Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا يَسْخَرْ
பரிகாசம் செய்ய வேண்டாம்
قَوْمٌ
ஒரு கூட்டம்
مِّن قَوْمٍ
இன்னொரு கூட்டத்தை
عَسَىٰٓ أَن
அவர்கள் இருக்கலாம்
خَيْرًا
சிறந்தவர்களாக
مِّنْهُمْ
இவர்களை விட
وَلَا نِسَآءٌ
பெண்களும் பரிகாசம் செய்ய வேண்டாம்
مِّن نِّسَآءٍ
பெண்களை
عَسَىٰٓ أَن
அவர்கள் இருக்கலாம்
خَيْرًا
சிறந்தவர்களாக
مِّنْهُنَّۖ
இவர்களை விட
وَلَا تَلْمِزُوٓا۟
இன்னும் குத்திப் பேச வேண்டாம்
أَنفُسَكُمْ
உங்களை
وَلَا تَنَابَزُوا۟
பட்டப் பெயர் சூட்டாதீர்கள்
بِٱلْأَلْقَٰبِۖ
தீய பட்டப் பெயர்களைக் கொண்டு
بِئْسَ ٱلِٱسْمُ
பெயர்களில் மிக கெட்டது
ٱلْفُسُوقُ
பாவிகள்
بَعْدَ
பின்னர்
ٱلْإِيمَٰنِۚ
நம்பிக்கை கொண்டதன்
وَمَن لَّمْ
யார் திருந்தி திரும்பவில்லையோ
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Yaaa ayyuhal lazeena aamanoo laa yaskhar qawmum min qawmin 'asaaa anyyakoonoo khairam minhum wa laa nisaaa'um min nisaaa'in 'Asaaa ay yakunna khairam minhunna wa laa talmizooo bil alqaab; bi'sal ismul fusooqu ba'dal eemaan; wa mal-lam yatub fa-ulaaa'ika humuz zaalimoon

நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱجْتَنِبُوا۟
தவிர்த்துவிடுங்கள்!
كَثِيرًا
அதிகமானவற்றை
مِّنَ ٱلظَّنِّ
எண்ணங்களில்
إِنَّ بَعْضَ
நிச்சயமாக சில
ٱلظَّنِّ
எண்ணங்களில்
إِثْمٌۖ
பாவமாகும்
وَلَا تَجَسَّسُوا۟
ஆராயாதீர்கள்!
وَلَا يَغْتَب
புறம் பேசவேண்டாம்
بَّعْضُكُم
உங்களில் சிலர்
بَعْضًاۚ
சிலரைப் பற்றி
أَيُحِبُّ
விரும்புவாரா?
أَحَدُكُمْ
உங்களில் ஒருவர்
أَن يَأْكُلَ
சாப்பிட
لَحْمَ
மாமிசத்தை
أَخِيهِ
தன் சகோதரனின்
مَيْتًا
இறந்த நிலையில்
فَكَرِهْتُمُوهُۚ
அதை நீங்கள் வெறுப்பீர்களே!
وَٱتَّقُوا۟
அஞ்சிக்கொள்ளுங்கள்!
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
تَوَّابٌ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Yaaa ayyuhal lazeena aamanuj taniboo kaseeram minaz zanni inna ba'daz zanniismunw wa laa tajassasoo wa la yaghtab ba'dukum ba'daa; a yuhibbu ahadukum any yaakula lahma akheehi maitan fakarih tumooh; wattaqul laa; innal laaha tawwaabur Raheem

நம்பிக்கையாளர்களே! அநேகமாக சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
إِنَّا
நிச்சயமாக நாம்
خَلَقْنَٰكُم
உங்களைப் படைத்தோம்
مِّن ذَكَرٍ
ஓர் ஆணிலிருந்து
وَأُنثَىٰ
இன்னும் ஒரு பெண்
وَجَعَلْنَٰكُمْ
இன்னும் உங்களை நாம் ஆக்கினோம்
شُعُوبًا
பல நாட்டவர்களாக(வும்)
وَقَبَآئِلَ
பல குலத்தவர்களாகவும்
لِتَعَارَفُوٓا۟ۚ
நீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காக
إِنَّ
நிச்சயமாக
أَكْرَمَكُمْ
உங்களில் மிக கண்ணியமானவர்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
أَتْقَىٰكُمْۚ
உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Yaaa ayyuhan naasu innaa khalaqnaakum min zakarinw wa unsaa wa ja'alnaakum shu'oobanw wa qabaaa'ila lita'aarafoo inna akramakum 'indal laahi atqaakum innal laaha 'Aleemun khabeer

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قَالَتِ
கூறுகின்றனர்
ٱلْأَعْرَابُ
கிராமத்து அரபிகள்
ءَامَنَّاۖ
நாங்கள் ஈமான் கொண்டோம்
قُل
நீர் கூறுவீராக!
لَّمْ تُؤْمِنُوا۟
நீங்கள் ஈமான் கொள்ளவில்லை
وَلَٰكِن
என்றாலும்
قُولُوٓا۟
கூறுங்கள்!
أَسْلَمْنَا
நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்
وَلَمَّا يَدْخُلِ
நுழையவில்லை
ٱلْإِيمَٰنُ
ஈமான்
فِى قُلُوبِكُمْۖ
உங்கள் உள்ளங்களில்
وَإِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
لَا يَلِتْكُم
உங்களுக்கு குறைக்க மாட்டான்
مِّنْ أَعْمَٰلِكُمْ
உங்கள் செயல்களில்
شَيْـًٔاۚ
எதையும்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Qaalatil-A 'raabu aamannaa qul lam tu'minoo wa laakin qoolooo aslamnaa wa lamma yadkhulil eemaanu fee quloobikum wa in tutee'ul laaha wa Rasoolahoo laa yalitkum min a'maalikum shai'aa; innal laaha Ghafoorur Raheem

(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்களுடைய உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக்கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின், உங்களுடைய நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்."

Tafseer

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை(யும்)
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
ثُمَّ
பிறகு
لَمْ يَرْتَابُوا۟
அவர்கள் சந்தேகிக்கவில்லை
وَجَٰهَدُوا۟
இன்னும் போரிடுகிறார்கள்
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களாலும்
وَأَنفُسِهِمْ
தங்கள் உயிர்களாலும்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِۚ أُو۟لَٰٓئِكَ
அல்லாஹ்வின்/அத்தகையவர்கள்தான்
ٱلصَّٰدِقُونَ
உண்மையாளர்கள்

Innamal muu'minoonal lazeena aamanoo billaahi wa Rasoolihee summa lam yartaaboo wa jaahadoo biamwaalihim wa anfusihim fee sabeelil laah; ulaaaika humus saadiqoon

(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இத்தகைய வர்கள்தாம் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَتُعَلِّمُونَ
அறிவிக்கின்றீர்களா?
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
بِدِينِكُمْ
உங்கள் நம்பிக்கையை
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا فِى
வானங்களில் உள்ளவற்றை(யும்)
وَمَا فِى
பூமியில் உள்ளவற்றையும்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Qul atu'allimoonal laaha bideenikum wallaahu ya'lamu maa fis samaawaati wa maa fil ard; wallaahu bikulli shai'in 'Aleem

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: ("நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்களென்று) உங்கள் வழிபாட்டை(யும், பக்தியையும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லாஹ்வோ வானங் களிலும் பூமியிலும் உள்ளவைகளை அறிந்தவன். (அன்றி, மற்ற) எல்லா வஸ்துக்களையுமே அல்லாஹ் நன்கறிந்தவன்."

Tafseer

يَمُنُّونَ
உபகாரமாக கூறுகின்றனர்
عَلَيْكَ
உம்மீது
أَنْ أَسْلَمُوا۟ۖ
தாங்கள் முஸ்லிம்களாக ஆனதை
قُل
நீர் கூறுவீராக!
لَّا تَمُنُّوا۟
உபகாரமாக கூறாதீர்கள்
عَلَىَّ
என் மீது
إِسْلَٰمَكُمۖ
உங்கள் இஸ்லாமை
بَلِ
மாறாக
ٱللَّهُ
அல்லாஹ்தான்
يَمُنُّ
உபகாரமாகக் கூறுகின்றான்
عَلَيْكُمْ
உங்கள் மீது
أَنْ هَدَىٰكُمْ
அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக
لِلْإِيمَٰنِ
ஈமானின் பக்கம்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Yamunnoona 'alaika an aslamoo qul laa tamunnoo 'alaiya Islaamakum balillaahu yamunnu 'alaikum an hadaakum lil eemaani in kuntum saadiqeen

(நபியே!) அவர்கள் இஸ்லாமில் சேர்ந்ததன் காரணமாக உங்கள்மீது உபகாரம் செய்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இஸ்லாமில் சேர்ந்ததனால் நம்மீது உபகாரம் செய்துவிட்டதாக எண்ணாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகும்படி செய்ததன் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கின்றான். நீங்கள் (உங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதனை நன்கறிந்து கொள்வீர்கள்.)"

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
غَيْبَ
மறைவான விஷயங்களை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
وَٱللَّهُ
அல்லாஹ்
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்கின்றவற்றை

Innal laaha ya'lamu ghaibas samaawaati wal ard; wallaahu baseerum bimaa ta'maloon

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நன்கறிந்தவன். ஆகவே, நீங்கள் செய்பவைகளையும் அல்லாஹ் உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

Tafseer