Skip to main content

مَّن ذَا
யார்
ٱلَّذِى
எவர்
يُقْرِضُ
கடன் கொடுக்கின்றார்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
قَرْضًا
கடனாக
حَسَنًا
அழகிய
فَيُضَٰعِفَهُۥ
அதை பன்மடங்காக்குவான்
لَهُۥ
அவருக்கு
وَلَهُۥٓ
இன்னும் அவருக்கு
أَجْرٌ
கூலி உண்டு
كَرِيمٌ
கண்ணியமான(து)

man zal lazee yuqridul laaha qardan hasanan fa yudaa'ifahoo lahoo wa lahooo ajrun kareem

எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கின்றாரோ அவருக்கு, அதனை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கின்றான். அன்றி, அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு.

Tafseer

يَوْمَ
நாளில்
تَرَى
நீர் பார்ப்பீர்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களை
وَٱلْمُؤْمِنَٰتِ
இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை
يَسْعَىٰ
செல்லும்
نُورُهُم
அவர்களின் ஒளி
بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னர்
وَبِأَيْمَٰنِهِم
இன்னும் அவர்களின் வலப்பக்கங்களில்
بُشْرَىٰكُمُ
உங்கள் நற்செய்தி
ٱلْيَوْمَ
இன்று
جَنَّٰتٌ
சொர்க்கங்களாகும்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமாக இருப்பார்கள்
فِيهَاۚ
அதில்
ذَٰلِكَ هُوَ
அதுதான்
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
ٱلْعَظِيمُ
மகத்தான

Yawma taral mu'mineena walmu'minaati yas'aa nooruhum baina aydeehim wa biaymaanihim bushraakumul yawma jannaatun tajree min tahtihal anhaaru khaalideena feeha; zaalika huwal fawzul 'azeem

(நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, அவர்களை நோக்கி மலக்குகள்:) "இன்றைய தினம் உங்களுக்கு நற்செய்தி (என்றும்) தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியில் நுழைந்து விடுவீர்கள். என்றென்றும் அதில் தங்கியும் விடுவீர்கள்" என்றும் கூறுவார்கள். இதுதான் மகத்தான ஒரு வெற்றியாகும்.

Tafseer

يَوْمَ
அந்நாளில்
يَقُولُ
கூறுவார்கள்
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகம் உடைய ஆண்களும்
وَٱلْمُنَٰفِقَٰتُ
நயவஞ்சகம் உடைய பெண்களும்
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
ٱنظُرُونَا
எங்களை எதிர்பாருங்கள்!
نَقْتَبِسْ
நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்
مِن نُّورِكُمْ
உங்கள்ஒளியிலிருந்து
قِيلَ
கூறப்படும்
ٱرْجِعُوا۟
நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்
وَرَآءَكُمْ
உங்களுக்குப் பின்னால்
فَٱلْتَمِسُوا۟
தேடுங்கள்!
نُورًا
ஒளியை
فَضُرِبَ
ஆகவே அமைக்கப்படும்
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
بِسُورٍ
ஒரு சுவர்
لَّهُۥ
அதற்கு
بَابٌۢ
ஒரு வாசல்
بَاطِنُهُۥ
அதன் உள் பக்கம்
فِيهِ
அதில்
ٱلرَّحْمَةُ
அருள்
وَظَٰهِرُهُۥ
இன்னும் அதன் வெளிப்பக்கம்
مِن قِبَلِهِ
அதற்கு முன்னால்
ٱلْعَذَابُ
வேதனை

Yawma yaqoolul munaa fiqoona walmunaafiqaatu lillazeena aamanun zuroonaa naqtabis min noorikum qeelarji'oo waraaa'akum faltamisoo nooran faduriba bainahum bisooril lahoo baab, baatinuhoo feehir rahmatu wa zaahiruhoo min qibalihi-'azaab

அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நீங்கள் (முன் செல்லாது) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்களுடைய பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்" என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி "எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுவிடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கை யாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய) அவனுடைய வேதனையுமிருக்கும்.

