Skip to main content

وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
يَوْمًا
ஒரு நாளை
تُرْجَعُونَ
மீட்கப்படுவீர்கள்
فِيهِ
அதில்
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
ثُمَّ
பிறகு
تُوَفَّىٰ
முழுமையாக நிறைவேற்றப்படும்
كُلُّ نَفْسٍ
எல்லா ஆன்மாக்களுக்கும்
مَّا كَسَبَتْ
எவற்றை/செய்தன
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wattaqoo yawman turja'oona feehi ilal laahi summa tuwaffaa kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon

மேலும், ஒரு நாளை பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். அன்றி, அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِذَا تَدَايَنتُم
நீங்கள் வியாபாரம் செய்தால்
بِدَيْنٍ
கடனுக்கு
إِلَىٰٓ أَجَلٍ
ஒரு தவணை வரை
مُّسَمًّى
குறிப்பிட்ட
فَٱكْتُبُوهُۚ
அதை எழுதுங்கள்
وَلْيَكْتُب
இன்னும் எழுதவும்
بَّيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
كَاتِبٌۢ
எழுதுபவர்
بِٱلْعَدْلِۚ
நீதியாக
وَلَا يَأْبَ
மறுக்க வேண்டாம்
كَاتِبٌ
எழுதுபவர்
أَن يَكْتُبَ
அவர் எழுத
كَمَا عَلَّمَهُ
அதை கற்பித்துள்ளதால்
ٱللَّهُۚ
அல்லாஹ்
فَلْيَكْتُبْ
ஆகவே அவர் எழுதவும்
وَلْيُمْلِلِ
இன்னும் வாசகம் கூறவும்
ٱلَّذِى عَلَيْهِ
எவர்/அவர் மீது
ٱلْحَقُّ
கடமை (கடன்)
وَلْيَتَّقِ
இன்னும் அவர் அஞ்சவும்
ٱللَّهَ
அல்லாஹ்வை
رَبَّهُۥ
அவருடைய இறைவன்
وَلَا يَبْخَسْ
இன்னும் அவர் குறைக்க வேண்டாம்
مِنْهُ
அதிலிருந்து
شَيْـًٔاۚ
எதையும்
فَإِن كَانَ
இருந்தால்
ٱلَّذِى
எவர்
عَلَيْهِ
அவர் மீது
ٱلْحَقُّ
கடமை (கடன்)
سَفِيهًا
அறிவு முதிர்ச்சியற்றவராக
أَوْ
அல்லது
ضَعِيفًا
பலவீனராக
أَوْ
அல்லது
لَا يَسْتَطِيعُ
இயலமாட்டார்
أَن يُمِلَّ
வாசகம் கூற
هُوَ
அவர்
فَلْيُمْلِلْ
வாசகம் கூறவும்
وَلِيُّهُۥ
அவருடைய பொறுப்பாளர்
بِٱلْعَدْلِۚ
நீதியாக
وَٱسْتَشْهِدُوا۟
இன்னும் சாட்சியாக்கத் தேடுங்கள்
شَهِيدَيْنِ
இரண்டு சாட்சிகளை
مِن
இருந்து
رِّجَالِكُمْۖ
உங்கள் ஆண்கள்
فَإِن لَّمْ
அவ்விருவரும் இல்லையென்றால்
رَجُلَيْنِ
இரண்டு ஆண்களாக
فَرَجُلٌ
ஓர் ஆண்
وَٱمْرَأَتَانِ
இன்னும் இரண்டுபெண்கள்
مِمَّن تَرْضَوْنَ
எவர்களில்/திருப்தியடைகிறீர்கள்
مِنَ ٱلشُّهَدَآءِ
சாட்சிகளிலிருந்து
أَن تَضِلَّ
மறந்து விடுவாள்
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
فَتُذَكِّرَ
எனவே நினைவூட்டுவாள்
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
ٱلْأُخْرَىٰۚ
மற்றொருத்திக்கு
وَلَا يَأْبَ
இன்னும் மறுக்கவேண்டாம்
ٱلشُّهَدَآءُ
சாட்சிகள்
إِذَا مَا
அவர்கள் அழைக்கப்படும் போது
وَلَا تَسْـَٔمُوٓا۟
இன்னும் சோம்பல்படாதீர்கள்
أَن تَكْتُبُوهُ
அதை நீங்கள்எழுத
صَغِيرًا
சிறியது
أَوْ
அல்லது
كَبِيرًا
பெரியது
إِلَىٰٓ
வரை
أَجَلِهِۦۚ
அதனுடைய தவணை
