Skip to main content

وَلَا تَمُدَّنَّ
நீர் திருப்பாதீர்
عَيْنَيْكَ
உமது கண்களை
إِلَىٰ مَا
எவற்றின் பக்கம் இன்பமளித்தோம்
بِهِۦٓ
அதன் மூலம்
أَزْوَٰجًا
போன்றவர்கள்
مِّنْهُمْ
இவர்களை
زَهْرَةَ
அலங்காரமாக
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கையின்
لِنَفْتِنَهُمْ
அவர்களை நாம் சோதிப்பதற்காக
فِيهِۚ
அதில்
وَرِزْقُ
அருட்கொடை
رَبِّكَ
உமது இறைவனின்
خَيْرٌ
சிறந்தது
وَأَبْقَىٰ
நிலையானது

Wa laa tamuddanna 'ainaika ilaa ma matta'na biheee azwajam minhum zahratal hayaatid dunya linaftinahum feeh; wa rizqu Rabbika khairunw wa abqaa

(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்து இருப்பவற்றின் பக்கம் நீங்கள் உங்களுடைய பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவைகளை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உங்கள் இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.

Tafseer

وَأْمُرْ
ஏவுவீராக
أَهْلَكَ
உமது குடும்பத்திற்கு
بِٱلصَّلَوٰةِ
தொழுகையை
وَٱصْطَبِرْ
உறுதியாக இருப்பீராக
عَلَيْهَاۖ
அதன் மீது
لَا نَسْـَٔلُكَ
நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை
رِزْقًاۖ
உணவு எதையும்
نَّحْنُ نَرْزُقُكَۗ
நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம்
وَٱلْعَٰقِبَةُ
நல்ல முடிவு
لِلتَّقْوَىٰ
இறையச்சத்திற்குத்தான்

Waamur ahlaka bis Salaati wastabir 'alaihaa la nas'aluka rizqaa; nahnu narzuquk; wal 'aaqibatu littaqwaa

(நபியே!) தொழுது வருமாறு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஏவுங்கள். நீங்களும் அதன் மீது உறுதியாக இருங்கள். (இதற்காக) நாம் உங்களிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை பரிசுத்த தன்மைக்குத்தான்.

Tafseer

وَقَالُوا۟
இவர்கள் கூறினார்கள்
لَوْلَا يَأْتِينَا
நம்மிடம் கொண்டு வரமாட்டாரா
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியை
مِّن رَّبِّهِۦٓۚ
தன் இறைவனிடமிருந்து
أَوَلَمْ تَأْتِهِم
அவர்களிடம் வரவில்லையா
بَيِّنَةُ
தெளிவான சான்று
مَا فِى
வேதங்களில் உள்ள
ٱلْأُولَىٰ
முந்திய

Wa qaaloo law laa yaateenaa bi Aayatim mmir Rabbih; awalam taatihim baiyinatu maa fis suhufil oolaa

("இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான முன்னறிக்கை அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.)

Tafseer

وَلَوْ أَنَّآ
இவர்களை நாம் அழித்திருந்தால்
بِعَذَابٍ
ஒரு வேதனையைக் கொண்டு
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னரே
لَقَالُوا۟
கூறுவார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா
لَوْلَآ أَرْسَلْتَ
நீ அனுப்பி இருக்கக்கூடாதா?
إِلَيْنَا
எங்களுக்கு
رَسُولًا
ஒரு தூதரை
فَنَتَّبِعَ
பின்பற்றி இருப்போமே
ءَايَٰتِكَ
உனது வசனங்களை
مِن قَبْلِ
முன்னர்
أَن نَّذِلَّ
இழிவடைவதற்கும்
وَنَخْزَىٰ
கேவலப்படுவதற்கும்

Wa law annaaa ahlaknaahum bi'azaabim min qablihee laqaaloo Rabbanaa law laaa arsalta ilainaa Rasoolan fanattabi's Aayaatika min qabli an nazilla wa nakhzaa

(நம்முடைய தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன்னுடைய வசனங்களைப் பின்பற்றியிருப்போம்" என்று கூறுவார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
كُلٌّ
ஒவ்வொருவரும்
مُّتَرَبِّصٌ
எதிர்பார்ப்பவர்களே
فَتَرَبَّصُوا۟ۖ
ஆகவே எதிர்பாருங்கள்
فَسَتَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
مَنْ
யார்
أَصْحَٰبُ ٱلصِّرَٰطِ
பாதையுடையவர்கள்
ٱلسَّوِىِّ
நேரான
وَمَنِ
யார்
ٱهْتَدَىٰ
நேர்வழி பெற்றவர்

Qul kullum mutarabbisun fatarabbasoo fasta'lamoona man Ashaabus Siraatis Sawiyyi wa manih tadaa

(நபியே! நீங்கள்) கூறுங்கள்: "ஒவ்வொருவரும் (தங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள். நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்துவிட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.

Tafseer