Skip to main content

وَٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்ட ஆண்கள்
وَٱلْمُؤْمِنَٰتُ
இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்கள்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
أَوْلِيَآءُ
பொறுப்பாளர்கள்
بَعْضٍۚ
சிலருக்கு
يَأْمُرُونَ
ஏவுகின்றனர்
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கின்றனர்
عَنِ ٱلْمُنكَرِ
தீமையைவிட்டு
وَيُقِيمُونَ
இன்னும் நிலை நிறுத்துகின்றனர்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَيُؤْتُونَ
இன்னும் கொடுக்கின்றனர்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَيُطِيعُونَ
இன்னும் கீழ்ப்படிகின்றனர்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَرَسُولَهُۥٓۚ
இன்னும் அவனுடைய தூதருக்கு
أُو۟لَٰٓئِكَ سَيَرْحَمُهُمُ
அவர்கள்/இவர்களுக்கு கருணை புரிவான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Walmu'minoona wal mu'minaatu ba'duhum awliyaaa'u ba;d; yaamuroona bilma'roofi wa yanhawna 'anil munkari wa yuqeemoonas Salaata wa yu'toonaz Zakaata wa yutee'oonal laaha wa Rasoolah; ulaaa'ika sayarhamuhumul laah; innallaaha 'Azeezun Hakeem

நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَعَدَ
வாக்களித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு
وَٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَا
அவற்றில்
وَمَسَٰكِنَ
இன்னும் தங்குமிடங்கள்
طَيِّبَةً
நல்லது
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
عَدْنٍۚ
நிலையான
وَرِضْوَٰنٌ
இன்னும் பொருத்தம்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَكْبَرُۚ
மிகப் பெரியது
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْفَوْزُ
வெற்றி
ٱلْعَظِيمُ
மகத்தானது

Wa'adal laahulmu' mineena walmu'minaati Jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa wa masaakina taiyibatan fee Jannnaati 'adn; wa ridwaanum minal laahi akbar; zaalika hual fawzul 'azeem

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சுவனபதிகளில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கின்றான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும் விட) அல்லாஹ்வின் திருப்பாருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
جَٰهِدِ
போரிடுவீராக
ٱلْكُفَّارَ
நிராகரிப்பவர்களிடம்
وَٱلْمُنَٰفِقِينَ
இன்னும் நயவஞ்சகர்களிடம்
وَٱغْلُظْ
கண்டிப்பீராக
عَلَيْهِمْۚ
அவர்களை
وَمَأْوَىٰهُمْ
அவர்களுடைய தங்குமிடம்
جَهَنَّمُۖ
நரகம்தான்
وَبِئْسَ
கெட்டுவிட்டது
ٱلْمَصِيرُ
மீளுமிடத்தால் அது

yaaa aiyuhan Nabiyyu jaahidil kuffaara walmunaafiqeena waghluz 'alaihim; wa maawaahum jahannnamu wa bi'sal maseer

நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துங்கள். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அது) தங்குமிடங்களில் மிகக்கெட்டது.

Tafseer

يَحْلِفُونَ
சத்தியமிடுகின்றனர்
بِٱللَّهِ
அல்லாஹ் மீது
مَا قَالُوا۟
அவர்கள் கூறவில்லை
وَلَقَدْ قَالُوا۟
கூறியிருக்கின்றனர்
كَلِمَةَ
வார்த்தை
ٱلْكُفْرِ
நிராகரிப்பின்
وَكَفَرُوا۟
இன்னும் நிராகரித்தனர்
بَعْدَ
பின்னர்
إِسْلَٰمِهِمْ
அவர்கள் முஸ்லிமானதற்கு
وَهَمُّوا۟
இன்னும் திட்டமிட்டனர்
بِمَا
எதற்கு
لَمْ يَنَالُوا۟ۚ
அவர்கள் அடையவில்லை
وَمَا نَقَمُوٓا۟
அவர்கள் தண்டிக்கவில்லை
إِلَّآ
தவிர
أَنْ أَغْنَىٰهُمُ
என்பதற்காக/நிறைவாக்கினான்/இவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
مِن فَضْلِهِۦۚ
தன் அருளினால்
فَإِن يَتُوبُوا۟
அவர்கள் திருந்தினால்
يَكُ
இருக்கும்
خَيْرًا
சிறந்ததாக
لَّهُمْۖ
அவர்களுக்கே
وَإِن يَتَوَلَّوْا۟
அவர்கள் விலகிச்சென்றால்
يُعَذِّبْهُمُ
வேதனை செய்வான்/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
عَذَابًا
வேதனையால்
أَلِيمًا
துன்புறுத்தக்கூடிய
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِۚ
இன்னும் மறுமையில்
وَمَا لَهُمْ
அவர்களுக்கு இல்லை
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مِن وَلِىٍّ
ஒரு பாதுகாவலர்
وَلَا نَصِيرٍ
ஓர் உதவியாளர்

Yahlifoona billaahi wa qaaloo wa laqad qaaloo kalimatal kufri wa kafaroo ba'da Islaamihim wa hammoo bimaa lam yanaaloo; wa maa naqamooo illaaa an aghnaa humullaahu wa Rasooluhoo min fadlih; fainy yatooboo yaku khairal lahum wa iny yatawal law yu'az zibhumullaahu 'azaaban aleeman fiddunyaa wal Aakhirah; wamaa lahum fil ardi minw waliyyinw wa laa naseer

(நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதனைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அன்றி, இவர்கள் இஸ்லாமில் சேர்ந்தபின் பின்னர் (அதனை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்கள் ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். அன்றி, அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் நோவினை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை.

