Skip to main content

فَهَزَمُوهُم
ஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள்
بِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَقَتَلَ
இன்னும் கொன்றார்
دَاوُۥدُ جَالُوتَ
தாவூது/ஜாலூத்தை
وَءَاتَىٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ
ஆட்சியை/இன்னும் ஞானம்
وَعَلَّمَهُۥ
இன்னும் அவருக்குக் கற்பித்தான்
مِمَّا
எதிலிருந்து
يَشَآءُۗ
நாடுகிறான்
وَلَوْلَا
இல்லையென்றால்
دَفْعُ
தடுப்பது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلنَّاسَ
மக்களை
بَعْضَهُم
அவர்களில் சிலரை விட்டு
بِبَعْضٍ
சிலரைக் கொண்டு
لَّفَسَدَتِ
உறுதியாக அழிந்து விடும்
ٱلْأَرْضُ
பூமி
وَلَٰكِنَّ
எனினும்
ٱللَّهَ
அல்லாஹ்
ذُو فَضْلٍ
அருளுடையவன்
عَلَى
மீது
ٱلْعَٰلَمِينَ
உலகத்தார்கள்

Fahazamoohum bi iznillaahi wa qatala Daawoodu jaaloota wa aataahul laahulmulka Wal Hikmata wa 'allamahoo mimmaa yashaaa'; wa law laa daf'ullaahin naasa ba'dahum biba'dil lafasadatil ardu wa laakinnal laaha zoo fadlin 'alal'aalameen

ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவைகளை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் சிலரைக் கொண்டே அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

تِلْكَ
(அவை) இவை
ءَايَٰتُ
வசனங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
نَتْلُوهَا
அவற்றை ஓதுகிறோம்
عَلَيْكَ
உம்மீது
بِٱلْحَقِّۚ
உண்மையுடன்
وَإِنَّكَ
இன்னும் நிச்சயமாக நீர்
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்

Tilka Aayaatul laahi natloohaa 'alaika bilhaqq; wa innaka laminal mursaleen

(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவைகளை உங்களுக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீங்களும் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்.

Tafseer

تِلْكَ
அந்த
ٱلرُّسُلُ
தூதர்கள்
فَضَّلْنَا
மேன்மையாக்கினோம்
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
عَلَىٰ
விட
بَعْضٍۘ
சிலரை
مِّنْهُم
அவர்களில்
مَّن
எவர்
كَلَّمَ
பேசினான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَرَفَعَ
இன்னும் உயர்த்தினான்
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
دَرَجَٰتٍۚ
பதவிகளால்
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
عِيسَى
ஈஸாவிற்கு
ٱبْنَ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
ٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை
وَأَيَّدْنَٰهُ
இன்னும் அவருக்கு உதவினோம்
بِرُوحِ
ஆத்மாவைக்கொண்டு
ٱلْقُدُسِۗ
பரிசுத்த(மான)
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا ٱقْتَتَلَ
சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
مِنۢ بَعْدِهِم
அவர்களுக்குப் பின்
مِّنۢ بَعْدِ
பின்னர்
مَا جَآءَتْهُمُ
அவர்களிடம் வந்தது
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான அத்தாட்சிகள்
وَلَٰكِنِ
என்றாலும்
ٱخْتَلَفُوا۟
வேறுபட்டார்கள்
فَمِنْهُم
அவர்களில்
مَّنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّن
எவர்
كَفَرَۚ
நிராகரித்தார்
وَلَوْ شَآءَ
இன்னும் நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا ٱقْتَتَلُوا۟
அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள்
وَلَٰكِنَّ
என்றாலும்
ٱللَّهَ
அல்லாஹ்
يَفْعَلُ
செய்தே ஆவான்
مَا
எதை
يُرِيدُ
நாடுவான்

Tilkar Rusulu faddalnaa ba'dahum 'alaa ba'd; minhum man kallamal laahu wa rafa'a ba'dahum darajaat; wa aatainaa 'Eesab na Maryamal baiyinaati wa ayyadnaahu bi Roohil Qudus; wa law shaaa'al laahu maqtatalal lazeena mimba'dihim mim ba'di maa jaaa'athumul baiyinaatu wa laakinikh talafoo faminhum man aamana wa minhum man kafar; wa law shaaa'al laahu maq tataloo wa laakinnallaaha yaf'alu maa yureed (

(நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரீல் என்னும்) "பரிசுத்த ஆத்மா"வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம்முடைய வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
أَنفِقُوا۟
தர்மம் புரியுங்கள்
مِمَّا رَزَقْنَٰكُم
எதிலிருந்து/உங்களுக்கு வழங்கினோம்
مِّن قَبْلِ
முன்னர்
أَن يَأْتِىَ
வருவதற்கு
يَوْمٌ
ஒரு நாள்
لَّا بَيْعٌ
வியாபாரம் இல்லை
فِيهِ
அதில்
وَلَا خُلَّةٌ
இன்னும் நட்பு இல்லை
وَلَا شَفَٰعَةٌۗ
இன்னும் பரிந்துரைஇல்லை
وَٱلْكَٰفِرُونَ هُمُ
நிராகரிப்பவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Yaa ayyuhal lazeena aamanoo anfiqoo mimmaa razaqnaakum min qabli ai yaatiya yawmul laa bai'un fee wa la khullatunw wa laa shafaa'ah; walkaa firoona humuz zaalimoon

நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
இறைவன்
إِلَّا هُوَ
அவனைத் தவிர
ٱلْحَىُّ
உயிருள்ளவன்
ٱلْقَيُّومُۚ
நிலையானவன்
لَا تَأْخُذُهُۥ
அவனைப் பீடிக்காது
سِنَةٌ
சிறு உறக்கம்
وَلَا نَوْمٌۚ
இன்னும் பெரும் நித்திரை
لَّهُۥ
அவனுக்கு
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
இன்னும் பூமியில்உள்ளவை
مَن
யார்
ذَا ٱلَّذِى
அவர்/எவர்
يَشْفَعُ
பரிந்துரைப்பார்
عِندَهُۥٓ
அவனிடத்தில்
إِلَّا
தவிர
بِإِذْنِهِۦۚ
அவனுடைய அனுமதியுடனே
يَعْلَمُ
அறிவான்
مَا
எது
بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னால்
وَمَا
இன்னும் எது
خَلْفَهُمْۖ
அவர்களுக்குப் பின்னால்
وَلَا يُحِيطُونَ
இன்னும் அவர்கள் சூழ மாட்டார்கள்
بِشَىْءٍ
எதையும்
مِّنْ عِلْمِهِۦٓ
அவனுடைய அறிவிலிருந்து
إِلَّا
தவிர
بِمَا
எதை
شَآءَۚ
நாடினான்
وَسِعَ
விசாலமாகஇருக்கிறது
كُرْسِيُّهُ
அவனுடைய பாதத்தலம்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَۖ
இன்னும் பூமி
وَلَا يَـُٔودُهُۥ
இன்னும் அவனுக்குச் சிரமமளிக்காது
حِفْظُهُمَاۚ وَهُوَ
அவ்விரண்டைப் பாதுகாப்பது/இன்னும் அவன்
ٱلْعَلِىُّ
மிக உயர்வானவன்
ٱلْعَظِيمُ
மிக மகத்தானவன்

Allahu laaa ilaaha illaa Huwal Haiyul Qaiyoom; laa taakhuzuhoo sinatunw wa laa nawm; lahoo maa fissamaawaati wa maa fil ard; man zal lazee yashfa'u indahooo illaa bi-iznih; ya'lamu maa baina aydeehim wa mww khalfahum wa laa yuheetoona bishai'im min 'ilmihee illaa bimaa shaaa'; wasi'a Kursiyyuhus samaawaati wal arda wa laa ya'ooduho hifzuhumaa; wa Huwal Aliyyul 'Azeem

அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.

Tafseer

لَآ إِكْرَاهَ
அறவே நிர்பந்தமில்லை
فِى ٱلدِّينِۖ
இஸ்லாமில்
قَد تَّبَيَّنَ
தெளிவாகி விட்டது
ٱلرُّشْدُ
சத்தியவழி
مِنَ ٱلْغَىِّۚ
வழிகேட்டிலிருந்து
فَمَن
எனவே எவர்
يَكْفُرْ
நிராகரிக்கிறார்
بِٱلطَّٰغُوتِ
ஷைத்தானை
وَيُؤْمِنۢ
இன்னும் நம்பிக்கை கொள்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
فَقَدِ ٱسْتَمْسَكَ
பற்றிப் பிடித்துக் கொண்டார்
بِٱلْعُرْوَةِ
வளையத்தை
ٱلْوُثْقَىٰ
மிக உறுதியானது
لَا ٱنفِصَامَ
அறவே துண்டிப்பு இல்லை
لَهَاۗ
அதற்கு
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
மிக அறிந்தவன்

Laaa ikraaha fid deeni qat tabiyanar rushdu minal ghayy; famai yakfur bit Taaghooti wa yu'mim billaahi faqadis tamsaka bil'urwatil wusqaa lan fisaama lahaa; wallaahu Samee'un 'Aleem

