Skip to main content

وَيُرِيكُمْ
அவன் உங்களுக்கு காண்பிக்கிறான்
ءَايَٰتِهِۦ
தனது அத்தாட்சிகளை
فَأَىَّ
எதை
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تُنكِرُونَ
நீங்கள் மறுப்பீர்கள்

Wa yureekum Aayaatihee fa ayya Aayaatil laahi tunkiroon

இன்னும், அவன் உங்களுக்குத் தன்னுடைய (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்?

Tafseer

أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَيَنظُرُوا۟
அவர்கள் பார்த்திருப்பார்களே!
كَيْفَ كَانَ
எப்படி இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلَّذِينَ مِن
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
كَانُوٓا۟
இருந்தனர்
أَكْثَرَ
அதிகமாக(வும்)
مِنْهُمْ
இவர்களை விட
وَأَشَدَّ
மிக பலசாலிகளாகவும்
قُوَّةً
வலிமையால்
وَءَاثَارًا
இன்னும் அடையாளங்களால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَمَآ أَغْنَىٰ
ஆனால், தடுக்கவில்லை
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தது

Afalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qablihim; kaanoo aksara minhum wa ashadda quwwatanw wa aasaaran fil ardi famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon

(நிராகரிக்கும்) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்க வில்லையா? அவ்வாறாயின், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். அவர்களோ, இவர்களைவிட மக்கள் தொகையில் அதிகமானவர் களாகவும் பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் தேடி சேகரித்து வைத்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

Tafseer

فَلَمَّا جَآءَتْهُمْ
அவர்களிடம் வந்தபோது
رُسُلُهُم
அவர்களின் தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
فَرِحُوا۟
அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
بِمَا عِندَهُم
தங்களிடம் இருந்ததைக் கொண்டு
مِّنَ ٱلْعِلْمِ
திறமைகள்
وَحَاقَ
இன்னும் சூழ்ந்து கொண்டது
بِهِم
அவர்களை
مَّا كَانُوا۟
எது/இருந்தார்களோ
بِهِۦ
அதை
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களக

Falammaa jaaa'at hum Rusuluhum bilbaiyinaati farihoo bimaa 'indahum minal 'ilmi wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon

அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் பண்ணி நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (தொழில்) திறமைகளைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

Tafseer

فَلَمَّا رَأَوْا۟
அவர்கள் பார்த்த போது
بَأْسَنَا
நமது தண்டனையை
قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَحْدَهُۥ
அவன் ஒருவனை
وَكَفَرْنَا
நிராகரித்து விட்டோம்
بِمَا كُنَّا
எதை/இருந்தோமோ
بِهِۦ
அதை
مُشْرِكِينَ
இணைவைப்பவர்களாக

Falammaa ra aw baasanaa qaalooo aamannaa billaahi wahdahoo wa kafarnaa bimaa kunnaa bihee mushrikeen

நம்முடைய வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், "அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொண்டு தாங்கள் இணை வைத்து வணங்கிய தெய்வங்களை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.

Tafseer

فَلَمْ يَكُ
ஆனால், இருக்கவில்லை
يَنفَعُهُمْ
அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக
إِيمَٰنُهُمْ
அவர்களின் ஈமான்
لَمَّا رَأَوْا۟
அவர்கள் பார்த்த போது
بَأْسَنَاۖ
நமது தண்டனையை
سُنَّتَ ٱللَّهِ
அல்லாஹ்வின் நடைமுறையைத்தான்
ٱلَّتِى
எது
قَدْ خَلَتْ
சென்றுவிட்டது
فِى عِبَادِهِۦۖ
அவனது அடியார்கள் விஷயத்தில்
وَخَسِرَ
நஷ்டமடைந்தார்(கள்)
هُنَالِكَ
அப்போது
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்

Falam yaku tanfa 'uhum eemaanuhum lammaa ra-aw baasana sunnatal laahil latee qad khalat fee 'ibaadihee wa khasira hunaalikal kaafiroon

ஆயினும், நம்முடைய வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வினுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.

Tafseer