Skip to main content

أَلَّا تَعْلُوا۟
நீங்கள் பெருமை காட்டாதீர்கள்!
عَلَىَّ
என்னிடம்
وَأْتُونِى
என்னிடம் வந்து விடுங்கள்!
مُسْلِمِينَ
பணிந்தவர்களாக

Allaa ta'loo 'alaiya waa toonee muslimeen

நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்" (என்றும் எழுதப்பட்டிருக்கின்றது என்று கூறி)

Tafseer

قَالَتْ
அவள் கூறினாள்
يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
பிரமுகர்களே!
أَفْتُونِى
நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள்
فِىٓ أَمْرِى
எனது காரியத்தில்
مَا كُنتُ
நான் இல்லை
قَاطِعَةً
முடிவு செய்பவளாக
أَمْرًا
ஒரு காரியத்தை
حَتَّىٰ
வரை
تَشْهَدُونِ
நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற

Qaalat yaaa aiyuhal mala'u aftoonee fee amree maa kuntu qaati'atan amran hattaa tashhhaddon

(தன்னுடைய பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே என்னுடைய இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாத வரையில் நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று அவள் கூறினாள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
نَحْنُ
நாங்கள்
أُو۟لُوا۟ قُوَّةٍ
பலமுடையவர்கள்
وَأُو۟لُوا۟ بَأْسٍ
இன்னும் வலிமை உடையவர்கள்
شَدِيدٍ
கடும்
وَٱلْأَمْرُ
இன்னும் முடிவு
إِلَيْكِ
உன்னிடம்இருக்கிறது
فَٱنظُرِى
ஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்!
مَاذَا تَأْمُرِينَ
நீ உத்தரவிடுவதை

Qaaloo nahnu uloo quwwatinw wa uloo baasin shadeed; wal amru ilaiki fanzuree maazaa taamureen

அதற்கவர்கள் "நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ) உங்கள் உத்தரவைப் பொறுத்திருக்கின்றது. ஆகவே, நீங்கள் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பாருங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَتْ
அவள் கூறினாள்
إِنَّ ٱلْمُلُوكَ
நிச்சயமாகமன்னர்கள்
إِذَا دَخَلُوا۟
நுழைந்து விட்டால்
قَرْيَةً
ஓர் ஊருக்குள்
أَفْسَدُوهَا
அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள்
وَجَعَلُوٓا۟
ஆக்கிவிடுவார்கள்
أَعِزَّةَ
கண்ணியவான்களை
أَهْلِهَآ أَذِلَّةًۖ
அந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாக
وَكَذَٰلِكَ
அப்படித்தான்
يَفْعَلُونَ
செய்வார்கள்

Qaalat innal mulooka izaa dakhaloo qaryatan afsadoohaa wa ja'alooo a'izzata ahlihaaa azillah; wa kazaalika yaf'aloon

அதற்கவள் "அரசர்கள் யாதொரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதனை அழித்துவிடுகின்றனர். அன்றி, அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும்.

Tafseer

وَإِنِّى
நிச்சயமாக நான்
مُرْسِلَةٌ
அனுப்புகிறேன்
إِلَيْهِم
அவர்களிடம்
بِهَدِيَّةٍ
ஓர் அன்பளிப்பை
فَنَاظِرَةٌۢ
பார்க்கிறேன்
بِمَ
என்ன பதில்
يَرْجِعُ
திரும்ப கொண்டு வருகிறார்கள்
ٱلْمُرْسَلُونَ
தூதர்கள்

Wa innee mursilatun ilaihim bihadiyyatin fanaaziratum bima yarji'ul mursaloon

ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி வைத்து (அதனைக் கொண்டு செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருப்பேன்" என்று கூறி (அவ்வாறே அனுப்பி வைத்தாள்.)

Tafseer

فَلَمَّا جَآءَ
அவர் வந்தபோது
سُلَيْمَٰنَ
சுலைமானிடம்
قَالَ
அவர் கூறினார்
أَتُمِدُّونَنِ
நீங்கள் எனக்கு தருகிறீர்களா?
بِمَالٍ
செல்வத்தை
فَمَآ ءَاتَىٰنِۦَ
எனக்கு தந்திருப்பது
ٱللَّهُ
அல்லாஹ்
خَيْرٌ
மிகச் சிறந்தது
مِّمَّآ ءَاتَىٰكُم
அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட
بَلْ
மாறாக
أَنتُم
நீங்கள்
بِهَدِيَّتِكُمْ
உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு
تَفْرَحُونَ
பெருமிதம் அடைவீர்கள்

Falammaa jaaa'a Sulaimaana qaala atumiddoonani bimaalin famaaa aataaniyal laahu khairum mimmmaaa aataakum bal antum bihadiy-yatikum tafrahoon

அந்தத் தூதர்கள் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவர்களை நோக்கி) "நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகின்றீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பவைகளை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. உங்களுடைய இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும்,

