Skip to main content

يُبَشِّرُهُمْ
நற்செய்தி கூறுகிறான்/அவர்களுக்கு
رَبُّهُم
அவர்களுடைய இறைவன்
بِرَحْمَةٍ
கருணையைக்கொண்டு
مِّنْهُ
தன்னிடமிருந்து
وَرِضْوَٰنٍ
இன்னும் பொருத்தம், மகிழ்ச்சி
وَجَنَّٰتٍ
இன்னும் சொர்க்கங்கள்
لَّهُمْ
அவர்களுக்கு
فِيهَا
அவற்றில்
نَعِيمٌ مُّقِيمٌ
இன்பம்/நிலையானது

Yubashshiruhum Rabbuhum birahmatim minhu wa ridwaaninw wa Jannaatil lahum feehaa na'eemum muqeem

அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சுவனபதிகளையும் தருவதாக நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அ(ச்சுவனப)தி (களி)ல் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு.

Tafseer

خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَآ
அவற்றில்
أَبَدًاۚ
எப்போதும்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عِندَهُۥٓ
அவனிடம்
أَجْرٌ
கூலி
عَظِيمٌ
மகத்தானது

Khaalideena feehaaa abadaa; innal laaha 'indahooo ajrun 'azeem

என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள். (இதனை அன்றி) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அவர்களுக்கு இன்னும்) மகத்தான கூலி உண்டு.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَتَّخِذُوٓا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
ءَابَآءَكُمْ
உங்கள் தாய் தந்தைகளை
وَإِخْوَٰنَكُمْ
இன்னும் உங்கள் சகோதரர்களை
أَوْلِيَآءَ
பொறுப்பாளர்களாக
إِنِ ٱسْتَحَبُّوا۟
அவர்கள் விரும்பினால்
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
عَلَى ٱلْإِيمَٰنِۚ
விட/இறைநம்பிக்கை
وَمَن
எவர்(கள்)
يَتَوَلَّهُم
பொறுப்பாளர்களாக ஆக்கிக்கொள்வார்(கள்)/அவர்களை
مِّنكُمْ
உங்களில்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizooo aabaaa 'akum wa ikhwaanakum awliyaaa'a inis tahabbul kufra 'alal eemaan; wa mai yatawal lahum minkum fa ulaaa'ika humuz zaalimoon

நம்பிக்கையாளர்களே! உங்களுடைய தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொண்டால் நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
إِن كَانَ
இருந்தால்
ءَابَآؤُكُمْ
உங்கள் பெற்றோர்
وَأَبْنَآؤُكُمْ
இன்னும் பிள்ளைகள்/உங்கள்
وَإِخْوَٰنُكُمْ
இன்னும் உங்கள் சகோதரர்கள்
وَأَزْوَٰجُكُمْ
இன்னும் உங்கள் மனைவிகள்
وَعَشِيرَتُكُمْ
இன்னும் உங்கள் குடும்பம்
وَأَمْوَٰلٌ
இன்னும் செல்வங்கள்
ٱقْتَرَفْتُمُوهَا
சம்பாதித்தீர்கள்/அவற்றை
وَتِجَٰرَةٌ
இன்னும் வர்த்தகம்
تَخْشَوْنَ
பயப்படுகிறீர்கள்
كَسَادَهَا
அது மந்தமாகி விடுவதை
وَمَسَٰكِنُ
இன்னும் வீடுகள்
تَرْضَوْنَهَآ
நீங்கள் விரும்புகிறீர்கள்/அவற்றை
أَحَبَّ
மிக விருப்பமாக
إِلَيْكُم
உங்களுக்கு
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
وَرَسُولِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்
وَجِهَادٍ
இன்னும் போரிடுவது
فِى سَبِيلِهِۦ
அவனுடைய பாதையில்
فَتَرَبَّصُوا۟
எதிர்பாருங்கள்
حَتَّىٰ يَأْتِىَ
வரை/வருவான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِأَمْرِهِۦۗ
தன் கட்டளையைக் கொண்டு
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
மக்களை/பாவிகள்

Qul in kaana aabaaa'ukum wa abnaaa'ukum wa ikhwaanukum wa azwaajukum wa 'asheeratukum wa amwaaluniq taraftumoohaa wa tijaaratun takhshawna kasaadahaa wa masaakinu tardawnahaaa ahabba ilaikum minal laahi wa Rasoolihee wa Jihaadin fee Sabeelihee fatarabbasoo hattaa yaatiyallaahu bi amrih; wallaahu laa yahdil qawmal faasiqeen

(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
نَصَرَكُمُ
உதவினான் உங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
فِى مَوَاطِنَ
போர்க்களங்களில்
كَثِيرَةٍۙ
அதிகமான
وَيَوْمَ
இன்னும் அன்று
حُنَيْنٍۙ
ஹுனைன்
إِذْ أَعْجَبَتْكُمْ
போது/பெருமைப்படுத்தியது/உங்களை
كَثْرَتُكُمْ
நீங்கள் அதிகமாக இருப்பது
فَلَمْ تُغْنِ
பலன் தரவில்லை
عَنكُمْ شَيْـًٔا
உங்களுக்கு/எதையும்
وَضَاقَتْ
இன்னும் நெருக்கடியாகி விட்டது
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْأَرْضُ
பூமி
بِمَا رَحُبَتْ
அது விசாலமாக இருந்தும்
ثُمَّ
பிறகு
وَلَّيْتُم
திரும்பினீர்கள்
مُّدْبِرِينَ
புறமுதுகு காட்டியவர்களாக

Laqad nasarakumul laahu fee mawaatina kaseeratinw wa yawma Hunainin iz a'jabatkum kasratukum falam tughni 'ankum shai'anw wa daaqat 'alaikumul ardu bimaa rahubat summa wallaitum mudbireen

பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு யாதொரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.

