Skip to main content

لَّيْسَ
இல்லை
عَلَى
மீது
ٱلضُّعَفَآءِ
பலவீனர்கள்
وَلَا
இன்னும் இல்லை
عَلَى
மீது
ٱلْمَرْضَىٰ
நோயாளிகள்
وَلَا
இன்னும் இல்லை
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يَجِدُونَ
பெறமாட்டார்கள்
مَا يُنفِقُونَ
எதை/செலவழிப்பார்கள்
حَرَجٌ
ஒரு சிரமம், குற்றம்
إِذَا نَصَحُوا۟
நன்மையை நாடினால்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
وَرَسُولِهِۦۚ
இன்னும் அவனுடைய தூதருக்கு
مَا عَلَى
இல்லை/மீது
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோர்
مِن سَبِيلٍۚ
வழி ஏதும்/அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Laisa 'alad du'aaaa'i wa laa 'alal mardaa wa laa 'alal lazeena laa yajidoona maa yunfiqoona harajun izaa nasahoo lillaahi wa Rasoolih; maa 'alal muhsineena min sabeel; wallaahu Ghafoorur Raheem

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதனைப் பற்றி அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை.) இத்தகைய நல்லவர்கள் மீது (குற்றம் கூற) யாதொரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَا
இன்னும் இல்லை
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
إِذَا مَآ
அவர்கள் வந்தால் உம்மிடம்
لِتَحْمِلَهُمْ
நீர் ஏற்றுவதற்காக/அவர்களை
قُلْتَ
கூறினீர்
لَآ أَجِدُ
நான்பெறவில்லையே
مَآ أَحْمِلُكُمْ
எதை/ஏற்றுவேன்/உங்களை
عَلَيْهِ
அதன் மீது
تَوَلَّوا۟
திரும்பினர்
وَّأَعْيُنُهُمْ
அவர்களுடைய கண்கள்
تَفِيضُ
பொங்கி வழிகின்றன
مِنَ ٱلدَّمْعِ
கண்ணீரால்
حَزَنًا
கவலையினால்
أَلَّا يَجِدُوا۟
பெறமாட்டார்கள் என்பதற்காக
مَا يُنفِقُونَ
எதை/செலவழிப்பார்கள்

Wa laa 'alal lazeena izaa maaa atawka litahmilahum qulta laaa ajidu maaa ahmilukum 'alaihi tawallaw wa a'yunuhum tafeedu minaddam'i hazanan allaa yajidoo maa yunfiqoon

(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு "உங்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே" என்று நீங்கள் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் எவர்கள் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.)

Tafseer

إِنَّمَا ٱلسَّبِيلُ
வழியெல்லாம்
عَلَى
மீதுதான்
ٱلَّذِينَ
எவர்கள்
يَسْتَـْٔذِنُونَكَ
அனுமதி கோருகின்றனர்/உம்மிடம்
وَهُمْ
அவர்கள் இருக்க
أَغْنِيَآءُۚ
செல்வந்தர்களாக
رَضُوا۟
திருப்தியடைந்தனர்
بِأَن يَكُونُوا۟
அவர்கள் ஆகுவது கொண்டு
مَعَ
உடன்
ٱلْخَوَالِفِ
பின்தங்கிய பெண்கள்
وَطَبَعَ
இன்னும் முத்திரையிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
قُلُوبِهِمْ
உள்ளங்கள்/அவர்களுடைய
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Innamas sabeelu 'alal lazeena yastaazinoonaka wa hum aghniyaaa'; radoo biany-yakoonoo ma'al khawaalifi wa taba'al laahu 'alaa quloobihim fahum laa ya'lamoon

எனினும், எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உங்களிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.

Tafseer

يَعْتَذِرُونَ
புகல் கூறுவார்கள்
إِلَيْكُمْ
உங்களிடம்
إِذَا رَجَعْتُمْ
நீங்கள் திரும்பினால்
إِلَيْهِمْۚ
அவர்களிடம்
قُل
கூறுவீராக
لَّا تَعْتَذِرُوا۟
புகல் கூறாதீர்கள்
لَن نُّؤْمِنَ
நாங்கள் நம்பமாட்டோம்
لَكُمْ
உங்களை
قَدْ
அறிவித்து விட்டான்
نَبَّأَنَا
அறிவித்து விட்டான் எங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مِنْ
இருந்து (சில)
أَخْبَارِكُمْۚ
உங்கள் செய்திகள்
وَسَيَرَى
இன்னும் பார்ப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَمَلَكُمْ
உங்கள் செயலை
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
ثُمَّ
பிறகு
تُرَدُّونَ
திருப்பப்படுவீர்கள்
إِلَىٰ عَٰلِمِ
அறிந்தவனிடம்
ٱلْغَيْبِ
மறைவை
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படை
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
بِمَا كُنتُمْ
எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்

ya'taziroona ilaikum izaa raja'tum ilaihim; qul laa ta'taziroo lan nu'mina lakum qad nabba annal laahu min akhbaarikum; wa sa yaral laahu 'amalakum wa Rasooluhoo suma turaddoona ilaa 'Aalimil Ghaibi washshahaadati fa yunabbi'ukum bimaa kuntum ta'maloon

(நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத்தேடி) புகல் கூறுகின்றனர். (அதற்கு அவர்களைநோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் புகல் (சாக்குப்போக்கு) கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வர். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளை அதுசமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்.

Tafseer

سَيَحْلِفُونَ
சத்தியமிடுவார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
لَكُمْ
உங்களிடம்
إِذَا ٱنقَلَبْتُمْ
நீங்கள் திரும்பினால்
إِلَيْهِمْ
அவர்களிடம்
لِتُعْرِضُوا۟
நீங்கள் புறக்கணித்து விடுவதற்காக
عَنْهُمْۖ
அவர்களை
فَأَعْرِضُوا۟
ஆகவே புறக்கணித்து விடுங்கள்
عَنْهُمْۖ
அவர்களை
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
رِجْسٌۖ
அசுத்தமானவர்கள்
وَمَأْوَىٰهُمْ
இன்னும் தங்குமிடம்/அவர்களுடைய
جَهَنَّمُ
நரகம்தான்
جَزَآءًۢ
கூலியாக
بِمَا
எதற்கு
كَانُوا۟
இருந்தனர்
يَكْسِبُونَ
செய்கின்றனர்

Sa yahlifoona billaahi lakum izanqalabtum ilaihim litu'ridoo 'anhum fa a'ridoo 'anhum innahum rijsunw wa maawaahum jahannamu jazaaa 'ambimaa kaanoo yaksiboon

(நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு) விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்களிடம் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு) விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும்.

Tafseer

يَحْلِفُونَ
சத்தியமிடுகின்றனர்
لَكُمْ
உங்களிடம்
لِتَرْضَوْا۟
நீங்கள் திருப்தியடைவதற்காக
عَنْهُمْۖ
அவர்களைப் பற்றி
فَإِن تَرْضَوْا۟
நீங்கள் திருப்தியடைந்தாலும்
عَنْهُمْ
அவர்களைப் பற்றி
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَرْضَىٰ
திருப்தியடைய மாட்டான்
عَنِ ٱلْقَوْمِ
மக்களைப் பற்றி
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Yahlifoona lakum litardaw 'anhum fa in tardaw 'anhum fa innal laaha laa yardaa 'anil qawmil faasiqeen

(நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தியடையவே மாட்டான்.

Tafseer

ٱلْأَعْرَابُ
கிராம அரபிகள்
أَشَدُّ
மிகக் கடுமையானவர்(கள்)
كُفْرًا
நிராகரிப்பில்
وَنِفَاقًا
இன்னும் நயவஞ்சகத்தில்
وَأَجْدَرُ
இன்னும் மிகத் தகுதியானவர்(கள்)
أَلَّا يَعْلَمُوا۟
அவர்கள் அறியாமல் இருக்க
حُدُودَ
சட்டங்களை
مَآ أَنزَلَ
எது/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
رَسُولِهِۦۗ
தன் தூதர்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Al A'raabu ashaddu kufranw wa nifaaqanw wa ajdaru allaa ya'lamoo hudooda maaa anzalal laahu 'alaa Rasoolih; wallaahu 'Aleemun Hakeem

நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் (வேத) வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், மிக்க ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمِنَ
இன்னும் இருந்து
ٱلْأَعْرَابِ
கிராம அரபிகள்
مَن
எவர்
يَتَّخِذُ
எடுத்துக் கொள்வார்
مَا
எதை
يُنفِقُ
தர்மம் செய்கிறார்
مَغْرَمًا
நஷ்டமாக
وَيَتَرَبَّصُ
இன்னும் எதிர்பார்க்கின்றனர்
بِكُمُ
உங்களுக்கு
ٱلدَّوَآئِرَۚ
சுழற்சிகளை
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
دَآئِرَةُ
சுழற்சி
ٱلسَّوْءِۗ
வேதனையின்
وَٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிபவன்

Wa minal A'raabi mai yattakhizu maa yunfiqu maghramanw wa yatarabbasu bikumud dawaaa'ir; alaihim daaa'iratus saw'; wallaahu Samee'un 'Aleem

(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அல்லாஹ் செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمِنَ
இன்னும் இருந்து
ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
مَن
எவர்
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
وَيَتَّخِذُ مَا
இன்னும் எடுத்துக் கொள்கிறார்கள்/எதை
يُنفِقُ
தர்மம் புரிகிறார்(கள்)
قُرُبَٰتٍ
வணக்கங்களாக
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَصَلَوَٰتِ
இன்னும் பிரார்த்தனைகளாக
ٱلرَّسُولِۚ
தூதரின்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّهَا
நிச்சயமாக அது
قُرْبَةٌ
வணக்கம்
لَّهُمْۚ
அவர்களுக்கு
سَيُدْخِلُهُمُ
நுழைப்பான்/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
فِى رَحْمَتِهِۦٓۗ
தன் கருணையில்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wa minal A'raabi mai yu'minu billaahi wal yawmil AAkhiri wa yattakhizu maa yunfiqu qurubaatin 'indal laahi wa salawaatir Rasool; alaaa innahaa qurbatul lahum; sayudkhiluhumul laahu fee rahmatih; innal laaha Ghafoorur Raheem

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனை களுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான்.

Tafseer

وَٱلسَّٰبِقُونَ
முந்தியவர்கள்
ٱلْأَوَّلُونَ
முதலாமவர்கள்
مِنَ ٱلْمُهَٰجِرِينَ
முஹாஜிர்களில்
وَٱلْأَنصَارِ
இன்னும் அன்ஸாரிகள்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ٱتَّبَعُوهُم
பின்பற்றினார்கள் இவர்களை
بِإِحْسَٰنٍ
நல்லறத்தில்
رَّضِىَ
திருப்தியடைந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنْهُمْ
இவர்களைப் பற்றி
وَرَضُوا۟
இன்னும் திருப்தியடைந்தனர்
عَنْهُ
அவனைப் பற்றி
وَأَعَدَّ
இன்னும் ஏற்படுத்தினான்
لَهُمْ
இவர்களுக்கு
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
تَجْرِى
ஓடும்
تَحْتَهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَآ
அவற்றில்
أَبَدًاۚ
எப்போதும்
ذَٰلِكَ
இது
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
வெற்றி/மகத்தானது

Was saabiqoonal awwa loona minal Muhaajireena wal Ansaari wallazeenat taba'oo hum bi ihsaanir radiyal laahu 'anhum wa radoo 'anhu wa a'adda lahum jannnaatin tajree tahtahal anhaaru khaalideena feehaaa abadaa; zaalikal fawzul 'azeem

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.

Tafseer