Skip to main content

لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًا
நிச்சயமாக நான் அதை தண்டிப்பேன்
شَدِيدًا
கடுமையாக
أَوْ
அல்லது
لَأَا۟ذْبَحَنَّهُۥٓ
அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன்
أَوْ
அல்லது
لَيَأْتِيَنِّى
அது என்னிடம் கொண்டு வரவேண்டும்
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தை
مُّبِينٍ
தெளிவான

La-u'azzibanahoo 'azaaban shadeedan aw la azbahannahoo aw layaatiyannee bisultaanim mubeen

(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதனைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதனை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.

Tafseer

فَمَكَثَ
அவர் தாமதித்தார்
غَيْرَ بَعِيدٍ
சிறிது நேரம்தான்
فَقَالَ
ஆக, அது கூறியது
أَحَطتُ
அறிந்துள்ளேன்
بِمَا لَمْ
எதை/நீ்ர் அறியவில்லை/அதை
وَجِئْتُكَ
உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்
مِن سَبَإٍۭ
‘சபா’ இனத்தாரிடமிருந்து
بِنَبَإٍ
செய்தியை
يَقِينٍ
உறுதியான

Famakasa ghaira ba'eedin faqaala ahattu bimaa lam tuhit bihee wa ji'tuka min Sabaim binaba iny-yaqeen

(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் என்னும் பறவை அவர் முன் தோன்றி) "நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டு "ஸபா"வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.

Tafseer

إِنِّى
நிச்சயமாக நான்
وَجَدتُّ
கண்டேன்
ٱمْرَأَةً
ஒரு பெண்ணை
تَمْلِكُهُمْ
அவர்களை ஆட்சி செய்கின்றவளாக
وَأُوتِيَتْ
அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள்
مِن كُلِّ
எல்லாம்
وَلَهَا
அவளுக்கு சொந்தமான
عَرْشٌ
அரச கட்டிலும்
عَظِيمٌ
ஒரு பெரிய

Innee wajattum ra atan tamlikuhum wa ootiyat min kulli shai'inw wa lahaa 'arshun 'azeem

மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்கு இருக்கின்றது.

Tafseer

وَجَدتُّهَا
அவளையும் கண்டேன்
وَقَوْمَهَا
அவளுடைய மக்களையும்
يَسْجُدُونَ
சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக
لِلشَّمْسِ
சூரியனுக்கு
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَزَيَّنَ
இன்னும் அலங்கரித்து விட்டான்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
فَصَدَّهُمْ
ஆகவே, அவன் தடுத்து விட்டான் அவர்களை
عَنِ ٱلسَّبِيلِ
பாதையிலிருந்து
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَا يَهْتَدُونَ
நேர்வழி பெறவில்லை

Wajattuhaa wa qawmahaa yasjudoona lishshamsi min doonil laahi wa zaiyana lahumush Shaitaanu a'maalahum fasaddahum 'anis sabeeli fahum laa yahtadoon

அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றிச் சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை.

Tafseer

أَلَّا يَسْجُدُوا۟
அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்கா
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
ٱلَّذِى
எவன்
يُخْرِجُ
வெளிப்படுத்துகின்றான்
ٱلْخَبْءَ
மறைந்திருப்பவற்றை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِ
பூமியிலும்
وَيَعْلَمُ
இன்னும் அறிகின்றான்
مَا تُخْفُونَ
நீங்கள் மறைப்பதையும்
وَمَا تُعْلِنُونَ
நீங்கள் வெளிப்படுத்துவதையும்

Allaa yasjudoo lillaahil lazee yukhrijul khab'a fis samaawaati wal ardi wa ya'lamu maa tukhfoona wa maa tu'linoon

வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா? அன்றி, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அவன் நன்கறிந்து கொள்கிறான்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَ
அவனை
رَبُّ
அதிபதி
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
ٱلْعَظِيمِ۩
மகத்தான

Allaahu laaa ilaaha illaa Huwa Rabbul 'Arshil Azeem

அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்" என்று கூறிற்று.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
سَنَنظُرُ
ஆராய்ந்துபார்ப்போம்
أَصَدَقْتَ
நீ உண்மை கூறினாயா?
أَمْ
அல்லது
كُنتَ
ஆகிவிட்டாயா?
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களில்

Qaala sananzuru asadaqta am kunta minal kaazibeen

(அதற்கு ஸுலைமான்) "நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம்.

Tafseer

ٱذْهَب
எடுத்துச் செல்!
بِّكِتَٰبِى
எனது இந்தக் கடிதத்தை
هَٰذَا
இதை
فَأَلْقِهْ
அதைப் போடு!
إِلَيْهِمْ
அவர்கள் முன்
ثُمَّ
பிறகு
تَوَلَّ
விலகி இரு!
عَنْهُمْ
அவர்களை விட்டு
فَٱنظُرْ
நீ பார்!
مَاذَا
என்ன
يَرْجِعُونَ
அவர்கள் பதில் தருகிறார்கள்

Izhab bikitaabee haaza fa alqih ilaihim summma tawalla 'anhum fanzur maazaa yarji'oon

என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களைவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா" என்று கூறினார்.

Tafseer

قَالَتْ
அவள் கூறினாள்
يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
பிரமுகர்களே!
إِنِّىٓ
நிச்சயமாக
أُلْقِىَ
அனுப்பப்பட்டுள்ளது
إِلَىَّ
என்னிடம்
كِتَٰبٌ
ஒரு கடிதம்
كَرِيمٌ
கண்ணியமான

Qaalat yaaa aiyuhal mala'u innee ulqiya ilaiya kitaabun kareem

(அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதனைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கின்றது.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக அது
مِن سُلَيْمَٰنَ
சுலைமானிடமிருந்து
وَإِنَّهُۥ
நிச்சயமாக செய்தியாவது
بِسْمِ
பெயரால்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளன்
ٱلرَّحِيمِ
பேரன்பாளன்

Innahoo min Sulaimaana wa innahoo bismil laahir Rahmaanir Raheem

மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்றெழுதி,

Tafseer