Skip to main content

قَالَ
அவர் கூறினார்
نَكِّرُوا۟
நீங்கள் மாற்றி விடுங்கள்
لَهَا
அவளுக்கு
عَرْشَهَا
அவளுடைய அரச கட்டிலை
نَنظُرْ
நாம் பார்ப்போம்
أَتَهْتَدِىٓ
அவள் அறிந்து கொள்கிறாளா?
أَمْ
அல்லது
تَكُونُ
அவள் ஆகிவிடுகிறாளா?
مِنَ ٱلَّذِينَ
அறியாதவர்களில்

Qaala nakkiroo lahaa 'arshahaa nanzur atahtadeee am takoonu minal lazeena laa yahtadoon

"அவளுடைய சிம்மாசனத்தை மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதனை(த் தன்னுடையதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகின்றாளா?" என்று பார்ப்போமென்று கூறினார்.

Tafseer

فَلَمَّا جَآءَتْ
அவள் வந்தபோது,
قِيلَ
கேட்கப்பட்டது
أَهَٰكَذَا
இது போன்றா
عَرْشُكِۖ
உனது அரச கட்டில்
قَالَتْ
அவள் கூறினாள்
كَأَنَّهُۥ
அதைப் போன்றுதான்
هُوَۚ
இது
وَأُوتِينَا
நாம் கொடுக்கப்பட்டோம்
ٱلْعِلْمَ
அறிவு
مِن قَبْلِهَا
இவளுக்கு முன்னரே
وَكُنَّا
இன்னும் இருக்கிறோம்
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக

Falammaa jaaa'at qeela ahaakaza 'arshuki qaalat kaanna hoo; wa ooteenal 'ilma min qablihaa wa kunnaa muslimeen

அவள் வந்து சேரவே (ஸுலைமான் அவளை நோக்கி) "உன்னுடைய சிம்மாசனம் இவ்வாறு தானா (இருக்கும்)?" என்று கேட்டதற்கு அவள் "இது முற்றிலும் அதைப் போலவே இருக்கின்றது. இதற்கு முன்னதாகவே (உங்கள் மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்" என்றாள்.

Tafseer

وَصَدَّهَا
அவளைத் தடுத்து விட்டது
مَا
எது
كَانَت
இருந்தாள்
تَّعْبُدُ
அவள் வணங்கிக் கொண்டு
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
إِنَّهَا
நிச்சயமாக, அவள்
كَانَتْ
இருந்தாள்
مِن قَوْمٍ
மக்களில்
كَٰفِرِينَ
நிராகரிக்கின்ற

Wa saddahaa maa kaanat ta'budu min doonil laahi innahaa kaanat min qawmin kaafireen

இதுவரையில் (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள் தாம். ஏனென்றால், அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள்.

Tafseer

قِيلَ
கூறப்பட்டது
لَهَا
அவளுக்கு
ٱدْخُلِى
நீ நுழை!
ٱلصَّرْحَۖ
மாளிகையில்
فَلَمَّا رَأَتْهُ
அவள் அதைப் பார்த்த போது
حَسِبَتْهُ
அவள் அதை கருதினாள்
لُجَّةً
அலை அடிக்கும் நீராக
وَكَشَفَتْ
அகற்றினாள்
عَن سَاقَيْهَاۚ
தன் இரு கெண்டைக் கால்களை விட்டும்
قَالَ
கூறினார்
إِنَّهُۥ
நிச்சயமாக இது
صَرْحٌ
மாளிகை
مُّمَرَّدٌ
சமப்படுத்தப்பட்டது
مِّن قَوَارِيرَۗ
கண்ணாடிகளால்
قَالَتْ
அவள் கூறினாள்
رَبِّ
என் இறைவா!
إِنِّى
நிச்சயமாக நான்
ظَلَمْتُ
அநீதி செய்து கொண்டேன்
نَفْسِى
எனக்கே
وَأَسْلَمْتُ
நானும் முஸ்லிமாகி விட்டேன்
مَعَ سُلَيْمَٰنَ
சுலைமானுடன்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
رَبِّ
இறைவனான
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Qeela lahad khulis sarha falammaa ra at hu hasibat hu lujjatanw wa khashafat 'an saaqaihaa; qaala innahoo sarhum mumarradum min qawaareer; qaalat Rabbi innee zalamtu nafsee wa aslamtu ma'a Sulaimaana lillaahi Rabbil 'aalameen