ذَٰلِكُمْ
அது
أَقْسَطُ
மிக நீதியானது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَأَقْوَمُ
இன்னும் அதிகம் உறுதியானது
لِلشَّهَٰدَةِ
சாட்சியத்திற்கு
وَأَدْنَىٰٓ
இன்னும் நெருக்கமானது
أَلَّا تَرْتَابُوٓا۟ۖ
நீங்கள் சந்தேகப்படாமலிருக்க
إِلَّآ أَن
தவிர/இருப்பது
تِجَٰرَةً
வியாபாரமாக
حَاضِرَةً
ரொக்கமான
تُدِيرُونَهَا
அதை நடத்துகிறீர்கள்
بَيْنَكُمْ
உங்கள் மத்தியில்
فَلَيْسَ
இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
جُنَاحٌ
குற்றம்
أَلَّا تَكْتُبُوهَاۗ
அதை நீங்கள் எழுதாமலிருப்பது
وَأَشْهِدُوٓا۟
இன்னும் சாட்சியை ஏற்படுத்துங்கள்
إِذَا تَبَايَعْتُمْۚ
நீங்கள் வியாபாரம் செய்தால்
وَلَا يُضَآرَّ
இன்னும் துன்புறுத்தப்பட மாட்டார்
كَاتِبٌ
எழுதுபவர்
وَلَا شَهِيدٌۚ
இன்னும் சாட்சி
وَإِن تَفْعَلُوا۟
நீங்கள் செய்தால்
فَإِنَّهُۥ
நிச்சயமாக அது
فُسُوقٌۢ
பெரும் பாவம்
بِكُمْۗ
உங்களுக்கு
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
وَيُعَلِّمُكُمُ
உங்களுக்குக் கற்பிப்பான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Yaa ayyuhal lazeena aamanoo izaa tadaayantum bidinin ilaa ajalimmusamman faktubooh; walyaktub bainakum kaatibum bil'adl; wa laa yaaba kaatibun ai yaktuba kamaa 'allamahul laah; falyaktub walyumlilil lazee 'alaihil haqqu walyattaqil laaha rabbahoo wa laa yabkhas minhu shai'aa; fa in kaanal lazee 'alaihil lhaqqu safeehan aw da'eefan aw laa yastatee'u ai yumilla huwa falyumlil waliyyuhoo bil'adl; wastash hidoo shaheedaini mir rijaalikum fa il lam yakoonaa rajulaini farajulunw wamra ataani mimman tardawna minash shuhadaaa'i an tadilla ihdaahumaa fatuzakkira ihdaahumal ukhraa; wa laa yaabash shuhadaaa'u izaa maadu'oo; wa laa tas'amooo an taktuboohu sagheeran awkabeeran ilaaa ajalih; zaalikum aqsatu 'indal laahi wa aqwamu lishshahaadati wa adnaaa allaa tartaabooo illaaa an takoona tijaaratan haadiratan tudeeroonahaa bainakum falaisa 'alaikum junaahun allaa taktuboohan; wa ashidooo izaa tabaaya'tum; wa laa yudaaarra kaatibunw wa laa shaheed; wa in taf'aloo fa innahoo fusooqum bikum; wattaqul laaha wa yu'allimu kumul laah; wallaahu bikulli shai'in 'Aleem

நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமான வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுத(ôமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியான தாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டபோதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக் கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன்.

