Skip to main content

مَّثَلُ
உதாரணம்
ٱلَّذِينَ يُنفِقُونَ
தர்மம் புரிபவர்கள்
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்று
حَبَّةٍ
ஒரு விதை
أَنۢبَتَتْ
அது முளைக்க வைத்தது
سَبْعَ
ஏழு
سَنَابِلَ
கதிர்களை
فِى كُلِّ
ஒவ்வொன்றிலும்
سُنۢبُلَةٍ
கதிர்
مِّا۟ئَةُ
நூறு
حَبَّةٍۗ
விதை
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
يُضَٰعِفُ
பன்மடங்காக்குகிறான்
لِمَن
எவருக்கு
يَشَآءُۗ
நாடுவான்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
وَٰسِعٌ
விசாலமானவன்
عَلِيمٌ
மிக அறிந்தவன்

Masalul lazeena yunfiqoona amwaalahum fee sabeelil laahi kamasali habbatin ambatat sab'a sanaabila fee kulli sumbulatim mi'atu habbah; wallaahu yudaa'ifu limai yashaaa; wallaahu Waasi'un 'Aleem

(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து உற்பத்தியாயின.) அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை பின்னும்) இரட்டிப்பாக்குகின்றான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனுமாகவும் இருக்கின்றான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُنفِقُونَ
தர்மம் புரிகிறார்கள்
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثُمَّ لَا
பிறகு தொடர்ந்து செய்யமாட்டார்கள்
مَآ
எதை
أَنفَقُوا۟
தர்மம் புரிந்தார்கள்
مَنًّا
சொல்லிக் காட்டுவது
وَلَآ أَذًىۙ
இன்னும் துன்புறுத்துவதில்லை
لَّهُمْ
அவர்களுக்கு
أَجْرُهُمْ
அவர்களின் கூலி
عِندَ
இடம்
رَبِّهِمْ
அவர்களின் இறைவன்
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்

Allazeena yunfiqoona amwaalahum fee sabeelillaahi summa laa yutbi'oona maaa anfaqoo mannanw wa laaa azal lahum ajruhum 'inda Rabbihim; wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon

எவர்கள் தங்களுடைய பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையும், துன்பத்தையும் (அதனோடு) சேர்க்கவில்லையோ அவர்களுக்குரிய கூலி அவர் களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

قَوْلٌ
சொல்
مَّعْرُوفٌ
நல்லது
وَمَغْفِرَةٌ
இன்னும் மன்னிப்பு
خَيْرٌ
சிறந்தது
مِّن
விட
صَدَقَةٍ
தர்மம்
يَتْبَعُهَآ
அதைத் தொடர்கிறது
أَذًىۗ
துன்புறுத்துவது
وَٱللَّهُ
அல்லாஹ்
غَنِىٌّ
மகா செல்வன்
حَلِيمٌ
பெரும் சகிப்பாளன்

Qawlum ma'roofunw wa maghfiratun khairum min sadaqatiny yatba'uhaaa azaa; wallaahu Ghaniyyun Haleem

(தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அன்றி, அல்லாஹ் தேவையற்றவனாகவும் பொறுமையாளனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تُبْطِلُوا۟
பாழாக்காதீர்கள்
صَدَقَٰتِكُم
உங்கள் தர்மங்களை
بِٱلْمَنِّ
சொல்லிக் காட்டுவது
وَٱلْأَذَىٰ
இன்னும் துன்புறுத்துவது
كَٱلَّذِى
எவரைப் போன்று
يُنفِقُ
தர்மம் செய்கிறான்
مَالَهُۥ
தனது செல்வத்தை
رِئَآءَ
காட்டுவதற்காக
ٱلنَّاسِ
மக்களுக்கு
وَلَا يُؤْمِنُ
இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டான்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
இன்னும் இறுதி நாள்
فَمَثَلُهُۥ
அவனின் உதாரணம்
كَمَثَلِ
உதாரணத்தைப்போன்று
صَفْوَانٍ
வழுக்கைப் பாறையின்
عَلَيْهِ
அதன் மீது
تُرَابٌ
மண்
فَأَصَابَهُۥ
அதை அடைந்தது
وَابِلٌ
அடை மழை
فَتَرَكَهُۥ
அதை விட்டுவிட்டது
صَلْدًاۖ
வெறும் பாறையாக
لَّا يَقْدِرُونَ
ஆற்றல் பெறமாட்டார்கள்
عَلَىٰ شَىْءٍ
எதையும்
مِّمَّا
எதிலிருந்து
كَسَبُوا۟ۗ
செய்தார்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
கூட்டத்தை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Yaaa ayyuhal lazeena aamanoo laa tubtiloo sadaqaatikum bilmanni wal azaa kallazee yunfiqu maalahoo ri'aaa'an naasi wa laa yu'minu billaahi wal yawmil aakhiri famasaluhoo kamasali safwaanin 'alaihi turaabun fa asaabahoo waabilun fatara kahoo saldaa; laa yaqdiroona 'alaa shai'im mimmaa kasaboo; wallaahu laa yahdil qawmal kaafireen

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இத்தகையவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்திற்கு (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.

