Skip to main content

وَإِن فَاتَكُمْ
தப்பிச் சென்று விட்டால்
شَىْءٌ
யாராவது
مِّنْ أَزْوَٰجِكُمْ
உங்கள் மனைவிமார்களில்
إِلَى ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்களிடம்
فَعَاقَبْتُمْ
நீங்கள் தண்டித்தால்
فَـَٔاتُوا۟
கொடுத்து விடுங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
ذَهَبَتْ
சென்றுவிட்டார்களோ
أَزْوَٰجُهُم
அவர்களுடைய மனைவிமார்கள்
مِّثْلَ
போன்று
مَآ أَنفَقُوا۟ۚ
அவர்கள் செலவு செய்ததை
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்வை
ٱلَّذِىٓ
எவன்
أَنتُم
நீங்கள்
بِهِۦ
அவனை
مُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்

Wa in faatakum shai'um min azwaajikum ilal kuffaari fa'aaqabtum fa aatul lazeena zahabat azwaajuhum misla maaa anfaqoo; wattaqul laahal lazeee antum bihee mu'minoon

உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கை கொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்றுவிட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
إِذَا جَآءَكَ
உம்மிடம் வந்தால்
ٱلْمُؤْمِنَٰتُ
முஃமினான பெண்கள்
يُبَايِعْنَكَ
உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக
عَلَىٰٓ أَن
அவர்கள் இணைவைக்க மாட்டார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
شَيْـًٔا
எதையும்
وَلَا يَسْرِقْنَ
இன்னும் திருட மாட்டார்கள்
وَلَا يَزْنِينَ
இன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள்
وَلَا يَقْتُلْنَ
இன்னும் கொலை செய்ய மாட்டார்கள்
أَوْلَٰدَهُنَّ
தங்கள் குழந்தைகளை
وَلَا يَأْتِينَ
இன்னும் கொண்டுவர மாட்டார்கள்
بِبُهْتَٰنٍ
ஒரு பொய்யை
يَفْتَرِينَهُۥ
அதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர்
بَيْنَ
முன்னர்
أَيْدِيهِنَّ
தங்கள் கைகள்
وَأَرْجُلِهِنَّ
இன்னும் தங்கள் கால்களுக்கு
وَلَا يَعْصِينَكَ
இன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள்
فِى مَعْرُوفٍۙ
நல்ல காரியங்களில்
فَبَايِعْهُنَّ
அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக!
وَٱسْتَغْفِرْ
பாவமன்னிப்புக் கோருவீராக!
لَهُنَّ
அவர்களுக்காக
ٱللَّهَۖ
அல்லாஹ்விடம்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Yaaa ayyuhan nabbiyyu izaa jaaa'akal mu'minaau yubaai naka 'alaaa allaa yushrikna billaahi shai 'anw wa laa yasriqna wa laa yazneena wa laa yaqtulna awlaadahunna wa laa yaateena bibuhtaaniny yaftaree nahoo baina aydeehinna wa arjulihinna wa laa ya'seenaka fee ma'roofin fabaayi'hunna wastaghfir lahunnal laaha innnal laaha ghafoorur raheem

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை" என்றும், "தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை" என்றும், நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், உங்களிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا تَتَوَلَّوْا۟
நீங்கள் நேசிக்காதீர்கள்
قَوْمًا غَضِبَ
மக்களை/கோபித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
قَدْ يَئِسُوا۟
திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள்
مِنَ ٱلْءَاخِرَةِ
மறுமை விஷயத்தில்
كَمَا يَئِسَ
நம்பிக்கை இழந்ததைப் போல்
ٱلْكُفَّارُ
நிராகரிப்பாளர்கள்
مِنْ أَصْحَٰبِ
புதைக்குழிகளில் சென்றவர்கள்

Yaaa ayyuhal lazeena amanoo laa tatawallaw qawman ghadibal laahu 'alaihim qad ya'isoo minal aakhirati kamaa ya'isal kuffaaru min as haabil quboor

நம்பிக்கையாளர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபப்பட்டானோ அவர்களை நீங்கள் நேசிக்காதீர்கள். சமாதிகளில் இருப்பவர்களைப் பற்றி நிராகரிப்பவர்கள் (அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட மாட்டார்கள் என) நம்பிக்கை இழந்தபடியே, மறுமையைப் பற்றி நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

Tafseer