Tafseer

وَإِن كُنتُمْ
இன்னும் நீங்கள்இருந்தால்
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
وَلَمْ تَجِدُوا۟
இன்னும் நீங்கள்பெறவில்லை
كَاتِبًا
ஓர் எழுதுபவரை
فَرِهَٰنٌ
அடமானங்கள்
مَّقْبُوضَةٌۖ
கைப்பற்றப்பட்டது
فَإِنْ أَمِنَ
நம்பினால்
بَعْضُكُم
உங்களில் சிலர்
بَعْضًا
சிலரை
فَلْيُؤَدِّ
நிறைவேற்றவும்
ٱلَّذِى
எவர்
ٱؤْتُمِنَ
நம்பப்பட்டார்
أَمَٰنَتَهُۥ
அவருடைய நம்பிக்கையை
وَلْيَتَّقِ
இன்னும் அவர் அஞ்சவும்
ٱللَّهَ
அல்லாஹ்வை
رَبَّهُۥۗ
அவருடையஇறைவன்
وَلَا تَكْتُمُوا۟
இன்னும் மறைக்காதீர்கள்
ٱلشَّهَٰدَةَۚ
சாட்சியத்தை
وَمَن
இன்னும் யார்
يَكْتُمْهَا
அதை மறைப்பார்
فَإِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
ءَاثِمٌ
பாவியாகிவிடும்
قَلْبُهُۥۗ
அவனுடைய உள்ளம்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا
எதை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa in kuntum 'alaa safarinw wa lam tajidoo kaatiban farihaanum maqboodatun fa in amina ba'dukum ba'dan falyu'addil lazi tumina amaa natahoo walyattaqil laaha Rabbah; wa laa taktumush shahaadah; wa mai yaktumhaa fa innahooo aasimun qalbuh; wallaahu bimaa ta'maloona 'Aleem

அன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

لِّلَّهِ
அல்லாஹ்வுக்கே
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
இன்னும் பூமியில்உள்ளவை
وَإِن تُبْدُوا۟
இன்னும் நீங்கள் வெளிப்படுத்தினால்
مَا فِىٓ
உங்கள் உள்ளங்களில் உள்ளதை
أَوْ تُخْفُوهُ
அல்லது அதை நீங்கள் மறைத்தால்
يُحَاسِبْكُم
உங்களுக்கு கூலி கொடுப்பான்
بِهِ
அதற்காக
ٱللَّهُۖ
அல்லாஹ்
فَيَغْفِرُ
ஆகவே மன்னிப்பான்
لِمَن
எவருக்கு
يَشَآءُ
நாடுகிறான்
وَيُعَذِّبُ
இன்னும் வேதனை செய்வான்
مَن
எவரை
يَشَآءُۗ
நாடுகிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Lillaahi maa fissamaawaati wa maa fil ard; wa in tubdoo maa feee anfusikum aw tukhfoohu yuhaasibkum bihil laa; fayaghfiru li mai yashaaa'u wa yu'azzibu mai yashaaa u;wallaahu 'alaa kulli shai in qadeer

(ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். அன்றி, அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன்.

