Skip to main content

فَإِن تَابُوا۟
அவர்கள் திருந்தினால்
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினால்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتَوُا۟
இன்னும் கொடுத்தால்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
فَإِخْوَٰنُكُمْ
உங்கள் சகோதரர்கள்
فِى ٱلدِّينِۗ
மார்க்கத்தில்
وَنُفَصِّلُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لِقَوْمٍ
மக்களுக்கு
يَعْلَمُونَ
அறிகின்றார்கள்

Fa in taaboo wa aqaamus Salaata wa aatawuz Zakaata fa ikhwaanukum fid deen; wa nufassilul Aayaati liqawminy ya'lamoon

அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கின்றோம்.

Tafseer

وَإِن نَّكَثُوٓا۟
அவர்கள் முறித்தால்
أَيْمَٰنَهُم
தங்கள் சத்தியங்களை
مِّنۢ بَعْدِ
பின்னர்
عَهْدِهِمْ
தங்கள் ஒப்பந்தம்
وَطَعَنُوا۟
இன்னும் குறை கூறினர்
فِى دِينِكُمْ
உங்கள் மார்க்கத்தில்
فَقَٰتِلُوٓا۟
போரிடுங்கள்
أَئِمَّةَ
தலைவர்களிடம்
ٱلْكُفْرِۙ
நிராகரிப்பு
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَآ أَيْمَٰنَ
அறவே சத்தியங்களில்லை
لَهُمْ
அவர்களுக்கு
لَعَلَّهُمْ يَنتَهُونَ
அவர்கள் விலகிக் கொள்வதற்காக

Wa in nakasooo aimaanahum mim ba'di 'ahdihim wa ta'anoo fee deenikum faqaatilooo a'immatal kufri innahum laaa aimaana lahum la'allahum yantahoon

(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் போர் புரியுங்கள்.

Tafseer

أَلَا تُقَٰتِلُونَ
நீங்கள் போர்புரிய மாட்டீர்களா?
قَوْمًا
மக்களிடம்
نَّكَثُوٓا۟
முறித்தனர்
أَيْمَٰنَهُمْ
தங்கள் சத்தியங்களை
وَهَمُّوا۟
இன்னும் உறுதியாகநாடினர்
بِإِخْرَاجِ
வெளியேற்றுவதற்கு
ٱلرَّسُولِ
தூதரை
وَهُم
அவர்கள்தான்
بَدَءُوكُمْ
ஆரம்பித்தனர் உங்களிடம்
أَوَّلَ مَرَّةٍۚ
முதல் முறையாக
أَتَخْشَوْنَهُمْۚ
நீங்கள் பயப்படுகிறீர்களா?/அவர்களை
فَٱللَّهُ
அல்லாஹ்தான்
أَحَقُّ
மிகத் தகுதியானவன்
أَن تَخْشَوْهُ
நீங்கள் பயப்படுவதற்கு/அவனை
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக

Alaa tuqaatiloona qawman nakasooo aimaanahum wa hammoo bi ikhraajir Rasooli wa hum bada'ookum awwala marrah; atakhshawnahum; fallaahu ahaqqu an takhshawhu in kuntum mu'mineen

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்முடைய) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி முயற்சித்த மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான்.

Tafseer

قَٰتِلُوهُمْ
போரிடுங்கள் அவர்களிடம்
يُعَذِّبْهُمُ
வேதனை செய்வான்/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِأَيْدِيكُمْ
உங்கள் கரங்களால்
وَيُخْزِهِمْ
இன்னும் இழிவுபடுத்துவான்/அவர்களை
وَيَنصُرْكُمْ
இன்னும் உதவுவான்/உங்களுக்கு
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
وَيَشْفِ
இன்னும் குணப்படுத்துவான்
صُدُورَ
நெஞ்சங்களை
قَوْمٍ
மக்களின்
مُّؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்கள்

Qaatiloohum yu'az zibhumul laahu bi aideekum wa yukhzihim wa yansurkum 'alaihim wa yashfi sudoora qawmim mu 'mineen

நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான்.

Tafseer

وَيُذْهِبْ
இன்னும் போக்குவான்
غَيْظَ
கோபத்தை
قُلُوبِهِمْۗ
அவர்களுடைய உள்ளங்களின்
وَيَتُوبُ
பிழைபொறுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
مَن
எவர்
يَشَآءُۗ
நாடுகிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Wa yuzhib ghaiza quloobihim; wa yatoobullaahu 'alaa mai yashaaa'; wallaahu 'Aleemun Hakeem

(அவர்கள் மீது) இவர்கள் உள்ளங்களில் (குமுறிக் கொண்டு) உள்ள கோபங்களையும் போக்கிவிடுவான். அல்லாஹ் (அவர்களிலும்) தான் விரும்பியவர்களின் மன்னிப்புக்கோருதலை அங்கீகரிக் கின்றான். ஏனென்றால், அல்லாஹ் மிக அறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

