Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُمْسِكُ
தடுத்து வைத்திருக்கின்றான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضَ
பூமியையும்
أَن تَزُولَاۚ
இரண்டும் நீங்கிவிடாமல்
وَلَئِن زَالَتَآ
அவை இரண்டும் நீங்கிவிட்டால்
إِنْ أَمْسَكَهُمَا
அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது
مِنْ أَحَدٍ
எவர் ஒருவரும்
مِّنۢ بَعْدِهِۦٓۚ
அவனுக்குப் பின்னர்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
حَلِيمًا
மகா சகிப்பாளனாக
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக

Innal laaha yumsikus samaawaati wal arda an tazoolaaa; wa la'in zaalataaa in amsa kahumaa min ahadim mim ba'dih; innahoo kaana Haleeman Ghafooraa

வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
جَهْدَ أَيْمَٰنِهِمْ
மிக உறுதியாக சத்தியம் செய்தல்
لَئِن
வந்தால்
جَآءَهُمْ
அவர்களிடம்
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்
لَّيَكُونُنَّ
நிச்சயமாக இருந்திருப்பார்கள்
أَهْدَىٰ
மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக
مِنْ إِحْدَى
சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை விட
فَلَمَّا
வந்த போது
جَآءَهُمْ
அவர்களிடம்
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்
مَّا
அதிகப்படுத்தவில்லை
زَادَهُمْ
அவர்களுக்கு
إِلَّا
தவிர
نُفُورًا
விலகிச் செல்வதை

Wa aqsamoo billaahi jahda aymaanihim la'in jaaa'ahum nazeerul layakoonunna ahdaa min ihdal umami falam maa jaaa'ahum nazeerum maa zaadahum illaa nufooraa

"எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்" என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்முடைய) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.

Tafseer

ٱسْتِكْبَارًا
பெருமையடிப்பதை(யும்)
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَمَكْرَ
சூழ்ச்சி செய்வதையும்
ٱلسَّيِّئِۚ
தீய(து)
وَلَا يَحِيقُ
சூழ்ந்துகொள்ளாது
ٱلْمَكْرُ
சூழ்ச்சி
ٱلسَّيِّئُ
தீய(து)
إِلَّا
தவிர
بِأَهْلِهِۦۚ
அதை செய்தவர்களை
فَهَلْ يَنظُرُونَ
இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
إِلَّا سُنَّتَ
வழிமுறையைத் தவிர
ٱلْأَوَّلِينَۚ
முன் சென்றோரின்
فَلَن تَجِدَ
அறவே நீர் காணமாட்டீர்
لِسُنَّتِ
வழிமுறையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تَبْدِيلًاۖ
மாற்றத்தை
وَلَن تَجِدَ
இன்னும் நீர் காணமாட்டீர்
لِسُنَّتِ
வழிமுறையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تَحْوِيلًا
எவ்வித திருப்பத்தை

Istakbaaran fil ardi wa makras sayyi'; wa laa yaheequl makrus sayyi'u illaa bi ahlih; fahal yanzuroona illaa sunnatal awwaleen; falan tajida lisunnatil laahi tabdeelanw wa lan tajida lisunnatil laahi tahweela

(அன்றி) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் காண மாட்டீர்கள். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

أَوَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் பயணிக்கவில்லையா?
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَيَنظُرُوا۟
அவர்கள் பார்க்கவில்லை
كَيْفَ
எப்படி
كَانَ عَٰقِبَةُ
இருந்தது/முடிவு
ٱلَّذِينَ مِن
அவர்களுக்கு முன்னுள்ளவர்களின்
وَكَانُوٓا۟
அவர்கள் இருந்தனர்
أَشَدَّ
கடுமையானவர்களாக
مِنْهُمْ
இவர்களை விட
قُوَّةًۚ
பலத்தால்
وَمَا كَانَ
இருக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُعْجِزَهُۥ
அவனை பலவீனப்படுத்தக் கூடியதாக
مِن شَىْءٍ
எதுவும்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَلَا فِى
இன்னும் பூமியில்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
قَدِيرًا
பேராற்றலுடையவனாக

Awalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qblihim wa kaanoo ashadda minhum quwwah; wa maa kaanal laahu liyu'jizahoo min shai'in fis samaawaati wa laa fil ard; innahoo kaana 'Aleeman Qadeeraa

பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வானத்திலோ, பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் பெரும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَوْ يُؤَاخِذُ
தண்டிப்பதாக இருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلنَّاسَ
மக்களை
بِمَا كَسَبُوا۟
அவர்கள் செய்ததற்காக
مَا تَرَكَ
அவன் விட்டிருக்க மாட்டான்
عَلَىٰ ظَهْرِهَا
அதன் மேற்பரப்பில்
مِن دَآبَّةٍ
எந்த உயிரினத்தையும்
وَلَٰكِن
எனினும்
يُؤَخِّرُهُمْ
அவன் பிற்படுத்தி வைக்கின்றான் அவர்களை
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
مُّسَمًّىۖ
ஒரு குறிப்பிட்ட
فَإِذَا جَآءَ
வந்துவிட்டால்
أَجَلُهُمْ
அவர்களுடைய தவணை
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
بِعِبَادِهِۦ
தனது அடியார்களை
بَصِيرًۢا
உற்றுநோக்கியவனாக

Wa law yu'aakhizul laahun naasa bima kasaboo maa taraka 'alaa zahrihaa min daaabbatinw wa laakiny yu'akhkhiruhum ilaaa ajalim musamman fa izaa jaaa'a ajaluhum fa innal laaha kaana bi'ibaadihee Baseeraa

மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக் குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) உயிரையும் விட்டு வைக்கமாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரையிலும் விட்டு வைக்கின்றான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer