Skip to main content

فَٱنظُرْ
நீர் பார்ப்பீராக!
كَيْفَ
எப்படி என்று
كَانَ
ஆகியது
عَٰقِبَةُ
முடிவு
مَكْرِهِمْ
அவர்கள் சூழ்ச்சியின்
أَنَّا
நிச்சயமாக நாம்
دَمَّرْنَٰهُمْ
அவர்களை அழித்து விட்டோம்
وَقَوْمَهُمْ
அவர்களின் மக்கள்
أَجْمَعِينَ
அனைவரையும்

Fanzur kaifa kaana 'aaqibatu makrihim annaa dammar naahum wa qawmahum ajma'een

ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனித்துப் பாருங்கள். நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களுடைய மக்கள் அனைவரையும் அழித்துவிட்டோம்.

Tafseer

فَتِلْكَ
இதோ
بُيُوتُهُمْ
அவர்களது வீடுகள்
خَاوِيَةًۢ
வெறுமையாக இருக்கின்றன
بِمَا ظَلَمُوٓا۟ۗ
அவர்கள் தீமை செய்ததால்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْلَمُونَ
அறிகின்ற

Fatilka buyootuhum khaa wiyatam bimaa zalamoo; inna fee zaalika la Aayatal liqaw miny-ya'lamoon

அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.

Tafseer

وَأَنجَيْنَا
நாம் பாதுகாத்தோம்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
وَكَانُوا۟ يَتَّقُونَ
அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்

Wa anjainal lazeena aamanoo wa kaanoo yattaqoon

அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து கொண்டிருந்தார்களோ, அவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.

Tafseer

وَلُوطًا
இன்னும் லூத்தையும்
إِذْ
கூறிய சமயத்தை
قَالَ
நினைவு கூறுவீராக!
لِقَوْمِهِۦٓ
அவர் தம் மக்களுக்கு
أَتَأْتُونَ
நீங்கள் செய்கிறீர்களா?
ٱلْفَٰحِشَةَ
மகா அசிங்கமான
وَأَنتُمْ
நீங்கள்
تُبْصِرُونَ
அறியத்தான் செய்கிறீர்கள்

Wa lootan iz qaala liqawmiheee ataatoonal faa hishata wa antum qawmun tajjhaloon

லூத்தையும் (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்) அவர் தன் மக்களை நோக்கி (மறைவு திரைவின்றி) "மக்கள் முன்பாகவே நீங்கள் மானக்கேடான காரியங்களைச் செய்கின்றீர்கள்.

Tafseer

أَئِنَّكُمْ
?/நீங்கள்
لَتَأْتُونَ
தீர்க்கிறீர்கள்
ٱلرِّجَالَ
ஆண்களிடமா
شَهْوَةً
இச்சையை
مِّن دُونِ
அன்றி
ٱلنِّسَآءِۚ
பெண்கள்
بَلْ
மாறாக
أَنتُمْ
நீங்கள்
قَوْمٌ
மக்கள்
تَجْهَلُونَ
நீங்கள் அறிய மாட்டீர்கள்

A'innakum lataatoonar rijaala shahwatam min doonin nisaaa'; bal antum qawmun tajhaloon

நீங்கள் பெண்களைவிட்டு ஆண்களிடம் மோகங்கொண்டு வருகின்றீர்களே! நீங்கள் முற்றிலும் அறிவீனமான மக்களாக இருக்கிறீர்கள்" என்று கூறினார்.

Tafseer

فَمَا كَانَ
இருக்கவில்லை
جَوَابَ
பதிலோ
قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின்
إِلَّآ
தவிர
أَن قَالُوٓا۟
கூறுவதாகவே
أَخْرِجُوٓا۟
வெளியேற்றுங்கள்
ءَالَ
குடும்பத்தாரை
لُوطٍ
லூத்துடைய
مِّن قَرْيَتِكُمْۖ
உங்கள் ஊரிலிருந்து
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
أُنَاسٌ
அந்த மக்கள்
يَتَطَهَّرُونَ
அசூசைப்படுகிறார்கள்

Fammaa kaana jawaaba qawmiheee illaaa an qaalooo akrijoon aalaa Lootim min qaryatikum innahum unaasuny yatatahharoon

அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) "லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். நிச்சயமாக அவர் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் (போல் பேசுகின்றனர்)" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.