أَمْ حَسِبْتُمْ
எண்ணினீர்களா?
أَن تُتْرَكُوا۟
நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று
وَلَمَّا يَعْلَمِ
அறியாமல் இருக்க
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ
எவர்களை
جَٰهَدُوا۟
போர் புரிந்தனர்
مِنكُمْ
உங்களில்
وَلَمْ يَتَّخِذُوا۟
இன்னும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَلَا رَسُولِهِۦ
இன்னும் அவனுடையதூதர்
وَلَا ٱلْمُؤْمِنِينَ
இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள்
وَلِيجَةًۚ
அந்தரங்க நண்பர்களாக
وَٱللَّهُ
அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
بِمَا
எதை
تَعْمَلُونَ
செய்வீர்கள்

Am hasibtum an turakoo wa lammaa ya'lamil laahul lazeena jaahadoo minkum wa lam yattakhizoo min doonil laahi wa laa Rasoolihee wa lalmu'mineena waleejah; wallaahu khabeerum bimaa ta'maloon

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (உண்மையாகவே மனம் விரும்பி) போர் புரிந்தவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் தவிர (மற்றெவரையும் தங்களுடைய) அந்தரங்க நண்பர்களாக (உங்களில்) எவரும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் உங்களைச் சோதித்து அறிவிக்காமல், நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கிறான்.

Tafseer

مَا كَانَ
இருக்கவில்லை
لِلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு உரிமை
أَن يَعْمُرُوا۟
அவர்கள் பரிபாலிப்பதற்கு
مَسَٰجِدَ
மஸ்ஜிதுகளை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
شَٰهِدِينَ
சாட்சிகூறியவர்களாக
عَلَىٰٓ أَنفُسِهِم
தங்கள் மீது
بِٱلْكُفْرِۚ
நிராகரிப்பிற்கு
أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ
அவர்கள்/அழிந்தன
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
وَفِى ٱلنَّارِ
இன்னும் நரகத்தில்தான்
هُمْ
அவர்கள்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

maa kaana lilmushrikeena ai ya'muroo masaajidal laahi shaahideena 'alaaa anfusihim bilkufr; ulaaa'ika habitat a'maaluhum wa fin naari hum khaalidoon

இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தாம் என்று (பகிரங்கமாக) கூறிக்கொண்டிருக்கும் வரையில், அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கிவிடுவார்கள்.

Tafseer

إِنَّمَا يَعْمُرُ
பராமரிப்பதெல்லாம்
مَسَٰجِدَ
மஸ்ஜிதுகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ
இன்னும் இறுதி நாளை
ٱلْءَاخِرِ
இறுதி
وَأَقَامَ
இன்னும் நிலைநிறுத்தினார்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتَى
இன்னும் கொடுத்தார்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَلَمْ يَخْشَ
பயப்படவில்லை
إِلَّا
தவிர
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
فَعَسَىٰٓ
கூடும்
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
أَن يَكُونُوا۟
(அவர்கள்) இருக்க
مِنَ ٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களில்

Innamaa ya'muru masaa jidal laahi man aamana billaahi wal Yawmil Aakhiri wa aqaamas Salaata wa aataz Zakaata wa lam yakkhsa illal laaha fa'asaaa ulaaa'ika ai yakoonoo minal muhtadeen

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள்.

Tafseer

أَجَعَلْتُمْ
ஆக்கினீர்களா?
سِقَايَةَ
தண்ணீர் புகட்டுவதை
ٱلْحَآجِّ
ஹாஜிக்கு
وَعِمَارَةَ
இன்னும் பராமரிப்பதை
ٱلْمَسْجِدِ
மஸ்ஜிது
ٱلْحَرَامِ
புனிதமானது
كَمَنْ
எவரைப்போன்று
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
وَجَٰهَدَ
இன்னும் போர் புரிந்தார்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
لَا يَسْتَوُۥنَ
சமமாக மாட்டார்கள்
عِندَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடம்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Aja'altum siqaayatal haaajji wa 'imaaratal masjidil haraami kamman aamana billaahi wal Yawmil Aakhiri wa jaahada fee sabeelil laah; laa yastawoona 'indal laah; wallaahu laa yahdil qawmaz zaalimeen

(நம்பிக்கை கொள்ளாமல் இருந்துகொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுபவர்களையும், சிறப்புற்ற அப்பள்ளிக்கு ஊழியம் செய்பவர்களையும் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்குச் சமமாக நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
بِأَمْوَٰلِهِمْ
தங்கள்செல்வங்களால்
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களால்
أَعْظَمُ
மகத்தானவர்(கள்)
دَرَجَةً
பதவியால்
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
ٱلْفَآئِزُونَ
வெற்றியாளர்கள்

Allazeena aamanoo wa haajaroo wa jaahadoo fee sabeelil laahi bi amwaalihim wa anufsihim a'zamu darajatan 'indal laah; wa ulaaa'ika humul faaa'izoon

எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இத்தகையவர்கள்தான் நிச்சயமாக வெற்றி அடைந்தவர்கள்.

Tafseer