Skip to main content

وَلَا يُنفِقُونَ
தர்மம் புரிய மாட்டார்கள்
نَفَقَةً
ஒரு தர்மத்தை
صَغِيرَةً
சிறியது
وَلَا كَبِيرَةً
இன்னும் பெரியது
وَلَا يَقْطَعُونَ
அவர்கள் கடக்க மாட்டார்கள்
وَادِيًا
ஒரு பள்ளத்தாக்கை
إِلَّا كُتِبَ
தவிர/பதியப்பட்டது
لَهُمْ
அவர்களுக்கு
لِيَجْزِيَهُمُ
கூலி கொடுப்பதற்காக/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
أَحْسَنَ
மிக அழகியதை
مَا
எதை
كَانُوا۟
இருந்தனர்
يَعْمَلُونَ
செய்கிறார்கள்

Wa laa yunfiqoona nafa qatan sagheeratanw wa laa kabeeratanw wa laa yaqta'oona waadiyan illaa kutiba lahum liyajziyahumul laahu ahsana maa kaanoo ya'maloon

அன்றி, இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் செய்த இவைகளைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கின்றான்.

Tafseer

وَمَا كَانَ
சரியல்ல
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
لِيَنفِرُوا۟
அவர்கள் புறப்படுவது
كَآفَّةًۚ
அனைவருமே
فَلَوْلَا نَفَرَ
புறப்பட்டிருக்க வேண்டாமா
مِن كُلِّ
இருந்து/ஒவ்வொரு
فِرْقَةٍ مِّنْهُمْ
பிரிவு/அவர்களில்
طَآئِفَةٌ
ஒரு கூட்டம்
لِّيَتَفَقَّهُوا۟
அவர்கள் ஞானம் பெறுவதற்காக
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
وَلِيُنذِرُوا۟
இன்னும் அவர்களை எச்சரிப்பதற்காக
قَوْمَهُمْ
தங்கள் சமுதாயத்தை
إِذَا
போது
رَجَعُوٓا۟
திரும்பினார்கள்
إِلَيْهِمْ
அவர்களிடம்
لَعَلَّهُمْ يَحْذَرُونَ
அவர்கள் எச்சரிக்கையாக

Wa maa kaanal mu'minoona liyanfiroo kaaaffah; falaw laa nafara min kulli firqatim minhum taaa'ifatul liyatafaqqahoo fiddeeni wa liyunziroo qawmahum izaa raja'ooo ilaihim la'allahum yahzaroon

(உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரைவிட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
قَٰتِلُوا۟
போரிடுங்கள்/எவர்கள்
ٱلَّذِينَ يَلُونَكُم
அடுத்திருக்கின்றனர்/உங்களை
مِّنَ ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்களில்
وَلْيَجِدُوا۟
இன்னும் அவர்கள் காணட்டும்
فِيكُمْ
உங்களிடம்
غِلْظَةًۚ
கடுமையை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
مَعَ ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுடன்

Yaaa aiyuhal lazeena aamanoo qaatilul lazeena yaloonakum minal kuffaari walyajidoo feekum ghilzah; wa'lamooo annal laaha ma'al muttaqeen

நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கும் (விஷமிகளாகிய) நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

Tafseer

وَإِذَا مَآ
இறக்கப்பட்டால்
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
فَمِنْهُم
அவர்களில்
مَّن
எவர்
يَقُولُ
கூறுவார்
أَيُّكُمْ
உங்களில் எவர்
زَادَتْهُ هَٰذِهِۦٓ
அதிகப்படுத்தியது/அவருக்கு/இது
إِيمَٰنًاۚ
நம்பிக்கை
فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
فَزَادَتْهُمْ
அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
إِيمَٰنًا
நம்பிக்கையை
وَهُمْ
அவர்களோ
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சியடைகின்றனர்

Wa izaa maaa unzilat Sooratun faminhum mai yaqoolu aiyukum zaadat hu haazihee eemaanaa; fa ammal lazeena aamanoo fazaadat hum eemaananw wa hum yastabshiroon

யாதொரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் "உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?" என்று கேட்கக் கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதனைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