Tafseer

وَمِنْهُم
அவர்களில்
مَّنْ
எவர்கள்
عَٰهَدَ
ஒப்பந்தம்செய்தார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
لَئِنْ ءَاتَىٰنَا
அவன் கொடுத்தால்/எங்களுக்கு
مِن فَضْلِهِۦ
தன் அருளிலிருந்து
لَنَصَّدَّقَنَّ
நிச்சயமாக நாம் தர்மம்செய்வோம்
وَلَنَكُونَنَّ
நிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்

Wa minhum man 'aaha dal laaha la'in aataanaa min fadlihee lanas saddaqanna wa lanakoonanna minassaaliheen

அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் "அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதனை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர்.

Tafseer

فَلَمَّآ ءَاتَىٰهُم
போது/கொடுத்தான்/அவர்களுக்கு
مِّن فَضْلِهِۦ
தன் அருளிலிருந்து
بَخِلُوا۟
கஞ்சத்தனம்செய்தனர்
بِهِۦ
அதில்
وَتَوَلَّوا۟
இன்னும் விலகிவிட்டனர்
وَّهُم
அவர்கள்
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்களாக

Falammaaa aataahum min fadlihee bakhiloo bihee wa tawallaw wa hum mu'ridoon

அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்தபொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

Tafseer

فَأَعْقَبَهُمْ
ஆகவே முடிவாக்கினான்/அவர்களுக்கு
نِفَاقًا
நயவஞ்சகத்தை
فِى قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களில்
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
يَلْقَوْنَهُۥ
சந்திப்பார்கள்/அவனை
بِمَآ
எதன் காரணமாக
أَخْلَفُوا۟
மாறாக நடந்தனர்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
مَا
எதை
وَعَدُوهُ
வாக்களித்தனர்/அதை
وَبِمَا كَانُوا۟
இன்னும் எதன் காரணமாக/இருந்தனர்
يَكْذِبُونَ
பொய்சொல்பவர்களாக

Fa a'qabahum nifaaqan fee quloobihim ilaa Yawmi yalqaw nahoo bimaaa akhlaful laaha maa wa'adoohu wa bimaa kaanoo yakhziboon

ஆகவே அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரையில் அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தையூட்டி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும்.

Tafseer

أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
سِرَّهُمْ
அவர்களின் ரகசியத்தை
وَنَجْوَىٰهُمْ
இன்னும் அவர்களின் பேச்சை
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلَّٰمُ
மிக மிக அறிந்தவன்
ٱلْغُيُوبِ
மறைவானவற்றை

Alam ya'lamooo annal laaha ya'lamu sirrahum wa najwaahum wa annal laaha 'Allaamul Ghuyoob

அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதுடன், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய மற்ற) இரகசியங்கள் அனைத்தையும் நன்கறிகின்றான் என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா?

Tafseer

ٱلَّذِينَ يَلْمِزُونَ
எவர்கள்/ குறை கூறுகின்றனர், குத்திப் பேசுகின்றனர்
ٱلْمُطَّوِّعِينَ
உபரியாக செய்பவர்களை
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
فِى ٱلصَّدَقَٰتِ
தர்மங்களில்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
لَا يَجِدُونَ
பெறமாட்டார்கள்
إِلَّا
தவிர
جُهْدَهُمْ
தங்கள் உழைப்பை
فَيَسْخَرُونَ
கேலிசெய்கின்றனர்
مِنْهُمْۙ
அவர்களை
سَخِرَ
கேலி செய்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنْهُمْ
அவர்களை
وَلَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Allazeena yalmizoonal mut tawwi'eena minalmu'mineena fis sadaqaati wallazeena laa yajidoona illaa juhdahum fayaskharoona minhum sakhiral laahu minhum wa lahum azaabun aleem

இவர்கள் எத்தகையவர்களென்றால், நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றி குற்றம் கூறுகின்றனர். (அதிலும் குறிப்பாக) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் அவர்கள் பரிகசிக்கின்றனர். அல்லாஹ் (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களைப் பரிகசிக்கின்றான். அன்றி (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

Tafseer

ٱسْتَغْفِرْ
நீர் மன்னிப்புத்தேடுவீராக
لَهُمْ
அவர்களுக்காக
أَوْ
அல்லது
لَا تَسْتَغْفِرْ
மன்னிப்புத் தேடாதீர்
لَهُمْ
அவர்களுக்காக
إِن تَسْتَغْفِرْ
நீர் மன்னிப்புத் தேடினாலும்
لَهُمْ
அவர்களுக்காக
سَبْعِينَ
எழுபது
مَرَّةً
முறை
فَلَن يَغْفِرَ
மன்னிக்கவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُمْۚ
அவர்களை
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرَسُولِهِۦۗ
இன்னும் அவனுடைய தூதரை
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
மக்கள்/பாவிகளான

istaghfir lahum aw laa tastaghfir lahum in tastaghfir lahum sab'eena marratan falany yaghfiral laahu lahum; zaalika bi annahum kafaroo billaahi wa Rasoolih; wallaahu laa yahdil qawmal faasiqeen

(நபியே!) நீங்கள் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீங்கள் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீங்கள் எழுபது தடவைகள் மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer