Skip to main content
bismillah

طسٓۚ
தா, சீன்.
تِلْكَ
இவை
ءَايَٰتُ
வசனங்கள்
ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனுடைய
وَكِتَابٍ
இன்னும் வேதத்தின்
مُّبِينٍ
தெளிவான

Taa-Seeen; tilka Aayaatul Qur-aani wa Kitaabim Mubeen

தா; ஸீன். இவை தெளிவான வேதமாகிய இந்தத் திருக்குர்ஆனின் (சில) வசனங்களாகும்.

Tafseer

هُدًى
நேர்வழியாகவும்
وَبُشْرَىٰ
நற்செய்தியாகவும்
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Hudanw wa bushraa lil mu'mineen

நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُقِيمُونَ
நிலை நிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَيُؤْتُونَ
இன்னும் தருவார்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَهُم
இன்னும் அவர்கள்
بِٱلْءَاخِرَةِ هُمْ
மறுமையை/அவர்கள்
يُوقِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Allazeena yuqeemoonas Salaata wa yu'toonaz Zakaata wa hum bil Aakhirati hum yooqinoon

அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். அன்றி, மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ لَا
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
زَيَّنَّا
நாம் அலங்கரித்து விட்டோம்
لَهُمْ
அவர்களுக்கு
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களை
فَهُمْ
ஆகவே, அவர்கள்
يَعْمَهُونَ
தறிகெட்டு அலைகிறார்கள்

Innal lazeena laa yu'mimoona bil Aakhirati zaiyannaa lahum a'maalahum fahum ya'mahoon

நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் தட்டழிந்து திரிகின்றனர்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
ٱلَّذِينَ
அவர்கள்தான்
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
سُوٓءُ
கெட்ட
ٱلْعَذَابِ
தண்டனை
وَهُمْ
அவர்கள்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
هُمُ
அவர்கள்தான்
ٱلْأَخْسَرُونَ
நஷ்டவாளிகள்

Ulaaa'ikal lazeena lahum sooo'ul 'azaabi wa hum fil Aakhirati humul akhsaroon

இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.

Tafseer

وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
لَتُلَقَّى
மனனம் செய்விக்கப்படுகிறீர்
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
مِن لَّدُنْ
மகா ஞானவானிடமிருந்து
عَلِيمٍ
நன்கறிந்தவன்

Wa innaka latulaqqal Qur-aana mil ladun Hakeemin 'Aleem

(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய, (அனைத்தையும்) நன்கு அறிந்தவனிடம் இருந்தே இந்தக் குர்ஆன் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது.

Tafseer

إِذْ قَالَ
அந்த சமயத்தை நினைவு கூறினார்
مُوسَىٰ
மூசா
لِأَهْلِهِۦٓ
தன்குடும்பத்தினருக்கு
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ءَانَسْتُ
நான் பார்த்தேன்
نَارًا
நெருப்பை
سَـَٔاتِيكُم
உங்களுக்கு கொண்டு வருகிறேன்
مِّنْهَا
அதிலிருந்து
بِخَبَرٍ
ஒரு செய்தியை
أَوْ
அல்லது
ءَاتِيكُم
உங்களுக்கு கொண்டு வருகிறேன்
بِشِهَابٍ
நெருப்பை
قَبَسٍ
எடுக்கப்பட்ட
لَّعَلَّكُمْ تَصْطَلُونَ
நீங்கள் குளிர் காய்வதற்காக

Iz qaala Moosaa li ahliheee inneee aanastu naaran saaateekum minhaa bikhabarin aw aateekum bishihaabin qabasil la'allakum tastaloon

மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்றபொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி "நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம்முடைய வழியைப் பற்றி) யாதொரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகின்றேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியேனும் கொண்டு வருவேன்" என்று கூறி,

Tafseer

فَلَمَّا جَآءَهَا
அவர் அதனிடம் வந்த போது
نُودِىَ
அழைக்கப்பட்டார்
أَنۢ بُورِكَ
பரிசுத்தமானவன்
مَن فِى
நெருப்பில் இருப்பவன்
وَمَنْ حَوْلَهَا
இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும்
وَسُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
ٱللَّهِ
அல்லாஹ்
رَبِّ
இறைவன்
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Falammaa jaaa'ahaa noodiya am boorika man finnnnaari wa man hawlahaa wa Subhaanal laahi Rabbil 'aalameen

அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் "நெருப்பில் இருப்பவர் (மலக்கின்) மீதும் அதன் சமீபமாக இருப்பவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது என்(று சப்தமிட்டுக் கூறப்பெற்)றதுடன், உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்" என்றும் கூறப்பட்டது.

Tafseer

يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
إِنَّهُۥٓ
நிச்சயமாக
أَنَا
நான்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْعَزِيزُ
மிகைத்தவனான
ٱلْحَكِيمُ
மகா ஞானமுடையவனான

Yaa Moosaaa innahooo Anal laahul 'Azeezul Hakeem

(அன்றி) மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன்.

Tafseer

وَأَلْقِ
போடுவீராக!
عَصَاكَۚ
உமது தடியை
فَلَمَّا رَءَاهَا
அவர் அதை பார்த்த போது
تَهْتَزُّ
நெளிவதாக
كَأَنَّهَا
அது போன்று
جَآنٌّ
பாம்பை
وَلَّىٰ
திரும்பினார்
مُدْبِرًا
புறமுதுகிட்டு
وَلَمْ يُعَقِّبْۚ
அவர் திரும்பவே இல்லை
يَٰمُوسَىٰ
மூஸாவே!
لَا تَخَفْ
பயப்படாதீர்
إِنِّى
நிச்சயமாக நான்
لَا يَخَافُ
பயப்பட மாட்டார்கள்
لَدَىَّ
என்னிடம்
ٱلْمُرْسَلُونَ
இறைத்தூதர்கள்

Wa alqi 'asaak; falammmaa ra aahaa tahtazzu ka annahaa jaaannunw wallaa mudbiranw wa lam yu'aqqib; yaa Moosaa laa takhaf innee laa yakhaafu ladaiyal mursaloon

(மூஸாவே!) உங்களுடைய தடியை நீங்கள் எறியுங்கள்" என்றும் (கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதனை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதனைவிட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக என்னிடத்தில் எந்தத் தூதரும் பயப்படமாட்டார்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துந் நம்லி
القرآن الكريم:النمل
ஸஜ்தா (سجدة):26
ஸூரா (latin):An-Naml
ஸூரா:27
வசனம்:93
Total Words:1317
Total Characters:4799
Number of Rukūʿs:7
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:48
Starting from verse:3159