Skip to main content

إِلَّا
தவிர
مَن ظَلَمَ
தவறிழைத்தவரை
ثُمَّ
பிறகு
بَدَّلَ
மாற்றி செய்தார்
حُسْنًۢا
அழகிய செயலை
بَعْدَ
பின்னர்
سُوٓءٍ
தீமைக்கு
فَإِنِّى
ஏனெனில், நிச்சயமாக நான்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Illaa man zalama summa baddala husnam ba'da sooo'in fa innee Ghafoorur Raheem

ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன்னுடைய குற்றத்தை (உணர்ந்து அதனை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றேன்.

Tafseer

وَأَدْخِلْ
நுழைப்பீராக!
يَدَكَ
உமது கரத்தை
فِى جَيْبِكَ
உமது சட்டைப் பையில்
تَخْرُجْ
வெளிவரும்
بَيْضَآءَ
வென்மையாக மின்னும்
مِنْ غَيْرِ
எவ்வித குறையுமின்றி
فِى تِسْعِ
ஒன்பது
ءَايَٰتٍ
அத்தாட்சிகளில்
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுக்கும்
وَقَوْمِهِۦٓۚ
அவனதுமக்களுக்கும்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருக்கிறார்கள்
قَوْمًا
மக்களாக
فَٰسِقِينَ
பாவிகளான

Wa adkhil yadaka fee jaibika takhruj baidaaa'a min ghairisooo'in feetis'i Aayaatin ilaa Fir'awna wa qawmih; innahum kaanoo qawman faasiqeen

(மூஸாவே!) நீங்கள் உங்களுடைய கையை உங்களுடைய சட்டைப்பைக்குள் புகுத்துங்கள். அது யாதொரு மாசற்ற வெண்மையான (பிரகாசத்துடன்) வெளிவரும். (இவ்விரண்டும்) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (இவற்றுடன்) நீங்கள் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் செல்லுங்கள். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கின்றனர்" (என்றும் கூறினோம்.)

Tafseer

فَلَمَّا جَآءَتْهُمْ
ஆக, அது அவர்களிடம் வந்தபோது
ءَايَٰتُنَا
நம் அத்தாட்சிகள்
مُبْصِرَةً
பார்க்கும்படியாக
قَالُوا۟
கூறினர்
هَٰذَا
இது
سِحْرٌ
சூனியம்
مُّبِينٌ
தெளிவான

Falammaa jaaa'at hum Aayaatunaa mubsiratan qaaloo haazaa sihrum mubeen

(மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட) நம்முடைய பார்த்து புரிந்து கொள்ளும் படியான அத்தாட்சிகள் அவர்களிடம் வரவே "இது சந்தேகமற்ற சூனியம்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.

Tafseer

وَجَحَدُوا۟
அவர்கள் மறுத்தனர்
بِهَا
அவற்றை
وَٱسْتَيْقَنَتْهَآ
அவற்றை உறுதியாக நம்பின
أَنفُسُهُمْ
அவர்களுடைய ஆன்மாக்களோ
ظُلْمًا
அநியாயமாக
وَعُلُوًّاۚ
இன்னும் பெருமையாக
فَٱنظُرْ
ஆகவே நீர் கவனிப்பீராக
كَيْفَ كَانَ
எவ்வாறுஆகிவிட்டது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளின்

Wa jahadoo bihaa wastaiqanat haaa anfusuhum zulmanw-wa 'uluwwaa; fanzur kaifa kaana 'aaqibatul mufsideen

(அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவைகளை (உண்மையென) உறுதிகொண்டபோதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவைகளை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் தந்தோம்
دَاوُۥدَ
தாவூதுக்கும்
وَسُلَيْمَٰنَ
சுலைமானுக்கும்
عِلْمًاۖ
அறிவை
وَقَالَا
அவ்விருவரும் கூறினர்
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلَّذِى
எவன்
فَضَّلَنَا
எங்களை மேன்மைப்படுத்தினான்
عَلَىٰ كَثِيرٍ
பலரைப் பார்க்கிலும்
مِّنْ عِبَادِهِ
தனது அடியார்களில்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான

Wa laqad aatainaa Daawooda wa sulaimaana 'ilmaa; wa qaalal hamdu lil laahil lazee faddalanaa 'alaa kaseerim min 'ibaadihil mu'mineen

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன்னுடைய நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்" என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள்.

