Skip to main content

سَابِقُوٓا۟
முந்துங்கள்
إِلَىٰ مَغْفِرَةٍ
மன்னிப்பின் பக்கமும்
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனின்
وَجَنَّةٍ
இன்னும் சொர்க்கத்தின் பக்கமும்
عَرْضُهَا
அதன் அகலம்
كَعَرْضِ
அகலத்தைப் போல
ٱلسَّمَآءِ
வானம்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
أُعِدَّتْ
அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்காக
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَرُسُلِهِۦۚ
அவனது தூதரையும்
ذَٰلِكَ
அது
فَضْلُ
சிறப்பாகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُؤْتِيهِ
அதை அவன் கொடுக்கின்றான்
مَن يَشَآءُۚ
அவன் நாடுகின்றவர்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
ذُو ٱلْفَضْلِ
சிறப்புடையவன்
ٱلْعَظِيمِ
மகத்தான

Saabiqooo ilaa maghfiratim mir Rabbikum wa jannatin 'arduhaa ka-'ardis samaaa'i wal ardi u'iddat lillazeena aamanoo billaahi wa Rusulih; zaalika fadlul laahi yu'teehi many yashaaa'; wal laahu zul fadlil 'azeem

ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சுவனபதியை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சுவனபதியின் விஸ்தீரணமோ வானம், பூமியின் விஸ்தீரணத்தைப்போல் இருக்கின்றது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வினுடைய அருளாகும். இதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக் கின்றான். அல்லாஹ் மகத்தான அருளாளன்!

Tafseer

مَآ أَصَابَ
ஏற்படுவதில்லை
مِن مُّصِيبَةٍ
ஒரு சோதனை
فِى ٱلْأَرْضِ
பூமியிலும்
وَلَا فِىٓ
உங்களிலும்
إِلَّا فِى
தவிர/விதியில்இருந்தே
مِّن قَبْلِ
முன்னர்
أَن نَّبْرَأَهَآۚ
அதை நாம் உருவாக்குவதற்கு
إِنَّ
நிச்சயமாக
ذَٰلِكَ
இது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
يَسِيرٌ
மிக எளிதானதாகும்

Maaa asaaba mim musee batin fil ardi wa laa feee anfusikum illaa fee kitaabim min qabli an nabra ahaa; innaa zaalika 'alal laahi yaseer

(பொதுவாக) பூமியிலோ அல்லது (சொந்தமாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே!

Tafseer

لِّكَيْلَا تَأْسَوْا۟
ஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்)
عَلَىٰ مَا
உங்களுக்கு தவறி விட்டதற்காக
وَلَا تَفْرَحُوا۟
நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும்
بِمَآ ءَاتَىٰكُمْۗ
அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
كُلَّ
எல்லோரையும்
مُخْتَالٍ
அகம்பாவக்காரர்கள்
فَخُورٍ
பெருமையடிப்பவர்கள்

Likailaa taasaw 'alaa maa faatakum wa laa tafrahoo bimaaa aataakum; wallaahu laa yuhibbu kulla mukhtaalin fakhoor

உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَبْخَلُونَ
கருமித்தனம் காட்டுகிறார்கள்
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
ٱلنَّاسَ
மக்களுக்கு
بِٱلْبُخْلِۗ
கருமித்தனத்தை
وَمَن
யார்
يَتَوَلَّ
விலகுவாரோ
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
ٱلْغَنِىُّ
மகா நிறைவானவன்
ٱلْحَمِيدُ
மகா புகழாளன்

Allazeeena yabkhaloona wa yaamuroonan naasa bil bukhl; wa many yatawalla fa innal laaha Huwal Ghaniyyul Hameed

எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கின்றானோ (அது அவனுக்குத் தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் பெரும் சீமானாகவும் பெரும் புகழுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَقَدْ أَرْسَلْنَا
திட்டவட்டமாக அனுப்பினோம்
رُسُلَنَا
நமது தூதர்களை
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
وَأَنزَلْنَا
நாம் இறக்கினோம்
مَعَهُمُ
அவர்களுடன்
ٱلْكِتَٰبَ
வேதத்தை(யும்)
وَٱلْمِيزَانَ
தராசையும்
لِيَقُومَ
நிலைநிறுத்துவதற்காக
ٱلنَّاسُ
மக்கள்
بِٱلْقِسْطِۖ
நீதத்தை
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
ٱلْحَدِيدَ
இரும்பையும்
فِيهِ
அதில்
بَأْسٌ
வலிமை(யும்)
شَدِيدٌ
கடுமையான(து)
وَمَنَٰفِعُ
இன்னும் பல பலன்களும்
لِلنَّاسِ
மக்களுக்கு
وَلِيَعْلَمَ
அறிவதற்காகவும்
ٱللَّهُ
அல்லாஹ்
مَن يَنصُرُهُۥ
எவர்/அவனுக்கு உதவி செய்கின்றார்
وَرُسُلَهُۥ
அவனது தூதருக்கும்
بِٱلْغَيْبِۚ
மறைவில்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
قَوِىٌّ
மிக வலிமையாளன்
عَزِيزٌ
மிகைத்தவன்

Laqad arsalnaa Rusulanaa bilbaiyinaati wa anzalnaa ma'ahumul Kitaaba wal Meezaana liyaqooman naasu bilqist, wa anzalnal hadeeda feehi baasun shadeedunw wa manaafi'u linnaasi wa liya'lamal laahu many yansuruhoo wa Rusulahoo bilghaib; innal laaha Qawiyyn 'Azeez

நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கின்றது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்துகொள்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
نُوحًا
நூஹை(யும்)
وَإِبْرَٰهِيمَ
இப்ராஹீமையும்
وَجَعَلْنَا
இன்னும் நாம் ஆக்கினோம்
فِى ذُرِّيَّتِهِمَا
அ(வ்விரு)வர்களின் சந்ததியில்
ٱلنُّبُوَّةَ
நபித்துவத்தை(யும்)
وَٱلْكِتَٰبَۖ
வேதங்களையும்
فَمِنْهُم
அவர்களில்
مُّهْتَدٍۖ
நேர்வழி பெற்றவர்களும்
وَكَثِيرٌ
இன்னும் அதிகமானவர்கள்
مِّنْهُمْ
அவர்களில்
فَٰسِقُونَ
பாவிகள்

Wa laqad arsalnaa Noohanw wa Ibraaheema wa ja'alnaa fee zurriyyatihiman nubuwwata wal Kitaaba faminhum muhtad; wa kaseerum minhum faasiqoon

நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தாம் நம்முடைய தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் (சொந்தமாக) ஆக்கினோம். ஆயினும், நேரான வழியில் சென்றவர்கள் அவர்க(ள் சந்ததிக)ளில் சிலர்தாம். அவர்களில் பெரும்பாலரோ பாவிகளாகி விட்டனர்.

Tafseer

ثُمَّ قَفَّيْنَا
பிறகு/தொடர்ந்து அனுப்பினோம்
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களின் அடிச்சுவடுகளில்
بِرُسُلِنَا
நமது தூதர்களை
وَقَفَّيْنَا
நாம் பின்னால் அனுப்பினோம்
بِعِيسَى
ஈஸாவை
ٱبْنِ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
وَءَاتَيْنَٰهُ
அவருக்கு கொடுத்தோம்
ٱلْإِنجِيلَ
இன்ஜீலை
وَجَعَلْنَا
ஏற்படுத்தினோம்
فِى قُلُوبِ
உள்ளங்களில்
ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ
எவர்கள்/அவரைப் பின்பற்றினார்கள்
رَأْفَةً
இரக்கத்தை(யும்)
وَرَحْمَةً
கருணையையும்
وَرَهْبَانِيَّةً
இன்னும் துறவரத்தை
ٱبْتَدَعُوهَا
புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதை
مَا كَتَبْنَٰهَا
நாம் அதை கடமையாக்கவில்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
إِلَّا ٱبْتِغَآءَ
நாடியே தவிர
رِضْوَٰنِ
பொருத்தத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَمَا رَعَوْهَا
ஆனால் அதை அவர்கள் பேணவில்லை
حَقَّ رِعَايَتِهَاۖ
அதை பேணவேண்டிய முறையில்
فَـَٔاتَيْنَا
கொடுப்போம்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொள்வார்களோ
مِنْهُمْ
அவர்களில் இருந்து
أَجْرَهُمْۖ
அவர்களின் கூலியை
وَكَثِيرٌ
இன்னும் அதிகமானவர்கள்
مِّنْهُمْ
அவர்களில்
فَٰسِقُونَ
பாவிகள்

Summa qaffainaa 'alaa aasaarihim bi Rusulinaa wa qaffainaa be 'Eesab ni Maryama wa aatainaahul Injeela wa ja'alnaa fee quloobil lazeenat taba' oohu raafatanw wa rahmatanw wa rahbaaniyyatanib tada' oohaa maa katanaahaa 'alaihim illab tighaaa'a ridwaanil laahi famaa ra'awhaa haqqa ri'aayatihaa fa aatainal lazeena aamanoo minhum ajrahum wa kaseerum minhum faasiqoon

ஆகவே, (சென்றுபோன நூஹ், இப்ராஹீமுக்குப் பின்னர்) அவர்களுடைய வழியைப் பின்பற்றி (நடக்கக்கூடிய) தூதர் பலரை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பி வைத்தோம். அவ்வாறே, மர்யமுடைய மகன் ஈஸாவையும் (அவர்களுக்குப் பின்னர், அவர்களைப் பின்பற்றி நடக்குமாறு) அனுப்பி வைத்தோம். இவரைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில், கிருபையையும் இரக்கத்தையும் உண்டுபண்ணினோம். (உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள். அவ்வாறிருந்தும், அதனை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்க வில்லை. ஆயினும், (நபியே!) அவர்களில் எவர்கள் (மெய்யாகவே உங்களை) நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களுடைய கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (உங்களை நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
ٱتَّقُوا۟
பயந்து கொள்ளுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَءَامِنُوا۟
இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
بِرَسُولِهِۦ
அவனது தூதரை
يُؤْتِكُمْ
உங்களுக்கு கொடுப்பான்
كِفْلَيْنِ
இரு மடங்கு பங்குகளை
مِن رَّحْمَتِهِۦ
தனது கருணையிலிருந்து
وَيَجْعَل
இன்னும் ஏற்படுத்துவான்
لَّكُمْ
உங்களுக்கு
نُورًا
ஒளியை
تَمْشُونَ
நீங்கள் நடந்து செல்வீர்கள்
بِهِۦ
அதன் மூலம்
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
لَكُمْۚ
உங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Yaaa ayyuhal lazeena aamaanut taqullaaha wa aaminoo bi Rasoolihee yu'tikum kiflaini mir rahmatihee wa yaj'al lakum nooran tamshoona bihee wa yaghfir lakum; wallaahu Ghafoorur Raheem

ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறிஸ்த)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், இத்தூதரை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்தக் குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்களுடைய) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لِّئَلَّا يَعْلَمَ
ஏனெனில், அறிந்து கொள்வதற்காக
أَهْلُ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
أَلَّا يَقْدِرُونَ
ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்
عَلَىٰ شَىْءٍ
எதன் மீதும்
مِّن فَضْلِ
அருளில்
ٱللَّهِۙ
அல்லாஹ்வின்
وَأَنَّ
நிச்சயமாக
ٱلْفَضْلَ
சிறப்பு
بِيَدِ
கரத்தில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
مَن يَشَآءُۚ
அவன் நாடுகின்றவர்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
ذُو ٱلْفَضْلِ
சிறப்புடையவன்
ٱلْعَظِيمِ
மகத்தான(து)

Li'alla ya'lama Ahlul kitaabi allaa yaqdiroona 'alaa shai'im min fadlil laahi wa annal fadla bi Yadil laahi u'teehi many yashaaa'; wallaahu Zul fadilil 'azeem

(இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ் வுடைய அருளில் யாதொரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதனை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர் களுக்கு அதனை அளிக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

Tafseer