Tafseer

يُنَادُونَهُمْ
அவர்களை கூவி அழைப்பார்கள்
أَلَمْ نَكُن
நாங்கள் இருக்கவில்லையா?
مَّعَكُمْۖ
உங்களுடன்
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
بَلَىٰ
ஏன் இல்லை
وَلَٰكِنَّكُمْ
என்றாலும் நீங்கள்
فَتَنتُمْ
அழித்துக் கொண்டீர்கள்
أَنفُسَكُمْ
உங்களையே
وَتَرَبَّصْتُمْ
இன்னும் தீமையை எதிர்பார்த்தீர்கள்
وَٱرْتَبْتُمْ
இன்னும் சந்தேகித்தீர்கள்
وَغَرَّتْكُمُ
உங்களை மயக்கின
ٱلْأَمَانِىُّ
பொய்யானஆசைகள்
حَتَّىٰ
இறுதியாக
جَآءَ
வந்துவிட்டது
أَمْرُ
கட்டளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَغَرَّكُم
உங்களை மயக்கிவிட்டான்
بِٱللَّهِ
அல்லாஹ்வை விட்டும்
ٱلْغَرُورُ
மயக்கக் கூடியவன்

Yunaadoonahum alam nakum ma'akum qaaloo balaa wa laakinnakum fatantum anfusakum wa tarabbastum wartabtum wa gharratkumul amaaniyyu hatta jaaa'a amrul laahi wa gharrakum billaahil gharoor

இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி "உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்கவில்லையா?" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) "மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். அன்றி, (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரையில், உங்களுடைய பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான்.

Tafseer

فَٱلْيَوْمَ
இன்றைய தினம்
لَا يُؤْخَذُ
வாங்கப்படாது
مِنكُمْ
உங்களிடமும்
فِدْيَةٌ
எவ்வித பரிகாரம்
وَلَا مِنَ
நிராகரிப்பாளர்களிடமும்
مَأْوَىٰكُمُ
உங்கள் தங்குமிடம்
ٱلنَّارُۖ
நரகம்தான்
هِىَ مَوْلَىٰكُمْۖ
அதுதான்/உங்களுக்கு மிக ஏற்றமானது
وَبِئْسَ ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது

Fal Yawma laa yu'khazu minkum fidyatunw wa laa minal lazeena kafaroo; maawaakumun Naaru hiya maw laakum wa bi'sal maseer

ஆகவே, இன்றைய தினம் உங்களிடமிருந்தோ அல்லது (உங்களைப் போல்) நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வேதனைக்குப் பதிலாக) யாதொன்றையும் பரிகாரமாகப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் செல்லுமிடம் நரகம்தான். (நரக) நெருப்புத்தான் உங்களுக்குத் துணையாக இருக்கக்கூடியது" (என்றும் கூறப்படும்). அது தங்குமிடங்களில் எல்லாம் மகா கெட்டது.

Tafseer

أَلَمْ يَأْنِ
நேரம் வரவில்லையா?
لِلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களுக்கு
أَن تَخْشَعَ
நடுங்குவதற்கு
قُلُوبُهُمْ
அவர்களின் உள்ளங்கள்
لِذِكْرِ
நினைவு கூர்வதாலும்
ٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَا نَزَلَ
இன்னும் எது/இறங்கியது
مِنَ ٱلْحَقِّ
சத்தியவேதத்தினாலும்
وَلَا يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிட வேண்டாம்
كَٱلَّذِينَ
அவர்களைப் போல்
أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப் பட்டார்கள்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
فَطَالَ عَلَيْهِمُ
அவர்கள் மீது நீண்டு விட்டது
ٱلْأَمَدُ
காலம்
فَقَسَتْ
ஆகவே இறுகிவிட்டன
قُلُوبُهُمْۖ
அவர்களின் உள்ளங்கள்
وَكَثِيرٌ
அதிகமானவர்கள்
مِّنْهُمْ
அவர்களில்
فَٰسِقُونَ
பாவிகள்

Alam yaani laillzeena aamanooo an takhsha'a quloo buhum lizikril laahi wa maa nazala minal haqqi wa laa yakoonoo kallazeena ootul Kitaaba min qablu fataala 'alaihimul amadu faqasat quloobuhum wa kaseerum minhum faasiqoon

நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிடவேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு காலம் சென்று, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகி விட்டன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்.

Tafseer

ٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحْىِ
உயிர்ப்பிக்கின்றான்
ٱلْأَرْضَ
பூமியை
بَعْدَ مَوْتِهَاۚ
அது இறந்த பின்னர்
قَدْ بَيَّنَّا
திட்டமாக/நாம் தெளிவுபடுத்துகின்றோம்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக

I'lamooo annal laaha yuhyil arda ba'da mawtihaa; qad baiyannaa lakumul Aayaati la'allakum ta'qiloon

(மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ்தான், இறந்த பூமியை உயிர்ப்பிக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டே, நிச்சயமாக அவன் பல உதாரணங்களை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கின்றான்.

