழ்வை
ٱلدُّنْيَا
உலகம்
عَلَى ٱلْءَاخِرَةِ
மறுமையை விட
وَيَصُدُّونَ
இன்னும் தடுப்பார்கள்
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَيَبْغُونَهَا
இன்னும் தேடுகின்றனர்/அதில்
عِوَجًاۚ أُو۟لَٰٓئِكَ
கோணலை/இவர்கள்
فِى ضَلَٰلٍۭ
வழிகேட்டில்
بَعِيدٍ
தூரமானது

Allazeena yastahibboo nal hayaatad dunyaa 'alal aakhirati wa yasuddoona 'ansabeelil laahi wa yabghoonahaa 'iwajaa; ulaaa 'ika fee dalaalim ba'eed

இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாத துடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டு பண்ணுகின்றனர். இத்தகையவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
مِن رَّسُولٍ
எந்த ஒரு தூதரை
إِلَّا بِلِسَانِ
தவிர/மொழியைக் கொண்டே
قَوْمِهِۦ
அவருடைய மக்களின்
لِيُبَيِّنَ
அவர் தெளிவுபடுத்துவதற்காக
لَهُمْۖ
அவர்களுக்கு
فَيُضِلُّ
ஆகவேவழிகெடுக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَن يَشَآءُ
எவரை/நாடுவான்
وَيَهْدِى
இன்னும் நேர்வழி செலுத்துகிறான்
مَن يَشَآءُۚ
எவரை/நாடுவான்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Wa maaa arsalnaa mir Rasoolin illaa bilisaani qawmihee liyubaiyina lahum faiudillul laahu mai yashaaa'u wa yahde mai yashaaa'; wa Huwal 'Azeezul Hakeem

(நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்தபோதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَقَدْ أَرْسَلْنَا
திட்டமாக அனுப்பினோம்
مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ
மூஸாவை/நம் அத்தாட்சிகளைக் கொண்டு
أَنْ أَخْرِجْ
வெளியேற்று
قَوْمَكَ
உம் சமுதாயத்தை
مِنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
إِلَى ٱلنُّورِ
ஒளியின் பக்கம்
وَذَكِّرْهُم
இன்னும் ஞாபகமூட்டு அவர்களுக்கு
بِأَيَّىٰمِ
அருட்கொடைகளை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
إِنَّ فِى
நிச்சயமாக/இதில்
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
لِّكُلِّ
எல்லோருக்கும்
صَبَّارٍ
மிக பொறுமையாளர்
شَكُورٍ
மிக நன்றியறிபவர்

Wa laqad arsalnaa Moosaa bi Aayaatinaa an akhrij qawmaka minaz zulumaati ilan noori wa zak kirhum bi ayyaamil laah; inna fee zaalika la aayaatil likulli sabbaarin shakoor

நிச்சயமாக நாம் மூஸாவை நம்முடைய பல அத்தாட்சி களுடன் அனுப்பி வைத்து "நீங்கள் உங்கள் மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்" என்று அவருக்குக் கட்டளையிட்டோம். (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

Tafseer

وَإِذْ قَالَ
கூறிய சமயம்
مُوسَىٰ
மூஸா
لِقَوْمِهِ
தன் சமுதாயத்திற்கு
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَةَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِذْ
போது
أَنجَىٰكُم
உங்களை காப்பாற்றினான்
مِّنْ
இருந்து
ءَالِ
கூட்டம்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
يَسُومُونَكُمْ
சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு
سُوٓءَ ٱلْعَذَابِ
கடினமான வேதனையால்
وَيُذَبِّحُونَ
இன்னும் அறுத்தார்கள்
أَبْنَآءَكُمْ
ஆண் பிள்ளைகளை உங்கள்
وَيَسْتَحْيُونَ
இன்னும் வாழவிட்டார்கள்
نِسَآءَكُمْۚ
பெண்(பிள்ளை)களை உங்கள்
وَفِى ذَٰلِكُم
இன்னும் இதில்
بَلَآءٌ
ஒரு சோதனை
مِّن
இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
عَظِيمٌ
மகத்தானது

Wa iz qaala Moosaa liqawmihiz kuroo ni'matal laahi 'alaikum iz anjaakum min Aali Fir'awna yasoomoo nakum sooo'al 'azaabi wa yuzabbihoona abnaaa'akum wa yastahyoona nisaaa'akum; wa fee zaalikum balaaa'um mir Rabbikum 'azeem

மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் "அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண்பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழவிட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது" (என்று கூறினார்.)

Tafseer

وَإِذْ تَأَذَّنَ
இன்னும் அறிவித்த சமயம்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
لَئِن شَكَرْتُمْ
நீங்கள்நன்றி செலுத்தினால்
لَأَزِيدَنَّكُمْۖ
அதிகப்படுத்துவேன்/ உங்களுக்கு
وَلَئِن كَفَرْتُمْ
நீங்கள் நிராகரித்தால்
إِنَّ
நிச்சயமாக
عَذَابِى
என் வேதனை
لَشَدِيدٌ
கடுமையானதுதான்

Wa iz ta azzana Rabbukum la'in shakartum la azeedannakum wa la'in kafartum inn'azaabee lashadeed

அன்றி, உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, "இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்.