Tafseer

وَوَرِثَ
வாரிசாக ஆனார்
سُلَيْمَٰنُ
சுலைமான்
دَاوُۥدَۖ
தாவூதுக்கு
وَقَالَ
இன்னும் , கூறினார்
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
عُلِّمْنَا
நாங்கள் கற்பிக்கப்பட்டோம்
مَنطِقَ
பேச்சை
ٱلطَّيْرِ
பறவைகளின்
وَأُوتِينَا
வழங்கப்பட்டோம்
مِن كُلِّ
எல்லாம்
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا لَهُوَ
இதுதான்
ٱلْفَضْلُ
மேன்மையாகும்
ٱلْمُبِينُ
தெளிவான

Wa warisa Sulaimaanu Daawooda wa qaala yaaa aiyuhan naasu 'ullimnaa mantiqat tairi wa ooteenaa min kulli shai'in inna haazaa lahuwal fadlul mubeen

பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) "மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லா பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்" என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார்.

Tafseer

وَحُشِرَ
ஒன்று திரட்டப்பட்டன
لِسُلَيْمَٰنَ
சுலைமானுக்கு
جُنُودُهُۥ
அவருடைய ராணுவங்கள்
مِنَ ٱلْجِنِّ
ஜின்களிலிருந்து
وَٱلْإِنسِ
இன்னும் மனிதர்கள்
وَٱلطَّيْرِ
இன்னும் பறவைகளில்
فَهُمْ
ஆகவே, அவர்கள்
يُوزَعُونَ
நிறுத்தப்படுவார்கள்

Wa hushira Sulaimaana junooduhoo minal jinni wal insi wattairi fahum yooza'oon

ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவைகளிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَآ أَتَوْا۟
அவர்கள் வந்த போது
عَلَىٰ وَادِ
ஒரு பள்ளத்தாக்கில்
ٱلنَّمْلِ
எறும்புகளின்
قَالَتْ
கூறியது
نَمْلَةٌ
ஓர் எறும்பு
يَٰٓأَيُّهَا ٱلنَّمْلُ
எறும்புகளே!
ٱدْخُلُوا۟
நுழைந்து விடுங்கள்!
مَسَٰكِنَكُمْ
உங்கள் பொந்துகளுக்குள்
لَا يَحْطِمَنَّكُمْ
உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம்
سُلَيْمَٰنُ
சுலைமானும்
وَجُنُودُهُۥ
அவருடைய ராணுவங்களும்
وَهُمْ
அவர்களோ
لَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்

hattaaa izaaa ataw 'alaa waadin namli qaalat namlatuny yaaa aiyuhan namlud khuloo masaakinakum laa yahtimannakum Sulaimaanu wa junooduhoo wa hum laa yash'uroon

அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது.

Tafseer

فَتَبَسَّمَ
ஆக, புன்முறுவல் பூத்தார்
ضَاحِكًا
அவர் சிரித்தவராக
مِّن قَوْلِهَا
அதன் பேச்சினால்
وَقَالَ
இன்னும் கூறினார்
رَبِّ
என் இறைவா!
أَوْزِعْنِىٓ
எனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து!
أَنْ أَشْكُرَ
நான் நன்றி செலுத்துவதற்கு
نِعْمَتَكَ
உன் அருளுக்கு
ٱلَّتِىٓ أَنْعَمْتَ
எது/நீ அருள்புரிந்தாய்
عَلَىَّ
என் மீதும்
وَعَلَىٰ وَٰلِدَىَّ
என் பெற்றோர் மீதும்
وَأَنْ أَعْمَلَ
நான் செய்வதற்கும்
صَٰلِحًا
நல்லதை
تَرْضَىٰهُ
நீ மகிழ்ச்சியுறுகின்ற
وَأَدْخِلْنِى
இன்னும் என்னைநுழைத்துவிடு
بِرَحْمَتِكَ
உன் கருணையால்
فِى عِبَادِكَ
உன் அடியார்களில்
ٱلصَّٰلِحِينَ
நல்லவர்கள்

Fatabassama daahikam min qawlihaa wa qaala Rabbi awzi'nee an ashkura ni'mata kal lateee an'amta 'alaiya wa 'alaa waalidaiya wa an a'mala saalihan tardaahu wa adkhilnee birahmatika fee 'ibaadikas saaliheen

அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்.

Tafseer

وَتَفَقَّدَ
அவர் தேடினார்
ٱلطَّيْرَ
பறவைகளில்
فَقَالَ
கூறினார்
مَا لِىَ
எனக்கென்ன
لَآ أَرَى
நான் காணமுடியவில்லை
ٱلْهُدْهُدَ
ஹூத்ஹூதை
أَمْ
அல்லது
كَانَ
அது இருக்கிறதா?
مِنَ ٱلْغَآئِبِينَ
வராதவர்களில்

Wa tafaqqadat taira faqaala maa liya laaa aral hud hud, am kaana minal ghaaa'ibeen

அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?)

Tafseer