Tafseer

إِنَّ ٱلْمُصَّدِّقِينَ
நிச்சயமாக தர்மம் செய்த ஆண்கள்
وَٱلْمُصَّدِّقَٰتِ
இன்னும் தர்மம் செய்த பெண்கள்
وَأَقْرَضُوا۟
இன்னும் கடன் கொடுத்தவர்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
قَرْضًا حَسَنًا
அழகிய கடனாக
يُضَٰعَفُ لَهُمْ
அவர்களுக்கு பன்மடங்காக்கப்படும்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
أَجْرٌ كَرِيمٌ
கூலி/கண்ணியமான(து)

Innal mussaddiqeena wal mussaddiqaati wa aqradul laaha qardan hassanany yudaa'afu lahum wa lahum ajrun kareem

நிச்சயமாக ஆண்களிலோ, பெண்களிலோ எவர்கள் தானம் செய்து அழகான முறையில் அல்லாஹ்வுக்காக(ப் பிறருக்குப் பொருளை)க் கடனாகவும் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு, அது இரு மடங்காக்கப்படுகின்றது. பின்னும் அவர்களுக்கு மிக்க கண்ணியமான கூலியுமுண்டு.

Tafseer

وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَرُسُلِهِۦٓ
இன்னும் அவனது தூதர்களையும்
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلصِّدِّيقُونَۖ
மிக உண்மையானவர்கள்
وَٱلشُّهَدَآءُ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرُهُمْ
அவர்களின் கூலியும்
وَنُورُهُمْۖ
( ஒளியும்இ) அவர்களின்
وَٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்

Wallazeena aamanoo billaahi wa Rusuliheee ulaaa'ika humus siddeeqoona wash shuhadaaa'u 'inda Rabbihim lahum ajruhum wa nooruhum wallazeena kafaroo wa kazzaboo bi aayaatinaaa ulaaaika As haabul jaheem

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் ஸித்தீக் எனப்படும் உண்மையாளர்கள். "ஷஹீது" எனப்படும் சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலியும் உண்டு. (நேரான வழியை அறிவிக்கக் கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகின்றார்களோ, அவர்கள் நரகவாசிகள்தாம்.

Tafseer

ٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّمَا ٱلْحَيَوٰةُ
உலக வாழ்க்கை எல்லாம்
لَعِبٌ
விளையாட்டு(ம்)
وَلَهْوٌ
வேடிக்கையும்
وَزِينَةٌ
அலங்காரமும்
وَتَفَاخُرٌۢ
பெருமை அடிப்பதும்
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
وَتَكَاثُرٌ
அதிகத்தின் போட்டியும்தான்
فِى ٱلْأَمْوَٰلِ
செல்வங்களிலும்
وَٱلْأَوْلَٰدِۖ
பிள்ளைகளிலும்
كَمَثَلِ
போல்தான்
غَيْثٍ
ஒரு மழையை
أَعْجَبَ
கவர்ந்தது
ٱلْكُفَّارَ
விவசாயிகளை
نَبَاتُهُۥ
அதன் விளைச்சல்
ثُمَّ
பிறகு
يَهِيجُ
அது காய்ந்து விடுகிறது
فَتَرَىٰهُ
அதை நீர் பார்க்கிறீர்
مُصْفَرًّا
மஞ்சளாக
ثُمَّ
பிறகு
يَكُونُ
அது ஆகிவிடுகிறது
حُطَٰمًاۖ
குப்பையாக
وَفِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
عَذَابٌ
வேதனை(யும்)
شَدِيدٌ
கடுமையான(து)
وَمَغْفِرَةٌ
மன்னிப்பும்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
وَرِضْوَٰنٌۚ
திருப்பொருத்தமும்
وَمَا ٱلْحَيَوٰةُ
உலக வாழ்க்கை இல்லை
إِلَّا مَتَٰعُ
இன்பமே தவிர
ٱلْغُرُورِ
மயக்கக் கூடிய(து)

I'lamooo annamal hayaa tud dunyaa la'ibunw wa lahwunw wa zeenatunw wa takaasurun bainakum wa takaasurn fil amwaali wal awlaad, kamasali ghaisin a'jabal kuffaara nabaatuhoo summa yaheeju fataraahu musfaaran summa yakoonu hutaamaa; wa fil aakhirati 'azaabun shadeedunw wa magh firatum minal laahi wa ridwaan; wa mal haiyaa tuddun yaaa illaa mataa'ul ghuroor

(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண்பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குக் களிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதைக் காண்கின்றான். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை.

Tafseer