Tafseer

ٱرْجِعْ
நீ திரும்பிப் போ!
إِلَيْهِمْ
அவர்களிடம்
فَلَنَأْتِيَنَّهُم
நாம் அவர்களிடம் கொண்டு வருவோம்
بِجُنُودٍ
இராணுவங்களை
لَّا قِبَلَ
அறவே வலிமை இருக்காது
لَهُم
அவர்களுக்கு
بِهَا
அவர்களை எதிர்க்க
وَلَنُخْرِجَنَّهُم
நிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம்
مِّنْهَآ
அதிலிருந்து
أَذِلَّةً
இழிவானவர்களாக
وَهُمْ
அவர்கள்
صَٰغِرُونَ
சிறுமைப்படுவார்கள்

Irji' ilaihim falanaatiyan nahum bijunoodil laa qibala lahum bihaa wa lanukhri jannahum minhaaa azillatanw wa hum saaghiroon

நீங்கள் அவர்களிடம் திரும்பச் செல்லுங்கள். எவராலும் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று (கூறி அனுப்பிவிட்டு,)

Tafseer

قَالَ
அவர் கூறினார்
يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
பிரமுகர்களே!
أَيُّكُمْ
உங்களில் யார்
يَأْتِينِى
என்னிடம் கொண்டு வருவார்
بِعَرْشِهَا
அவளுடைய அரச கட்டிலை
قَبْلَ
முன்னர்
أَن يَأْتُونِى
அவர்கள் என்னிடம் வருவதற்கு
مُسْلِمِينَ
பணிந்தவர்களாக

Qaala yaaa aiyuhal mala'u aiyukum yaateenee bi'arshihaa qabla ai yaatoonee muslimeen

(ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார்.

Tafseer

قَالَ
கூறியது
عِفْرِيتٌ
சாதுர்யமான ஒன்று
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
أَنَا۠
நான்
ءَاتِيكَ
உம்மிடம் கொண்டு வருவேன்
بِهِۦ
அதை
قَبْلَ
முன்னர்
أَن تَقُومَ
நீர் எழுவதற்கு
مِن مَّقَامِكَۖ
உமது இடத்திலிருந்து
وَإِنِّى
நிச்சயமாக நான்
عَلَيْهِ
அதற்கு
لَقَوِىٌّ
ஆற்றல் உள்ளவன்
أَمِينٌ
நம்பிக்கைக்குரியவன்

Qaala 'ifreetum minal jinni ana aateeka bihee qabla an taqooma mim maqaamika wa innee 'alaihi laqawiyyun ameen

அதற்கு ஜின்களிலுள்ள "இஃப்ரீத்" (என்னும் ஒரு வீரன்) "நீங்கள் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதனை நான் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
ஒருவர் கூறினார்
ٱلَّذِى عِندَهُۥ
எவர்/தன்னிடம்
عِلْمٌ
ஞானம்
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தின்
أَنَا۠
நான்
ءَاتِيكَ
உம்மிடம் கொண்டு வருவேன்
بِهِۦ
அதை
قَبْلَ
முன்னர்
أَن يَرْتَدَّ
திரும்புவதற்கு
إِلَيْكَ
உன் பக்கம்
طَرْفُكَۚ
உமது பார்வை
فَلَمَّا رَءَاهُ
அவர் பார்த்த போது
مُسْتَقِرًّا
நிலையாகி விட்டதாக
عِندَهُۥ
தன்னிடம்
قَالَ
கூறினார்
هَٰذَا مِن
இது/அருளாகும்
رَبِّى
என் இறைவனின்
لِيَبْلُوَنِىٓ
அவன் என்னை சோதிப்பதற்காக
ءَأَشْكُرُ
நான் நன்றி செலுத்துகிறேனா?
أَمْ
அல்லது
أَكْفُرُۖ
நன்றி கெடுகிறேனா?
وَمَن
யார்
شَكَرَ
நன்றிசெலுத்துகிறாரோ
فَإِنَّمَا يَشْكُرُ
அவர் நன்றி செலுத்துவதெல்லாம்
لِنَفْسِهِۦۖ
அவருக்குத்தான்
وَمَن
யார்
كَفَرَ
நிராகரிப்பாரோ
فَإِنَّ
ஏனெனில்
رَبِّى
என் இறைவன்
غَنِىٌّ
முற்றிலும் தேவை அற்றவன்
كَرِيمٌ
பெரும் தயாளன்

Qaalal lazee indahoo 'ilmum minal Kitaabi ana aateeka bihee qabla ai yartadda ilaika tarfuk; falammaa ra aahu mustaqirran 'indahoo qaala haazaa min fadli Rabbee li yabluwaneee 'a-ashkuru am akfuru wa man shakara fa innamaa yashkuru linafsihee wa man kafara fa inna Rabbee Ghaniyyun Kareem

(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,)

Tafseer