Tafseer

وَقَالَ مُوسَىٰٓ
கூறினார்/மூஸா
إِن تَكْفُرُوٓا۟
நீங்கள் நிராகரித்தால்
أَنتُمْ وَمَن
நீங்கள்/இன்னும் எவர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
جَمِيعًا
அனைவரும்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَغَنِىٌّ
நிறைவானவன்
حَمِيدٌ
மகா புகழாளன்

Wa qaala Moosaaa in takfurooo antum wa man fil ardi jamee'an fa innal laaha la Ghaniyyun Hameed

பின்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) "நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனாகவும் இருக்கிறான்" என்றும் கூறினார்.

Tafseer

أَلَمْ يَأْتِكُمْ
உங்களுக்கு வரவில்லையா?
نَبَؤُا۟
சரித்திரம்
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
قَوْمِ
மக்கள்
نُوحٍ
நூஹூடைய
وَعَادٍ
இன்னும் ஆது
وَثَمُودَۛ
ஸமூது
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
مِنۢ بَعْدِهِمْۛ
அவர்களுக்குப் பின்னர்
لَا يَعْلَمُهُمْ
அறியமாட்டார்/அவர்களை
إِلَّا
தவிர
ٱللَّهُۚ
அல்லாஹ்
جَآءَتْهُمْ
வந்தா(ர்க)ள்/அவர்களிடம்
رُسُلُهُم
தூதர்கள்/ அவர்களுடைய
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான சான்றுகளைக் கொண்டு
فَرَدُّوٓا۟
திருப்பினர்
أَيْدِيَهُمْ
கைகளை/தங்கள்
فِىٓ أَفْوَٰهِهِمْ
வாய்களின் பக்கமே/தங்கள்
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كَفَرْنَا
நிராகரித்தோம்
بِمَآ
எதைக் கொண்டு
أُرْسِلْتُم
நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ
بِهِۦ
அதைக் கொண்டு
وَإِنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்
مِّمَّا تَدْعُونَنَآ
எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை
إِلَيْهِ
அதன் பக்கம்
مُرِيبٍ
ஆழமான சந்தேகம்

Alam yaatikum naba'ul lazeena min qablikum qawmi Noohinw wa 'Aadinw wa Samood, wallazeena mim ba'dihim; laa ya'lamuhum illallaah; jaaa'at hum Rusuluhum bilbaiyinaati faraddooo aydiyahum feee afwaahihim wa qaalooo innaa kafarnaa bimaaa ursiltum bihee wa innaa lafee shakkim mimmaa tad'oonanaaa ilaihi mureeb

உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது போன்ற மக்களுடைய சரித்திரமும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரமும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களின் விபரங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றெவராலும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு "வாருங்கள் வாருங்கள்" என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். அன்றி, நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَتْ
கூறினா(ர்க)ள்
رُسُلُهُمْ
தூதர்கள்/ அவர்களுடைய
أَفِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்திலா?
شَكٌّ
சந்தேகம்
فَاطِرِ
படைப்பாளனாகிய
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
يَدْعُوكُمْ
அழைக்கிறான்/ உங்களை
لِيَغْفِرَ
மன்னிப்பதற்காக
لَكُم
உங்களுக்கு
مِّن ذُنُوبِكُمْ
உங்கள் குற்றங்களை
وَيُؤَخِّرَكُمْ
இன்னும் விட்டு வைப்பதற்கு உங்களை
إِلَىٰٓ أَجَلٍ
வரை/ஒரு காலம்
مُّسَمًّىۚ
குறிக்கப்பட்டது
قَالُوٓا۟
கூறினர்
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
إِلَّا بَشَرٌ
தவிர/மனிதர்களே
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
تُرِيدُونَ
நாடுகிறீர்கள்
أَن تَصُدُّونَا
நீங்கள் தடுக்க/எங்களை
عَمَّا
எவற்றை விட்டு
كَانَ يَعْبُدُ
வணங்கிக் கொண்டிருந்தார்
ءَابَآؤُنَا
மூதாதைகள்/எங்கள்
فَأْتُونَا
ஆகவே வாருங்கள்/நம்மிடம்
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தைக் கொண்டு
مُّبِينٍ
தெளிவானது

Qaalat Rusuluhum afillaahi shakkun faatiris samaawaati wal ardi yad'ookum liyaghfira lakum min zunoobikum wa yu'akhkhirakum ilaaa ajalim musam maa; qaaloo in antum illaa basharum mislunaa tureedoona an tasuddoonaa 'ammaa kaana ya'budu aabaaa'unaa faatoonaa bisul taanim mubeen

அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்களுடைய குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரையில் உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்" என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே அன்றி வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து இப்ராஹீம்
القرآن الكريم:ابراهيم
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Ibrahim
ஸூரா:14
வசனம்:52
Total Words:861
Total Characters:3434
Number of Rukūʿs:7
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:72
Starting from verse:1750