Skip to main content

وَمِنْهُمُ
அவர்களில்
ٱلَّذِينَ
எவர்கள்
يُؤْذُونَ
இகழ்கிறார்கள், குறை கூறுகிறார்கள்
ٱلنَّبِىَّ
நபியை
وَيَقُولُونَ
கூறுகின்றனர்
هُوَ
அவர்
أُذُنٌۚ
ஒரு காது
قُلْ
கூறுவீராக
أُذُنُ
காது
خَيْرٍ لَّكُمْ
நல்லது/உங்களுக்கு
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَيُؤْمِنُ
இன்னும் ஏற்றுக் கொள்கிறார்
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
لِّلَّذِينَ
எவர்களுக்கு
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
مِنكُمْۚ
உங்களில்
وَٱلَّذِينَ
எவர்கள்
يُؤْذُونَ
இகழ்கின்றனர்
رَسُولَ
தூதரை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது

Wa minhumul lazeena yu'zoonan nabiyya wa yaqooloona huwa uzun; qul uzunu khairil lakum yu'minu billaahi wa yu'minu lilmu mi neena wa rahmatul lillazeena aamanoo minkum; wallazeena yu'zoona Rasoolal laahi lahum 'azaabun aleem

("இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கின்றார்" என்று கூறி (நமது) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறு அவர்) செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். அன்றி, உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கின்றார்." ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

يَحْلِفُونَ
சத்தியம் செய்கின்றனர்
بِٱللَّهِ
அல்லாஹ் மீது
لَكُمْ
உங்களுக்காக
لِيُرْضُوكُمْ
அவர்கள் திருப்தி படுத்துவதற்காக உங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
وَرَسُولُهُۥٓ
இன்னும் அவனுடைய தூதர்
أَحَقُّ
மிகவும் தகுதியுடையவர்கள்
أَن يُرْضُوهُ
அவர்கள் திருப்தி படுத்துவதற்கு/அவனை
إِن كَانُوا۟
அவர்கள் இருந்தால்
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

yahlifoona billaahi lakum liyurdookum wallaahu wa Rasooluhoo ahaqqu ai yurdoohu in kaanoo mu'mineen

(நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்து வதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கை யாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்.)

Tafseer

أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
مَن
எவர்
يُحَادِدِ
முரண்படுவார்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
فَأَنَّ
நிச்சயமாக
لَهُۥ
அவருக்கு
نَارَ
நெருப்பு
جَهَنَّمَ
நரகத்தின்
خَٰلِدًا
நிரந்தரமானவர்
فِيهَاۚ
அதில்
ذَٰلِكَ
இதுதான்
ٱلْخِزْىُ
இழிவு, கேவலம்
ٱلْعَظِيمُ
பெரிய

Alam ya'lamooo annahoo mai yuhaadidillaaha wa Rasoolahoo faanna lahoo Naara jahannama khaalidan feehaa; zaalikal khizyul 'Azeem

எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கி விடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும்.

Tafseer

يَحْذَرُ
பயப்படுகின்றனர்
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்கள்
أَن تُنَزَّلَ
இறக்கப்பட்டு
عَلَيْهِمْ
அவர்கள் மீது
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
تُنَبِّئُهُم
அறிவித்துவிடுவதை/அவர்களுக்கு
بِمَا
எவற்றை
فِى قُلُوبِهِمْۚ
தங்கள் உள்ளங்களில்
قُلِ
கூறுவீராக
ٱسْتَهْزِءُوٓا۟
பரிகசித்துக் கொள்ளுங்கள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
مُخْرِجٌ
வெளியாக்குபவன்
مَّا
எதை
تَحْذَرُونَ
பயப்படுகிறீர்கள்

Yahzarul munaafiqoona an tunaz zala 'alaihim Sooratun tunabbi 'uhum bimaa feequloobihim; qulistahzi'oo innal laaha mukhrijum maa tahzaroon

நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் பரிகசித்துக்கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்."

Tafseer

وَلَئِن
سَأَلْتَهُمْ
நீர் கேட்டால்/அவர்களை
لَيَقُولُنَّ
நிச்சயம் கூறுவார்கள்
إِنَّمَا
எல்லாம்
كُنَّا
நாங்கள் இருந்தோம்
نَخُوضُ
மூழ்குபவர்களாக
وَنَلْعَبُۚ
இன்னும் விளையாடுபவர்களாக
قُلْ
கூறுவீராக
أَبِٱللَّهِ
அல்லாஹ்வையா?
وَءَايَٰتِهِۦ
இன்னும் அவனுடைய வசனங்களை
وَرَسُولِهِۦ
இன்னும் அவனுடயை தூதரை
كُنتُمْ
இருந்தீர்கள்
تَسْتَهْزِءُونَ
பரிகசிக்கிறீர்கள்

Wala'in sa altahum layaqoolunna innamaa kunnaa nakhoodu wa nal'ab; qul abillaahi wa 'Aayaatihee wa Rasoolihee kuntum tastahzi'oon

(இதனைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் "விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கின்றீர்கள்?" என்று நீங்கள் கேளுங்கள்.

Tafseer

لَا تَعْتَذِرُوا۟
புகல் கூறாதீர்கள்
قَدْ كَفَرْتُم
நிராகரித்து விட்டீர்கள்
بَعْدَ إِيمَٰنِكُمْۚ
பின்னர்/நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
إِن نَّعْفُ
நாம் மன்னித்தால்
عَن طَآئِفَةٍ
ஒரு கூட்டத்தை
مِّنكُمْ
உங்களில்
نُعَذِّبْ
வேதனை செய்வோம்
طَآئِفَةًۢ
ஒரு கூட்டத்தை
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தனர்
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக

Laa ta'taziroo qad kafartum ba'da eemaanikum; in na'fu 'an taaa'ifatim minkum nu'az zib taaa'ifatam bi annahum kaanoo mujrimeen

நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகல் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதனை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.)