Tafseer

ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
ٱلرَّسُولُ
தூதர்
بِمَآ أُنزِلَ
இறக்கப்பட்டதை
إِلَيْهِ
தமக்கு
مِن
இருந்து
رَّبِّهِۦ
தமது இறைவன்
وَٱلْمُؤْمِنُونَۚ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
كُلٌّ
எல்லோரும்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَلَٰٓئِكَتِهِۦ
இன்னும் அவனுடைய வானவர்கள்
وَكُتُبِهِۦ
இன்னும் அவனுடைய வேதங்கள்
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்கள்
لَا نُفَرِّقُ
பிரிவினை காட்டமாட்டோம்
بَيْنَ أَحَدٍ
எவருக்கு மத்தியிலும்
مِّن
இருந்து
رُّسُلِهِۦۚ
அவனுடையதூதர்கள்
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
سَمِعْنَا
செவியுற்றோம்
وَأَطَعْنَاۖ
இன்னும் கட்டுப்பட்டோம்
غُفْرَانَكَ
உன் மன்னிப்பை
رَبَّنَا
எங்கள் இறைவா
وَإِلَيْكَ
இன்னும் உன் பக்கமே
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Aamanar-Rasoolu bimaaa unzila ilaihi mir-Rabbihee walmu'minoon; kullun aamana billaahi wa Malaaa'ikathihee wa Kutubhihee wa Rusulih laa nufarriqu baina ahadim-mir-Rusulihee wa qaaloo sami'naa wa ata'naa ghufraanaka Rabbanaa wa ilaikal-maseer

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்லவென்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து) விடமாட்டோம் என்றும், "(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமேதான் நாங்கள் சேர வேண்டியதிருக்கின்றது" என்றும் கூறுகிறார்கள்.

Tafseer

لَا يُكَلِّفُ
சிரமப்படுத்தமாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
نَفْسًا
ஓர் ஆன்மாவை
إِلَّا
தவிர
وُسْعَهَاۚ
அதன் வசதி/சக்தி
لَهَا
அதற்கு
مَا كَسَبَتْ
அது செய்தது
وَعَلَيْهَا
இன்னும் அதன் மீது
مَا ٱكْتَسَبَتْۗ
அது செய்தது
رَبَّنَا
எங்கள் இறைவா
لَا تُؤَاخِذْنَآ
எங்களைத் தண்டிக்காதே
إِن نَّسِينَآ
நாங்கள் மறந்தால்
أَوْ
அல்லது
أَخْطَأْنَاۚ
நாங்கள் தவறிழைத்தால்
رَبَّنَا
எங்கள் இறைவா
وَلَا تَحْمِلْ
இன்னும் சுமத்தாதே
عَلَيْنَآ
எங்கள் மீது
إِصْرًا
கடினமான சுமையை
كَمَا
போன்று
حَمَلْتَهُۥ
அதைச் சுமத்தினாய்
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِنَاۚ
எங்களுக்கு முன்
رَبَّنَا
எங்கள் இறைவா
وَلَا تُحَمِّلْنَا
இன்னும் எங்களை சுமக்க வைக்காதே
مَا
எது
لَا طَاقَةَ
அறவே ஆற்றல் இல்லை
لَنَا
எங்களுக்கு
بِهِۦۖ
அதற்கு
وَٱعْفُ
இன்னும் (பிழைகளை) அழித்தருள்
عَنَّا
எங்களை விட்டு
وَٱغْفِرْ
இன்னும் மன்னித்தருள்
لَنَا
எங்களுக்கு
وَٱرْحَمْنَآۚ أَنتَ
இன்னும் எங்களுக்கு கருணைபுரி / நீ
مَوْلَىٰنَا
எங்கள் தலைவன்
فَٱنصُرْنَا
ஆகவே நீஎங்களுக்கு உதவு
عَلَى ٱلْقَوْمِ
கூட்டத்திற்கு எதிராக
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Laa yukalliful-laahu nafsan illaa wus'ahaa; lahaa maa kasabat wa 'alaihaa maktasabat; Rabbanaa la tu'aakhiznaa in naseenaaa aw akhtaanaa; Rabbanaa wa laa tahmil-'alainaaa isran kamaa hamaltahoo 'alal-lazeena min qablinaa; Rabbanaa wa laa tuhammilnaa maa laa taaqata lanaa bih wa'fu 'annaa waghfir lanaa warhamnaa; Anta mawlaanaa fansurnaa 'alal qawmil kaafireen

அல்லாஹ் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக்கொண்ட நன்மை அவைகளுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவைகளுக்கே (கேடு விளைவிக்கும்). "எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!) எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!

Tafseer