(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
وَلِىُّ
பொறுப்பாளன்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
يُخْرِجُهُم
அவர்களை வெளியேற்றுகிறான்
مِّنَ
இருந்து
ٱلظُّلُمَٰتِ
இருள்கள்
إِلَى
நோக்கி
ٱلنُّورِۖ
ஒளியை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
أَوْلِيَآؤُهُمُ
அவர்களின்தோழர்கள்
ٱلطَّٰغُوتُ
ஷைத்தான்(கள்)தான்
يُخْرِجُونَهُم
வெளியேற்றுகிறார்கள்/அவர்களை
مِّنَ ٱلنُّورِ
ஒளியிலிருந்து
إِلَى ٱلظُّلُمَٰتِۗ
இருள்களை நோக்கி
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Allaahu waliyyul lazeena aamanoo yukhrijuhum minaz zulumaati ilan noori wallazeena kafarooo awliyaaa'uhumut Taaghootu yukhrijoonahum minan noori ilaz zulumaat; ulaaa'ika Ashaabun Naari hum feehaa khaalidoon

(அன்றி) அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவைகள் அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின்பால் செலுத்துகின்றன. அன்றி அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
إِلَى ٱلَّذِى
எவனை
حَآجَّ
தர்க்கித்தான்
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமிடம்
فِى رَبِّهِۦٓ
அவருடைய இறைவன் விசயத்தில்
أَنْ ءَاتَىٰهُ
அல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால்
ٱلْمُلْكَ
ஆட்சியை
إِذْ قَالَ
கூறியபோது
إِبْرَٰهِۦمُ
இப்றாஹீம்
رَبِّىَ
என் இறைவன்
ٱلَّذِى
எவன்
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
وَيُمِيتُ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
قَالَ
கூறினான்
أَنَا۠
நான்
أُحْىِۦ
உயிர்ப்பிப்பேன்
وَأُمِيتُۖ
இன்னும் மரணிக்கச் செய்வேன்
قَالَ
கூறினார்
إِبْرَٰهِۦمُ
இப்றாஹீம்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَأْتِى
வருகிறான்
بِٱلشَّمْسِ
சூரியனைக் கொண்டு
مِنَ ٱلْمَشْرِقِ
கிழக்கிலிருந்து
فَأْتِ
எனவே நீ வா
بِهَا
அதைக் கொண்டு
مِنَ ٱلْمَغْرِبِ
மேற்கிலிருந்து
فَبُهِتَ
ஆகவே வாயடைக்கப்பட்டான்
ٱلَّذِى كَفَرَۗ
எவன்/நிராகரித்தான்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Alam tara ilal lazee Haaajja Ibraaheema fee Rabbiheee an aataahullaahul mulka iz qaala Ibraaheemu Rabbiyal lazee yuhyee wa yumeetu qaala ana uhyee wa yumeetu qaala ana uhyee wa umeetu qaala Ibraaheemu fa innal laaha yaatee bishshamsi minal mashriqi faati bihaa minal maghribi fabuhital lazee kafar; wallaahu laa yahdil qawmaz zaalimeen

(நபியே!) நீங்கள் ஒருவனை கவனித்தீர்களா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்ராஹீம் "எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கின்றானோ அவன்தான் என்னுடைய இறைவன்" என்று கூறியதற்கு, அவன் "நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்" என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் "(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத் திசையில் உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு" எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை.

Tafseer

أَوْ
அல்லது
كَٱلَّذِى
எவரைப் போன்று
مَرَّ
கடந்தார்
عَلَىٰ قَرْيَةٍ
ஒரு கிராமத்தை
وَهِىَ
அது
خَاوِيَةٌ
விழுந்திருக்கிறது
عَلَىٰ
மீது
عُرُوشِهَا
அதன் முகடுகள்
قَالَ
கூறினார்
أَنَّىٰ
எவ்வாறு
يُحْىِۦ
உயிர்ப்பிப்பான்
هَٰذِهِ
இதை
ٱللَّهُ
அல்லாஹ்
بَعْدَ
பின்னர்
مَوْتِهَاۖ
அது இறந்த
فَأَمَاتَهُ
எனவே அவருக்கு மரணத்தைக் கொடுத்தான்
ٱللَّهُ مِا۟ئَةَ
அல்லாஹ்/நூறு
عَامٍ
ஆண்டுகள் (வரை)
ثُمَّ
பிறகு
بَعَثَهُۥۖ
அவரைஉயிர்ப்பித்தான்
قَالَ
கூறினான்
كَمْ
எத்தனை(காலம்)
لَبِثْتَۖ
தங்கினீர்
قَالَ
கூறினார்
لَبِثْتُ
தங்கினேன்
يَوْمًا
ஒரு நாள்
أَوْ
அல்லது
بَعْضَ
சிறிதளவு
يَوْمٍۖ
ஒரு நாள்
قَالَ
கூறினான்
بَل
மாறாக
لَّبِثْتَ
தங்கினீர்
مِا۟ئَةَ
நூறு
عَامٍ
ஆண்டு(கள்)
فَٱنظُرْ
பார்
إِلَىٰ طَعَامِكَ
உன் உணவை
وَشَرَابِكَ
இன்னும் உன் பானத்தை
لَمْ يَتَسَنَّهْۖ
அது கெட்டுப் போகவில்லை
وَٱنظُرْ
இன்னும் பார்
إِلَىٰ حِمَارِكَ
உன் கழுதையை
وَلِنَجْعَلَكَ
இன்னும் நாம் உம்மை ஆக்குவதற்காக
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
لِّلنَّاسِۖ
மக்களுக்கு
وَٱنظُرْ
இன்னும் பார்
إِلَى ٱلْعِظَامِ
எலும்புகளை
كَيْفَ نُنشِزُهَا
எப்படி/அவற்றை அசைத்து உயர்த்துகிறோம்
ثُمَّ
பிறகு
نَكْسُوهَا
அதற்கு போர்த்துகிறோம்
لَحْمًاۚ
மாமிசத்தை
فَلَمَّا تَبَيَّنَ
தெளிவான போது
لَهُۥ
அவருக்கு
قَالَ
கூறினார்
أَعْلَمُ
அறிகிறேன்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ
எல்லா
شَىْءٍ
பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Aw kallazee marra 'alaa qaryatinw wa hiya khaawiyatun 'alaa 'urooshihaa qaala annaa yuhyee haazihil laahu ba'da mawtihaa fa amaatahul laahu mi'ata 'aamin suumma ba'asahoo qaala kam labista qaala labistu yawman aw ba'da yawmin qaala bal labista mi'ata 'aamin fanzur ilaa ta'aamika wa sharaabika lam yatasannah wanzur ilaa himaarika wa linaj'alaka Aayatal linnaasi wanzur ilal'izaami kaifa nunshizuhaa summa naksoohaa lahmaa; falammaa tabiyana lahoo qaala a'lamu annal laaha 'alaakulli shai'in Qadeer

(நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) "இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்தபின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி "இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்" எனக் கேட்க "ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்" எனக் கூறினார். (அதற்கு அவன்) "அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள். (இதோ!) உங்களுடைய உணவையும், உங்களுடைய பானத்தையும் பாருங்கள். (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உங்களுடைய கழுதையைப் பாருங்கள். (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கின்றது.) இன்னும் உங்களை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர் களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்பு களையும் நீங்கள் பாருங்கள். எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது (அவர்) "நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன்" என்று கூறினார்.

Tafseer

وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை
إِبْرَٰهِۦمُ
இப்றாஹீம்
رَبِّ
என் இறைவா!
أَرِنِى
எனக்குக் காட்டு
كَيْفَ
எப்படி
تُحْىِ
உயிர்ப்பிக்கிறாய்
ٱلْمَوْتَىٰۖ
இறந்தவர்களை
قَالَ
கூறினான்
أَوَلَمْ تُؤْمِنۖ
நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?
قَالَ
கூறினார்
بَلَىٰ
அவ்வாறில்லை
وَلَٰكِن
எனினும்
لِّيَطْمَئِنَّ
நிம்மதி பெறுவதற்காக
قَلْبِىۖ
என் உள்ளம்
قَالَ
கூறினான்
فَخُذْ
எனவே பிடிப்பீராக
أَرْبَعَةً
நான்கை
مِّنَ
இல்
ٱلطَّيْرِ
பறவைகள்
فَصُرْهُنَّ
அவற்றைப் பழக்குவீராக
إِلَيْكَ
உம் பக்கம்
ثُمَّ
பிறகு
ٱجْعَلْ
ஆக்குவீராக
عَلَىٰ
மீது
كُلِّ
எல்லா
جَبَلٍ
மலை
مِّنْهُنَّ
அவற்றிலிருந்து
جُزْءًا
ஒரு பாகத்தை
ثُمَّ ٱدْعُهُنَّ
பிறகு/அவற்றை கூப்பிடுவீராக
يَأْتِينَكَ
அவை உம்மிடம் வரும்
سَعْيًاۚ
விரைந்து
وَٱعْلَمْ
இன்னும் அறிந்துகொள்வீராக
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Wa iz qaala Ibraaheemu Rabbi arinee kaifa tuhyil mawtaa qaala awa lam tu'min qaala balaa wa laakil liyatma'inna qalbee qaala fakhuz arab'atam minal tairi fasurhunna ilaika summaj 'al a'alaa kulli jabalim minhunna juz'an sumaad 'uhunna yaateenaka sa'yaa; wa'lam annal laaha 'Azeezun Hakeem

அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) "என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய். (அதை) நீ எனக்குக் காண்பி" எனக் கூறியபோது, அவன் (இதை) "நீங்கள் நம்பவில்லையா?" என்று கேட்டான். (அதற்கு) அவர் "நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)" எனக் கூறினார். (அதற்கவன்) "நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) "நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.

Tafseer