Skip to main content

وَلَنَبْلُوَنَّكُمْ
நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம்
حَتَّىٰ نَعْلَمَ
நாம் அறிகின்றவரை
ٱلْمُجَٰهِدِينَ
ஜிஹாது செய்பவர்களை
مِنكُمْ
உங்களில்
وَٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர் களையும்
وَنَبْلُوَا۟
இன்னும் நாம் சோதிப்போம்
أَخْبَارَكُمْ
உங்கள் செய்திகளை

Wa lanabluwannakum hattaa na'lamal mujaahideena minkum wassaabireena wa nabluwa akhbaarakum

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனமொப்பி) போர் புரிபவர்கள் எவர்கள் என்பதையும், (போரில் ஏற்படும்) கஷ்டங்களை (உறுதியாக) சகித்திருப்பவர்கள் எவரென்பதையும் நாம் அறிந்து வெளிப்படுத்தும் வரையில், உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்கள்
عَن سَبِيلِ
பாதையில் இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَشَآقُّوا۟
இன்னும் மாறுசெய்தார்கள்
ٱلرَّسُولَ
தூதருக்கு
مِنۢ بَعْدِ
தெளிவானதற்குப் பின்னர்
لَهُمُ
தங்களுக்கு
ٱلْهُدَىٰ
நேர்வழி
لَن يَضُرُّوا۟
அறவே அவர்கள் தீங்கு செய்ய முடியாது
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
شَيْـًٔا
எதையும்
وَسَيُحْبِطُ
இன்னும் வீணாக்கி விடுவான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை

Innnal lazeena kafaroo wa saddoo 'an sabeelil laahi wa shaaaqqur Rasoola mim ba'di maa tabaiyana lahumul hudaa lany yadurrul laaha shai'anw wa sa yuhbitu a'maalahum

நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதனை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை (மற்றவர்களுக்கு)த் தடுத்துக்கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கின்றார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்!
ٱلرَّسُولَ
தூதருக்கு
وَلَا تُبْطِلُوٓا۟
வீணாக்காதீர்கள்!
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை

Yaaa ayyuhal lazeena aamanoo atee'ul laaha wa atee'ur Rasoola wa laa tubtilooo a'maalakum

நம்பிக்கையாளர்களே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்களுடைய நன்மைகளை நீங்கள் வீணாக்கி விடாதீர்கள்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்கள்
عَن سَبِيلِ
பாதையில் இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثُمَّ مَاتُوا۟
பிறகு மரணித்தார்கள்
وَهُمْ
தாங்கள் இருக்கின்ற நிலையில்
كُفَّارٌ
நிராகரிப்பாளர்களாக
فَلَن يَغْفِرَ
மன்னிக்கவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُمْ
அவர்களை

Innal lazeena kafaroo wa saddoo 'an sabeelil laahi summa maatoo wa hum kuffaarun falany yaghfirallaahu lahum

எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையையும் தடுத்துக் கொண்டு, நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றார்களோ, அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் ஒரு காலத்திலும் மன்னிப்பதே இல்லை.

Tafseer

فَلَا تَهِنُوا۟
பலவீனப்படாதீர்கள்
وَتَدْعُوٓا۟
அழைத்து விடாதீர்கள்!
إِلَى ٱلسَّلْمِ
சமாதானத்திற்கு
وَأَنتُمُ
நீங்கள்தான்
ٱلْأَعْلَوْنَ
மிக உயர்வானவர்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
مَعَكُمْ
உங்களுடன் இருக்கின்றான்
وَلَن يَتِرَكُمْ
உங்களுக்கு குறைக்கவேமாட்டான்
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை

Falaa tahinoo wa tad'ooo ilas salmi wa antumul a'lawna wallaahu ma'akum wa lany yatirakum a'maalakum

(போர் புரியும் நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தாம் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கின்றான். உங்களுடைய நன்மைகளில் ஒன்றையும் அவன் குறைத்துவிடமாட்டான்.

Tafseer

إِنَّمَا ٱلْحَيَوٰةُ
உலக வாழ்க்கை எல்லாம்
لَعِبٌ
விளையாட்டு(ம்)
وَلَهْوٌۚ
வேடிக்கையும்தான்
وَإِن تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொண்டால்
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சி நடந்தால்
يُؤْتِكُمْ
அவன் உங்களுக்கு கொடுப்பான்
أُجُورَكُمْ
உங்கள் கூலிகளை
وَلَا يَسْـَٔلْكُمْ
அவன் உங்களிடம் கேட்கமாட்டான்
أَمْوَٰلَكُمْ
உங்கள்செல்வங்களை

Innamal hayaatud dunyaa la'ibunw wa lahw; wa in to'minoo wa tattaqoo yu'tikum ujoorakum wa laa yas'alkum amwaalakum

இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும் வேடிக்கையும் தான். நீங்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு அவனுக்குப் பயந்து நடந்துகொண்டால், உங்களுடைய பொருள்களை அவன் (தனக்காகக்) கேட்கவில்லை. (உங்களுடைய நன்மைக்காகவே கேட்கின்றான்.)

Tafseer

إِن يَسْـَٔلْكُمُوهَا
அவன் அவற்றை உங்களிடம் கேட்டால்
فَيُحْفِكُمْ
இன்னும் அவன் உங்களை வலியுறுத்தினால்
تَبْخَلُوا۟
நீங்கள் கருமித்தனம் செய்வீர்கள்
وَيُخْرِجْ
இன்னும் வெளிப்படுத்தி காண்பித்து விடுவான்
أَضْغَٰنَكُمْ
உங்கள் குரோதங்களை

Iny yas'alkumoohaa fa yuhfikum tabkhaloo wa yukhrij adghaanakum

அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதனைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்களுடைய கெட்ட எண்ணத்தை வெளியாக்கி விடுவான்.

Tafseer

هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ
நீங்கள்தான்
تُدْعَوْنَ
அழைக்கப்படுகிறீர்கள்
لِتُنفِقُوا۟
நீங்கள் தர்மம் செய்வதற்கு
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَمِنكُم
உங்களில் இருக்கின்றார்
مَّن يَبْخَلُۖ
கருமித்தனம் செய்பவரும்
وَمَن يَبْخَلْ
எவர் கருமித்தனம் செய்வாரோ
فَإِنَّمَا يَبْخَلُ
அவர் கருமித்தனம் செய்வதெல்லாம்
عَن نَّفْسِهِۦۚ
அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான்
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
ٱلْغَنِىُّ
முற்றிலும் நிறைவானவன்
وَأَنتُمُ
நீங்கள்தான்
ٱلْفُقَرَآءُۚ
தேவையுள்ளவர்கள்
وَإِن تَتَوَلَّوْا۟
நீங்கள் விலகிச்சென்றால்
يَسْتَبْدِلْ
அவன் மாற்றுவான்
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
غَيْرَكُمْ
நீங்கள் அல்லாத
ثُمَّ
பிறகு
لَا يَكُونُوٓا۟
அவர்கள் இருக்க மாட்டார்கள்
أَمْثَٰلَكُم
உங்களைப் போன்று

haaa antum haaa'ulaaa'i tud'awna litunfiqoo fee sabeelillaahi faminkum many yabkhalu wa many yabkhal fa innamaa yabkhalu 'an nafsih; wallaahu Ghaniyyu wa antumul fuqaraaa'; wa in tatwal law yastabdil qawman ghairakum summa laa yakoonooo amsaalakum

(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கின்றார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கின்றார். அல்லாஹ்வோ தேவை யற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கின்றீர்கள். (அவனுடைய கட்டளைகளைப்) பின்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள்.

Tafseer