Skip to main content

وَيَعْبُدُونَ
அவர்கள் வணங்குகின்றனர்
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
مَا لَمْ
எதை/இறக்கவில்லை
بِهِۦ
அதற்கு
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தையும்
وَمَا
இன்னும் எதை
لَيْسَ
இல்லை
لَهُم
அவர்களுக்கு
بِهِۦ
அதைப் பற்றி
عِلْمٌۗ
அறிவும்
وَمَا
இல்லை
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
مِن نَّصِيرٍ
உதவியாளர் யாரும்

Wa ya'budoona min doonil laahi maa lam yunazzil bihee sultaananw wa maa laisa lahum bihee 'ilm; wa maa lizzaalimeena min naseer

(நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) யாதொரு அத்தாட்சியும் அளிக்கவில்லை; அன்றி, அவர்களிடம் கல்வி சம்பந்தமான யாதொரு ஆதாரமும் இல்லை. இத்தகைய அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்.

Tafseer

وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
بَيِّنَٰتٍ
தெளிவான
تَعْرِفُ
நீர் பார்ப்பீர்
فِى وُجُوهِ
முகங்களில்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுடைய
ٱلْمُنكَرَۖ
விரும்பாததை
يَكَادُونَ
அவர்கள் முயற்சிக்கின்றனர்
يَسْطُونَ
கடுமையாகப் பிடித்து விடுவதற்கு
بِٱلَّذِينَ يَتْلُونَ
ஓதிக் காட்டுபவர்களை
عَلَيْهِمْ
அவர்களுக்கு முன்
ءَايَٰتِنَاۗ
நமது வசனங்களை
قُلْ
நீர் கூறுவீராக
أَفَأُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிக்கவா
بِشَرٍّ
வெறுப்பானதை
مِّن ذَٰلِكُمُۗ
இவர்களைவிட
ٱلنَّارُ
நரகம்
وَعَدَهَا
அதை வாக்களித்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ كَفَرُوا۟ۖ
நிராகரித்தவர்களுக்கு
وَبِئْسَ
அது மிகக் கெட்டது
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்

Wa izaa tutlaa 'laihim Aayaatunaa baiyinaatin ta'rifu fee wujoohil lazeena kafarul munkara yakaadoona yastoona bil lazeena yatloona 'alaihim Aayaatinaa; qul afa unab bi'ukum bisharrim min zaalikum; an Naaru wa 'adahal laahul lazeena kafaroo wa bi'sal maseer

அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதனை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீங்கள் காண்பீர்கள். நம்முடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: நான் உங்களுக்கு இதனைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதனையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவருக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
ضُرِبَ
விவரிக்கப்படுகிறது
مَثَلٌ
ஓர் உதாரணம்
فَٱسْتَمِعُوا۟
செவிமடுத்து கேளுங்கள்
لَهُۥٓۚ
அதை
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றவை
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
لَن يَخْلُقُوا۟
அறவே படைக்க மாட்டார்கள்
ذُبَابًا
ஒரு ஈயையும்
وَلَوِ ٱجْتَمَعُوا۟
அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சரி/அதற்கு
وَإِن يَسْلُبْهُمُ
அதைப் பறித்தால்/அவர்களிடமிருந்து
ٱلذُّبَابُ
شَيْـًٔا
எதையும்
لَّا يَسْتَنقِذُوهُ
அவர்கள் பாதுகாக்க மாட்டார்கள்/அதை
مِنْهُۚ
அதனிடமிருந்து
ضَعُفَ
பலவீனமானவர்(களே)
ٱلطَّالِبُ
தேடக்கூடியதும்
وَٱلْمَطْلُوبُ
தேடப்படுவதும்

Yaaa ayyuhan naasu duriba masalun fastami'oo lah; innal lazeena tad'oona min doonil laahi lai yakhluqoo zubaabanw wa lawijtama'oo lahoo wa iny yaslub humuz zubbabu shai'al laa yastan qizoohu minh; da'ufat taalibu walmatloob

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதனைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!

Tafseer

مَا قَدَرُوا۟
கண்ணியப்படுத்தவில்லை
ٱللَّهَ
அல்லாஹ்வை
حَقَّ
தக்கவாறு
قَدْرِهِۦٓۗ
அவனுடைய தகுதிக்கு
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَقَوِىٌّ
மகா வலிமையுடையவன்
عَزِيزٌ
மிகைத்தவன்

Maa qadrul laaha haqqa qadrih; innal laaha la Qawiyyun 'Azeez

அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
يَصْطَفِى
தேர்வு செய்கிறான்
مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்தும்
رُسُلًا
தூதர்களை
وَمِنَ ٱلنَّاسِۚ
மனிதர்களிலிருந்தும்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Allahu yastafee minal malaaa'ikati Rusulanw wa minan naas; innal laaha Samee'um Baseer

மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَعْلَمُ
அவன் நன்கறிவான்
مَا بَيْنَ
அவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும்
وَمَا خَلْفَهُمْۗ
அவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும்
وَإِلَى
பக்கமே
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تُرْجَعُ
திருப்பப்படுகின்றன
ٱلْأُمُورُ
காரியங்கள்

Ya'lamu maa baina aydeehim wa maa khalfahum; wa ilal laahi turja'ul umoor

அவர்களுக்கு முன்னர் (சென்று) இருப்பவைகளையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவைகளையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் அல்லாஹ்விடமே திரும்ப கொண்டு வரப்படும்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱرْكَعُوا۟
குனியுங்கள்
وَٱسْجُدُوا۟
இன்னும் சிரம்பணியுங்கள்
وَٱعْبُدُوا۟
இன்னும் வணங்குங்கள்
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ
செய்யுங்கள்/நன்மை
لَعَلَّكُمْ تُفْلِحُونَ۩
நீங்கள் வெற்றி அடைவதற்காக

Yaaa ayyuhal lazeena aamanur ka'oo wasjudoo wa'budoo Rabbakum waf'alul khaira la'allakum tuflihoon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.

Tafseer

وَجَٰهِدُوا۟
போரிடுங்கள்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் பாதையில்
حَقَّ
முழுமையாக
جِهَادِهِۦۚ
போரிடுவதாக
هُوَ
அவன்தான்
ٱجْتَبَىٰكُمْ
உங்களைத் தேர்ந்தெடுத்தான்
وَمَا جَعَلَ
அவன் வைக்கவில்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
مِنْ حَرَجٍۚ
எவ்வித நெருக்கடியையும்
مِّلَّةَ
மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள்
أَبِيكُمْ
உங்கள் தந்தை
إِبْرَٰهِيمَۚ
இப்றாஹீமுடைய
هُوَ
அவன்
سَمَّىٰكُمُ
உங்களுக்கு பெயர் வைத்தான்
ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்கள்
مِن قَبْلُ
இதற்கு முன்னரும்
وَفِى هَٰذَا
இதிலும்
لِيَكُونَ
இருப்பதற்காகவும்
ٱلرَّسُولُ
தூதர்
شَهِيدًا
சாட்சியாளராக
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَتَكُونُوا۟
இன்னும் நீங்கள் இருப்பதற்காக
شُهَدَآءَ
சாட்சியாளர்களாக
عَلَى ٱلنَّاسِۚ
மக்கள் மீது
فَأَقِيمُوا۟
ஆகவே நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَٱعْتَصِمُوا۟
உறுதியாக நம்புங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
هُوَ
அவன்தான்
مَوْلَىٰكُمْۖ
உங்கள் பொறுப்பாளன்
فَنِعْمَ
அவன் சிறந்தவன்
ٱلْمَوْلَىٰ
பொறுப்பாளன் (எஜமானன்)
وَنِعْمَ
அவன் சிறந்தவன்
ٱلنَّصِيرُ
உதவியாளன்

Wa jaahidoo fil laahi haqqa jihaadih; Huwaj tabaakum wa maa ja'ala 'alaikum fid deeni min haraj; Millata abeekum Ibraaheem; Huwa sammaakumul muslimeena min qablu wa fee haaza li yakoonar Rasoolu shaheedan 'alaikum wa takoonoo shuhadaaa'a 'alan naas; fa aqeemus salaata wa aatuz zakaata wa'tasimoo billaahi Huwa mawlaakum fani'mal mawlaa wa ni'man naseer

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.

Tafseer