Tafseer

فَأَنجَيْنَٰهُ
எனவே, நாம் அவரை(யும்) பாதுகாத்தோம்
وَأَهْلَهُۥٓ
அவருடைய குடும்பத்தையும்
إِلَّا
தவிர
ٱمْرَأَتَهُۥ
அவருடைய மனைவியை
قَدَّرْنَٰهَا
அவளை முடிவு செய்தோம்
مِنَ ٱلْغَٰبِرِينَ
மிஞ்சியவர்களில்

Fa anjainaahu wa ahlahooo illam ra atahoo qaddarnaahaa minal ghaabireen

ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம்.

Tafseer

وَأَمْطَرْنَا
பொழிவித்தோம்
عَلَيْهِم
அவர்கள் மீது
مَّطَرًاۖ
மழை
فَسَآءَ
மிகக் கெட்டதாகும்
مَطَرُ
அந்த மழை
ٱلْمُنذَرِينَ
எச்சரிக்கப்பட்டவர்களின்

Wa amtarnaa 'alaihimm mataran fasaaa'a matarul munzareen

ஆகவே, அவர்கள் மீது கல்மழையை நாம் பொழிந்தோம். பயமுறுத்தப்பட்ட அவர்கள் மீது (பொழியப்பட்ட) கல்மழை மகா கெட்டது.

Tafseer

قُلِ
கூறுவீராக
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
وَسَلَٰمٌ
இன்னும் ஸலாம்
عَلَىٰ عِبَادِهِ
அவனுடைய அடியார்களுக்கு
ٱلَّذِينَ ٱصْطَفَىٰٓۗ
எவர்கள்/அவன் தேர்ந்தெடுத்தான்
ءَآللَّهُ
?/அல்லாஹ்
خَيْرٌ
சிறந்தவையா
أَمَّا يُشْرِكُونَ
அல்லது அவர்கள் இணைவைப்பவையா?

Qulil hamdu lillaahi wa salaamun 'alaa 'ibaadihil lazeenas tafaa; aaallaahu khairun ammmaa yushrikoon

ஆகவே, (நபியே!) புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக் குரியனவே. தன்னுடைய அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது "ஈடேற்றம் உண்டாவதாக" என்றும் "அல்லாஹ் மேலானவனா அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக்குகின்றவைகள் மேலானவைகளா?" என்று கேளுங்கள்.

Tafseer

أَمَّنْ
?/எவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَأَنزَلَ
இன்னும் அவன் இறக்கினான்
لَكُم
உங்களுக்கு
مِّنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்து
مَآءً
மழையை
فَأَنۢبَتْنَا
நாம் முளைக்க வைத்தோம்
بِهِۦ
அதன்மூலம்
حَدَآئِقَ
தோட்டங்களை
ذَاتَ بَهْجَةٍ
அழகிய காட்சியுடைய
مَّا كَانَ
முடியாது
لَكُمْ
உங்களால்
أَن تُنۢبِتُوا۟
நீங்கள் முளைக்க வைக்க
شَجَرَهَآۗ
அதன் மரங்களை
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
بَلْ
மாறாக
هُمْ
அவர்கள்
قَوْمٌ
மக்கள்
يَعْدِلُونَ
இணைவைக்கின்றனர்

Amman khalaqas samaawaati wal arda wa anzala lakum minas samaaa'i maaa'an fa ambatnaa bihee hadaaa'iqa zaata bahjjah; maa kanna lakum an tumbitoo shajarahaa; 'a-ilaahum ma'al laah; bal hum qawmuny ya'diloon

அன்றி, வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதனைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங் களையும் உற்பத்தி செய்கிறோம். (நம்முடைய உதவியின்றி) அதன் மரங்களை முளைப்பிக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை இறைவனுக்குச்) சமமாக்குகின்றனர்.

Tafseer