Tafseer

وَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ
எவர்கள்
فِى قُلُوبِهِم
அவர்களுடைய உள்ளங்களில்
مَّرَضٌ
ஒரு நோய்
فَزَادَتْهُمْ
அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
رِجْسًا
ஒரு அசுத்தத்தை
إِلَىٰ رِجْسِهِمْ
அவர்களுடைய அசுத்தத்துடன்
وَمَاتُوا۟
இன்னும் இறந்தனர்
وَهُمْ كَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களாகவே

Wa ammal lazeena fee quloobihim maradun fazaadat hum rijsan ilaa rijsihim wa maatoo wa hum kaafiroon

ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் பின்னும் அசுத்தத்தையே (அது) அதிகரித்துவிட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர்.

Tafseer

أَوَلَا يَرَوْنَ
அல்லதுபார்க்கவில்லையா
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
يُفْتَنُونَ
சோதிக்கப்படுகின்றனர்
فِى كُلِّ
ஒவ்வொன்றில்
عَامٍ
ஆண்டு
مَّرَّةً
ஒரு முறை
أَوْ
அல்லது
مَرَّتَيْنِ
இரு முறைகள்
ثُمَّ
பிறகு
لَا يَتُوبُونَ
அவர்கள் திருந்தவில்லை
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை

Awalaa yarawna annahum yuftanoona fee kulli 'aamim marratan aw marrataini summa laa yatooboona wa laa hum yazzakkkaroon

ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.

Tafseer

وَإِذَا مَآ
இறக்கப்பட்டால்
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
نَّظَرَ
பார்க்கிறார்கள்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
إِلَىٰ بَعْضٍ
சிலரின் பக்கம்/?
يَرَىٰكُم
பார்க்கின்றனர்/ உங்களை
مِّنْ أَحَدٍ
ஒருவரும்/பின்னர்
ٱنصَرَفُوا۟ۚ
திரும்பி விடுகின்றனர்
صَرَفَ
திருப்பி விட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
قُلُوبَهُم
உள்ளங்களை/அவர்களுடைய
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
قَوْمٌ
மக்களாக
لَّا يَفْقَهُونَ
அறியமாட்டார்கள்

Wa izaa maaa unzilat Sooratun nazara ba'duhum ilaa ba'din hal yaraakum min ahadin summman sarafoo; sarafal laahu quloobahum bi annahum qawmul laa yafqahoon

யாதொரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) "உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?" என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான்.

Tafseer

لَقَدْ
வந்து விட்டார்
جَآءَكُمْ
உங்களிடம்
رَسُولٌ
ஒரு தூதர்
مِّنْ أَنفُسِكُمْ
உங்களிலிருந்தே
عَزِيزٌ
கடினமானது
عَلَيْهِ
அவர் மீது
مَا عَنِتُّمْ
நீங்கள் சிரமப்படுவது
حَرِيصٌ
பேராசையுடையவர்
عَلَيْكُم
உங்கள் மீது
بِٱلْمُؤْمِنِينَ
மீது/ நம்பிக்கையாளர்கள்
رَءُوفٌ
பெரும் இரக்கமுள்ளவர்
رَّحِيمٌ
பெரும் கருணையுள்ளவர்

Laqad jaaa'akum Rasoolum min anfusikum 'azeezun 'alaihi maa 'anittum hareesun 'alaikum bilmu'mineena ra'oofur raheem

(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.

Tafseer

فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
فَقُلْ
கூறுவீராக
حَسْبِىَ ٱللَّهُ
அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
لَآ إِلَٰهَ
அறவே இல்லை/வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَۖ
தவிர/அவனை
عَلَيْهِ
அவன் மீதே
تَوَكَّلْتُۖ
நான் நம்பிக்கை வைத்து விட்டேன்
وَهُوَ رَبُّ
அவன் அதிபதி
ٱلْعَرْشِ
அர்ஷின்
ٱلْعَظِيمِ
மகத்தானது

Fa in tawallaw faqul lhasbiyal laahu laaa ilaaha illaa Huwa 'alaihi tawakkkaltu wa Huwa Rabbul 'Arshil 'Azeem

(நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உங்களைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான "அர்ஷின்" அதிபதி.

Tafseer