Tafseer

ثُمَّ أَنزَلَ
பிறகு/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَكِينَتَهُۥ
தன் அமைதியை
عَلَىٰ رَسُولِهِۦ
தன் தூதர் மீது
وَعَلَى ٱلْمُؤْمِنِينَ
இன்னும் மீது/நம்பிக்கை கொண்டவர்கள்
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
جُنُودًا
(சில) படைகளை
لَّمْ تَرَوْهَا
நீங்கள் பார்க்கவில்லை/அவற்றை
وَعَذَّبَ
இன்னும் வேதனை செய்தான்
ٱلَّذِينَ
எவர்களை
كَفَرُوا۟ۚ
நிராகரித்தனர்
وَذَٰلِكَ جَزَآءُ
இன்னும் இதுதான் கூலி
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்

Summa anzalal laahu sakeenatahoo 'alaa Rasoolihee wa 'alalmu 'mineena wa anzala junoodal lam tarawhaa wa azzabal lazeena kafaroo; wa zaalika jazaaa'ul kaafireen

(இதன்) பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன்னுடைய அமைதியை அளித்து அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படையையும் (உங்களுக்கு உதவியாக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும்.

Tafseer

ثُمَّ
பிறகு
يَتُوبُ
பிழை பொறுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنۢ بَعْدِ
பின்னர்
ذَٰلِكَ
அதற்கு
عَلَىٰ
மீது
مَن
எவர்
يَشَآءُۗ
நாடுகிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Summa yatoobul laahu mim ba'di zaalika 'alaa mai yashaaa'; wallaahu Ghafoorur Raheem

இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை அங்கீகரித்துக் கொள்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِنَّمَا
எல்லாம்
ٱلْمُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்
نَجَسٌ
அசுத்தமானவர்கள்
فَلَا يَقْرَبُوا۟
நெருங்கக் கூடாது
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதை
ٱلْحَرَامَ
புனிதமானது
بَعْدَ
பின்னர்
عَامِهِمْ هَٰذَاۚ
அவர்களுடைய ஆண்டு/இந்த
وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
عَيْلَةً
வறுமையை
فَسَوْفَ يُغْنِيكُمُ
நிறைவாக்குவான்/உங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
مِن فَضْلِهِۦٓ
தனது அருளினால்
إِن شَآءَۚ
நாடினால்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Yaaa aiyuhal lazeena aamanooo innamal mushrikoona najasun falaa yaqrabul Masjidal Haraama ba'da 'aamihim haaza; wa in khiftum 'ailatan fasawfa yughnee kumul laahu min fadliheee in shaaa'; innallaaha 'Aleemun hakeem

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இவ்வருடத்திற்குப் பின்னர் இனி சிறப்புற்ற இப்பள்ளியை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக்கொண்டு உங்களை செல்வந்தர்கள் ஆக்கி விடுவான் (என்பதை அறிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
ٱلَّذِينَ
எவர்களிடம்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَلَا
இன்னும் இல்லை
بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
மறுமை நாளை
وَلَا يُحَرِّمُونَ
இன்னும் தடை செய்ய மாட்டார்கள்
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
وَلَا يَدِينُونَ
மார்க்கமாக ஏற்க மாட்டார்கள்
دِينَ
மார்க்கத்தை
ٱلْحَقِّ
உண்மை, சத்தியம்
مِنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
حَتَّىٰ
வரை
يُعْطُوا۟
கொடுப்பார்கள்
ٱلْجِزْيَةَ
வரியை (ஜிஸ்யா)
عَن يَدٍ
உடனே
وَهُمْ
அவர்கள் இருக்க
صَٰغِرُونَ
பணிந்தவர்கள்

Qaatilul lazeena laa yu'minoona billaahi wa laa bil yawmil Aakhiri wa laa yuharrimoona maa harramal laahu wa Rasooluhoo wa laa yadeenoona deenal haqqi minal lazeena ootul Kitaaba hattaa yu'tul jizyata ai yadinw wa hum saaghiroon

(நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவைகளை தடையாகக் கருதாமல், மேலும் இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் "ஜிஸ்யா" (என்னும் கப்பம்) கட்டும் வரையில் நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்.

Tafseer

وَقَالَتِ
கூறுகிறா(ர்க)ள்
ٱلْيَهُودُ
யூதர்கள்
عُزَيْرٌ
உஜைர்
ٱبْنُ
மகன்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَقَالَتِ
இன்னும் கூறுகிறா(ர்க)ள்
ٱلنَّصَٰرَى
கிறித்தவர்கள்
ٱلْمَسِيحُ
மஸீஹ்
ٱبْنُ
மகன்
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
ذَٰلِكَ
இது
قَوْلُهُم
அவர்களின் கூற்று
بِأَفْوَٰهِهِمْۖ
அவர்களின் வாய்களிலிருந்து
يُضَٰهِـُٔونَ
ஒப்பாகின்றனர்
قَوْلَ
கூற்றுக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
مِن قَبْلُۚ
முன்னர்
قَٰتَلَهُمُ
அவர்களை அழிப்பான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
أَنَّىٰ
எப்படி
يُؤْفَكُونَ
திருப்பப்படுகின்றனர்

Q qaalatil yahoodu 'Uzairunib nul laahi wa qaalatin Nasaaral Maseehub nul laahi zaalika qawluhum bi afwaahihim yudaahi'oona qawlal lazeena kafaroo min qabl; qatalahumul laah; annaa yu'fakoon

யூதர்கள் (நபி) "உஜைரை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் "மஸீஹை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?

Tafseer