Tafseer

ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சக ஆண்கள்
وَٱلْمُنَٰفِقَٰتُ
இன்னும் நயவஞ்சக பெண்கள்
بَعْضُهُم
அவர்களில் சிலர்
مِّنۢ بَعْضٍۚ
சிலரைச் சேர்ந்தவர்கள்
يَأْمُرُونَ
ஏவுகின்றனர்
بِٱلْمُنكَرِ
தீமையை
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கின்றனர்
عَنِ ٱلْمَعْرُوفِ
நன்மையை விட்டு
وَيَقْبِضُونَ
இன்னும் மூடிக் கொள்கின்றனர்
أَيْدِيَهُمْۚ
தங்கள் கரங்களை
نَسُوا۟
மறந்தார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
فَنَسِيَهُمْۗ
ஆகவே மறந்தான்/அவர்களை
إِنَّ
நிச்சயமாக
ٱلْمُنَٰفِقِينَ هُمُ
நயவஞ்சகர்கள்தான்
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்

Almunaafiqoona wal munaafiqaatu ba'duhum mim ba'd; yaamuroona bilmunkari wa yanhawna 'anil ma'roofi wa yaqbidoona aidiyahum; nasul laaha fanasiyahum; innal munaafiqeena humul faasiqoon

ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்.

Tafseer

وَعَدَ
வாக்களித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சக ஆண்களுக்கு
وَٱلْمُنَٰفِقَٰتِ
இன்னும் நயவஞ்சக பெண்களுக்கு
وَٱلْكُفَّارَ
இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு
نَارَ
நெருப்பை
جَهَنَّمَ
நரகத்தின்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَاۚ
அதில்
هِىَ
அதுவே
حَسْبُهُمْۚ
அவர்களுக்கு போதும்
وَلَعَنَهُمُ
இன்னும் சபித்தான்/அவர்களை
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
مُّقِيمٌ
நிலையானது

Wa'adal laahul munafiqeena wal munaafiqaati wal kuffaara naara jahannnamma khaalideena feehaa; hiya hasbuhum; wa la'annahumul laahu wa lahum 'azaabum muqeem

நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். அன்றி, அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கின்றான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.

Tafseer

كَٱلَّذِينَ
எவர்களைப்போன்றே
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
كَانُوٓا۟
இருந்தனர்
أَشَدَّ
கடுமையானவர்களாக
مِنكُمْ
உங்களை விட
قُوَّةً
பலத்தால்
وَأَكْثَرَ
இன்னும் அதிகமானவர்களாக
أَمْوَٰلًا
செல்வங்களால்
وَأَوْلَٰدًا
இன்னும் சந்ததிகளால்
فَٱسْتَمْتَعُوا۟
சுகமடைந்தார்கள்
بِخَلَٰقِهِمْ
தங்கள் பங்கைக் கொண்டு
فَٱسْتَمْتَعْتُم
நீங்கள் சுகமடைந்தீர்கள்
بِخَلَٰقِكُمْ
உங்கள் பங்கைக் கொண்டு
كَمَا
போன்று
ٱسْتَمْتَعَ
சுகமடைந்தார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِكُم
உங்களுக்கு முன்னர்
بِخَلَٰقِهِمْ
தங்கள் பங்கைக் கொண்டு
وَخُضْتُمْ
மூழ்கினீர்கள்
كَٱلَّذِى
எது போன்று
خَاضُوٓا۟ۚ أُو۟لَٰٓئِكَ
மூழ்கினர்/அவர்கள்
حَبِطَتْ
அழிந்தன
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமையில்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Kallazeena min qablikum kaanoo ashadda minkum quwwatanw wa aksara amwaalanw wa awlaadan fastamta'oo bikhalaaqihim fastamta'tum bikhalaaqikum kamas tamta'al lazeena min qablikum bikhalaa qihim wa khudtum kallazee khaadooo; ulaaa'ika habitat a'maaluhum fid dunyaa wal Aakhirati wa ulaaa'ika humul khaasiroon

(நயவஞ்சகர்களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்ளிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கின்றது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்.)

Tafseer

أَلَمْ يَأْتِهِمْ
வரவில்லையா/அவர்களுக்கு
نَبَأُ
செய்தி, சரித்திரம்
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
قَوْمِ
சமுதாயம்
نُوحٍ
நூஹூடைய
وَعَادٍ
இன்னும் ஆது
وَثَمُودَ
இன்னும் ஸமூது
وَقَوْمِ
இன்னும் சமுதாயம்
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
وَأَصْحَٰبِ مَدْيَنَ
இன்னும் மத்யன் வாசிகள்
وَٱلْمُؤْتَفِكَٰتِۚ
தலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள்
أَتَتْهُمْ
அவர்கள் வந்தார்கள்
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِۖ
அத்தாட்சிகளைக் கொண்டு
فَمَا كَانَ
இருக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக
وَلَٰكِن كَانُوٓا۟
எனினும்/இருந்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
அநீதியிழைப்பவர்களாக

Alam yaatihim naba ul lazeena min qablihim qawmi Noohinw wa 'Aadinw wa Samooda wa qawmi Ibraaheema wa ashaabi adyana walmu'tafikaat; atathum Rusuluhum bilbaiyinaati famaa kaanal laahu liyazlimahum wa laakin kaanooo anfusahum yazlimoon

இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்ராஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (யாதொரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர்.

Tafseer