Tafseer

وَمَثَلُ
இன்னும் உதாரணம்
ٱلَّذِينَ
எவர்களின்
يُنفِقُونَ
தர்மம் புரிகிறார்கள்
أَمْوَٰلَهُمُ
தங்கள்செல்வங்களை
ٱبْتِغَآءَ
தேடி
مَرْضَاتِ
திருப்தியை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَتَثْبِيتًا
இன்னும் உறுதிப்படுத்துவது
مِّنْ أَنفُسِهِمْ
தங்கள் உள்ளங்களில்
كَمَثَلِ
உதாரணத்தைப்போன்று
جَنَّةٍۭ
ஒரு தோட்டம்
بِرَبْوَةٍ
உயர்ந்த பூமியில்
أَصَابَهَا
அதை அடைந்தது
وَابِلٌ
அடை மழை
فَـَٔاتَتْ
ஆகவே அது கொடுத்தது
أُكُلَهَا
அதனுடைய பலனை
ضِعْفَيْنِ
இரு மடங்குகளாக
فَإِن لَّمْ
அதை அடையாவிட்டால்
وَابِلٌ
அடை மழை
فَطَلٌّۗ وَٱللَّهُ
சிறுதூறல்/அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Wa masalul lazeena yunfiqoona amwaalahumub ti ghaaaa'a mardaatil laahi wa tasbeetam min anfusihim kamasali jannatim birabwatin asaabahaa waabilun fa aatat ukulahaa di'faini fa il lam yusibhaa waabilun fatall; wallaahu bimaa ta'maloona Baseer

எவர்கள் தங்களுடைய பொருளை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்களுடைய உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கின்றது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகின்றது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. அன்றி, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

Tafseer

أَيَوَدُّ
விரும்புவாரா?
أَحَدُكُمْ
உங்களில் ஒருவர்
أَن تَكُونَ
இருப்பது
لَهُۥ
அவருக்கு
جَنَّةٌ
ஒரு தோட்டம்
مِّن نَّخِيلٍ
பேரிச்சங்கனிகளின்
وَأَعْنَابٍ
இன்னும் திராட்சைகள்
تَجْرِى
ஓடுகின்றன
مِن تَحْتِهَا
அதன் கீழிருந்து
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
لَهُۥ
அவருக்கு
فِيهَا
அதில்
مِن
இருந்து
كُلِّ ٱلثَّمَرَٰتِ
எல்லா / பழங்கள்
وَأَصَابَهُ
இன்னும் அவரை அடைந்தது
ٱلْكِبَرُ
முதுமை
وَلَهُۥ
இன்னும் அவருக்கு
ذُرِّيَّةٌ
குழந்தைகள்
ضُعَفَآءُ
இயலாதவர்கள்
فَأَصَابَهَآ
அதை அடைந்தது
إِعْصَارٌ
புயல் காற்று
فِيهِ نَارٌ
அதில் / நெருப்பு
فَٱحْتَرَقَتْۗ
எரிந்து விட்டது
كَذَٰلِكَ
அவ்வாறே
يُبَيِّنُ
விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
நீங்கள்சிந்திப்பதற்காக

Ayawaddu ahadukum an takoona lahoo jannatum min nakheelinw wa a'naabin tajree min tahtihal anhaaru lahoo feehaa min kullis samaraati wa asaabahul kibaru wa lahoo zurriyyatun du'afaaa'u fa asaabahaaa i'saarun feehi naarun fahtaraqat; kazaalika yubaiyinul laahu lakumul aayaati la'allakum tatafakkaroon

உங்களில் யார்தான் (இதனை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சையின் ஒரு தோப்பு இருக்கின்றது. அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து எல்லா வகை கனிவர்க்கங்களும் அவருக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. (சம்பாதிக்க) இயலாத பல சிறு குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். (இந்த நிலைமையில்) நெருப்புடன் கூடிய புயற்காற்று அடித்து அதனை எரித்துவிட்டது. (இத்தகைய நிலைமையை எவர்தான் விரும்புவார்?) நீங்கள் ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக, அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு இவ்வாறு (உதாரணங்களைக் கொண்டு) தெளிவுபடுத்துகின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
أَنفِقُوا۟
தர்மம் புரியுங்கள்
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
مَا
எது
كَسَبْتُمْ
சம்பாதித்தீர்கள்
وَمِمَّآ
இன்னும் எதிலிருந்து
أَخْرَجْنَا
வெளியாக்கினோம்
لَكُم
உங்களுக்கு
مِّنَ
இருந்து
ٱلْأَرْضِۖ
பூமி
وَلَا تَيَمَّمُوا۟
இன்னும் நாடாதீர்கள்
ٱلْخَبِيثَ
கெட்டதை
مِنْهُ
அதில்
تُنفِقُونَ
தர்மம் புரிகிறீர்கள்
وَلَسْتُم
நீங்கள் இல்லை
بِـَٔاخِذِيهِ إِلَّآ
அதை வாங்குபவர்களாக/தவிர
أَن تُغْمِضُوا۟
நீங்கள்கண்மூடியவர்களாக
فِيهِۚ
அதில்
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَنِىٌّ
மகா செல்வன்
حَمِيدٌ
பெரும் புகழாளன்

Yaaa 'ayyuhal lazeena aamanooo anfiqoo min taiyibaati maa kasabtum wa mimmaaa akhrajuaa lakum minal ardi wa laa tayammamul khabeesa minhu tunfiqoona wa lastum bi aakhizeehi illaaa an tughmidoo feeh; wa'lamooo annal laaha Ghaniyyun Hameed

நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வைகளிலிருந்தும் நல்லவைகளையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாக அன்றி வாங்கிக் கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

Tafseer

ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
يَعِدُكُمُ
உங்களுக்கு அச்சுறுத்துகிறான்
ٱلْفَقْرَ
வறுமையை
وَيَأْمُرُكُم
இன்னும் உங்களுக்கு ஏவுகிறான்
بِٱلْفَحْشَآءِۖ
மானக்கேடானதை
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعِدُكُم
உங்களுக்கு வாக்களிக்கிறான்
مَّغْفِرَةً
மன்னிப்பை
مِّنْهُ
தன்னிடமிருந்து
وَفَضْلًاۗ
இன்னும் அருளை
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
وَٰسِعٌ
விசாலமானவன்
عَلِيمٌ
மிக அறிந்தவன்

Ash Shaitaanu ya'idukumul faqra wa yaamurukum bilfahshaaa'i wallaahu ya'idukum maghfiratam minhu wa fadlaa; wallaahu Waasi'un 'Aleem

(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கின்றான். அன்றி, அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يُؤْتِى
தருகிறான்
ٱلْحِكْمَةَ
ஞானத்தை
مَن يَشَآءُۚ
எவர்/நாடுகிறான்
وَمَن يُؤْتَ
இன்னும் எவர்/தரப்படுவார்
ٱلْحِكْمَةَ
ஞானம்
فَقَدْ
திட்டமாக
أُوتِىَ
தரப்பட்டார்
خَيْرًا كَثِيرًاۗ
நன்மை/அதிகமான
وَمَا يَذَّكَّرُ
உபதேசம் பெறமாட்டார்
إِلَّآ أُو۟لُوا۟
தவிர/அறிவாளிகள்

Yu'til Hikmata mai yashaaa'; wa mai yutal Hikmata faqad ootiya khairan kaseeraa; wa maa yazzakkaru illaaa ulul albaab

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே "ஹிக்மா" (இறைஞானம், நுண்ணறி)வை கொடுக்கின்றான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, இறைஞானத்தைக் கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெறமாட்டார்கள்.

Tafseer

وَمَآ أَنفَقْتُم
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
مِّن نَّفَقَةٍ
தர்மத்தில்
أَوْ
அல்லது
نَذَرْتُم
நேர்ந்து கொண்டீர்கள்
مِّن نَّذْرٍ
நேர்ச்சையில்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَعْلَمُهُۥۗ
அதை நன்கறிவான்
وَمَا
இல்லை
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
مِنْ أَنصَارٍ
உதவியாளர்களில்

Wa maaa anfaqtum min nafaqatin aw nazartum min nazrin fa innal laaha ya'lamuh; wa maa lizzaalimeena min ansaar

(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அன்றி (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக் காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை.

Tafseer