Skip to main content

إِنَّمَآ أُمِرْتُ
நான் கட்டளையிடப்பட்டதெல்லாம்
أَنْ أَعْبُدَ
வணங்குவதற்குத்தான்
رَبَّ
இறைவனை
هَٰذِهِ ٱلْبَلْدَةِ
இந்த ஊரின்
ٱلَّذِى حَرَّمَهَا
எவன்/புனிதப்படுத்தியுள்ளான்/அதை
وَلَهُۥ
அவனுக்குத்தான்
كُلُّ
எல்லா
شَىْءٍۖ
பொருள்களும்
وَأُمِرْتُ
இன்னும் , நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டும் என்று
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்

Innamaaa umirtu an a'buda Rabba haazihil baldatil lazee harramahaa wa lahoo kullu shai'inw wa umirtu an akoona minal muslimeen

(நபியே! நீங்கள் கூறுங்கள்:) மிக்க கண்ணியமுள்ள இந்நகரத்தின் அதிபதியாகிய இறைவன் ஒருவனையே வணங்குமாறு நான் ஏவப்பட்டு உள்ளேன். எல்லா பொருள்களும் அவனுக்கு உரியனவே! அன்றி, அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்.

Tafseer

وَأَنْ أَتْلُوَا۟
இன்னும் நான் ஓதுவதற்கு
ٱلْقُرْءَانَۖ
குர்ஆனை
فَمَنِ
ஆகவே, யார்
ٱهْتَدَىٰ
நேர்வழி பெறுகிறாரோ
فَإِنَّمَا يَهْتَدِى
நிச்சயமாக அவர் நேர்வழி பெறுவதெல்லாம்
لِنَفْسِهِۦۖ وَمَن
அவரது நன்மைக்காகத்தான்/யார்
ضَلَّ
வழி கெடுகின்றானோ
فَقُلْ
கூறுவீராக!
إِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
مِنَ ٱلْمُنذِرِينَ
எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்

Wa an atluwal Qur-aana famanih tadaa fa innnamaa yahtadee linafsihee wa man dalla faqul innamaaa ana minal munzireen

அன்றி, திருக்குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன். அதனைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகின்றானோ அவன் தன் சுய நன்மைக் காகவே நேரான வழியில் செல்கின்றான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.) "நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)" என்று கூறுங்கள்.

Tafseer

وَقُلِ
கூறுவீராக
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
سَيُرِيكُمْ
உங்களுக்கு காண்பிப்பான்
ءَايَٰتِهِۦ
தனது அத்தாட்சிகளை
فَتَعْرِفُونَهَاۚ
அச்சமயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்/அவற்றை
وَمَا
இல்லை
رَبُّكَ
உமது இறைவன்
بِغَٰفِلٍ
கவனிக்காதவனாக
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை

Wa qulil hamdu lillaahi sa yureekum Aayaatihee fata'ri foonahaa; wa maa Rabbuka bighaaflin 'ammaa ta'maloon

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவன் மறுமை வருவதற்குரிய) தன்னுடைய அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவைகளை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உங்களது இறைவன் பராமுகமாயில்லை என்று கூறுங்கள்.

Tafseer