பின்னர் "இம்மாளிகையில் நுழை" என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதனைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான் "அது தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகை தான்" என்று கூறினார். அதற்கவள் "என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப் படுகின்றேன்" என்று கூறினாள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَآ
நாம் அனுப்பினோம்
إِلَىٰ ثَمُودَ
ஸமூது (மக்களு)க்கு
أَخَاهُمْ
சகோதரர் அவருடைய
صَٰلِحًا
ஸாலிஹை
أَنِ ٱعْبُدُوا۟
நீங்கள்வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
فَإِذَا هُمْ
ஆனால், அவர்கள் அப்போது
فَرِيقَانِ
இரண்டு பிரிவுகளாக
يَخْتَصِمُونَ
தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்

Wa laqad arsalnaaa ilaa Samoda akhaahum Saalihan ani'budul lahha fa izaa hum fareeqaani yakhtasimoon

நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்" என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே!
لِمَ تَسْتَعْجِلُونَ
ஏன் அவசரப்படுகிறீர்கள்?
بِٱلسَّيِّئَةِ
தீமையை
قَبْلَ ٱلْحَسَنَةِۖ
நன்மைக்குமுன்னதாக
لَوْلَا تَسْتَغْفِرُونَ
நீங்கள் பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா?
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்

Qaala yaa qawmi lima tasta'jiloona bissaiyi'ati qablal hasanati law laa tas taghfiroonal laaha la'allakum turhamoon

(அதற்கு ஸாலிஹ்) "என்னுடைய மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக் கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கிருபை செய்யப்படுவீர்களே!" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
ٱطَّيَّرْنَا
நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்
بِكَ
உம்மாலும்
وَبِمَن مَّعَكَۚ
இன்னும் உம்முடன் உள்ளவர்களாலும்
قَالَ
அவர் கூறினார்
طَٰٓئِرُكُمْ
மாறாக உங்கள் துன்பத்தின் காரணம்
عِندَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்தான் இருக்கிறது
بَلْ
மாறாக
أَنتُمْ
நீங்கள்
قَوْمٌ
மக்கள்
تُفْتَنُونَ
சோதிக்கப்படுகின்ற

Qaalut taiyarnaa bika wa bimam ma'ak; qaala taaa'irukum 'indal laahi bal antum qawmun tuftanoon

அதற்கவர்கள் "உங்களையும் உங்களுடன் இருப்பவர் களையும் நாங்கள் அபசகுணமாக எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். அதற்கவர் "அல்லாஹ்விடமிருந்துதான் உங்கள் துர்ச்சகுனம் வந்தது. நீங்கள் (அதிசீக்கிரத்தில் அல்லாஹ்வினுடைய) சோதனைக்குள்ளாக வேண்டிய மக்கள்" என்று கூறினார்.

Tafseer

وَكَانَ
இருந்தனர்
فِى ٱلْمَدِينَةِ
அப்பட்டணத்தில்
تِسْعَةُ
ஒன்பது
رَهْطٍ
பேர்
يُفْسِدُونَ
அவர்கள் குழப்பம் செய்தனர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا يُصْلِحُونَ
சீர்திருத்தம் செய்யவில்லை

Wa kaana fil madeenati tis'atu rahtiny yufsidoona fil ardi wa laa yuslihoon

அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்துகொண்டே திரிந்தார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
تَقَاسَمُوا۟
தங்களுக்குள் சத்தியம் செய்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
لَنُبَيِّتَنَّهُۥ
நிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம்
وَأَهْلَهُۥ
அவருடைய குடும்பத்தையும்
ثُمَّ لَنَقُولَنَّ
பிறகு கூறுவோம்
لِوَلِيِّهِۦ
அவருடைய பொறுப்பாளருக்கு
مَا شَهِدْنَا
நாம்ஆஜராகவில்லை
مَهْلِكَ أَهْلِهِۦ
அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு
وَإِنَّا لَصَٰدِقُونَ
நாங்கள் உண்மையாளர்கள்

Qaaloo taqaasamoo billaahi lanubaiyitannahoo wa ahlahoo summaa lanaqoolana liwaliy yihee maa shahidnaa mahlika ahliee wa innaa lasaadiqoon

அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் நாம் இரவோடு இரவாக அழித்து விடுவோம். (இதனை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், "அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்" என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக்கொண்டார்கள்.

Tafseer

وَمَكَرُوا۟ مَكْرًا
அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்
وَمَكَرْنَا مَكْرًا
நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம்
وَهُمْ
அவர்கள்
لَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்

Wa makaroo makranw wa makarnaa makranw wa hum laa yash'uroon

(இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதனை உணர்ந்துகொள்ள முடியவில்லை.

Tafseer