Skip to main content

ذَٰلِكَ بِأَنَّ
ஏனெனில், நிச்சயமாக அது
ٱللَّهَ
அல்லாஹ்தான்
مَوْلَى
எஜமானன்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களின்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
لَا مَوْلَىٰ
எஜமானன் இல்லை
لَهُمْ
அவர்களுக்கு

Zaalika bi annal laaha mawlal lazeena aamanoo wa annal kaafireena laa mawlaa lahum

காரணமாவது: நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கின்றான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக யாதொரு பாதுகாவலனுமில்லை.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُدْخِلُ
நுழைப்பான்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُۖ
ஆறுகள்
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
يَتَمَتَّعُونَ
இன்புறுகிறார்கள்
وَيَأْكُلُونَ
இன்னும் சாப்பிடுகிறார்கள்
كَمَا
போல்
تَأْكُلُ
சாப்பிடுவது
ٱلْأَنْعَٰمُ
கால்நடைகள்
وَٱلنَّارُ
நரகம்தான்
مَثْوًى
தங்குமிடமாகும்
لَّهُمْ
அவர்களுக்கு

Innal-laaha yudkhilul lazeena aamanoo wa 'amilus saalihaati Jannaatin tajree min tahtihal anhaaru wallazeena kafaroo yatamatta'oona wa yaakuloona kamaa taakuluian'aamu wan Naaru maswallahum

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியில் புகுத்துகின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப் போல் தின்றுகொண்டும், (மிருகங்களைப் போல்) சுகத்தை அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.

Tafseer

وَكَأَيِّن
எத்தனையோ
مِّن قَرْيَةٍ
ஊர் (மக்)கள்
هِىَ
அவை
أَشَدُّ
மிக உறுதியான(து)
قُوَّةً
பலத்தால்
مِّن قَرْيَتِكَ
உமது ஊரைவிட
ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ
எது/உம்மை வெளியேற்றிய(து)
أَهْلَكْنَٰهُمْ
நாம் அவர்களை அழித்தோம்
فَلَا
அறவே இல்லை
نَاصِرَ
உதவியாளர்
لَهُمْ
அவர்களுக்கு

Wa ka ayyim min qaryatin hiya ashaddu quwwatam min qaryatikal lateee akhrajatka ahlaknaahum falaa naasira lahum

(நபியே!) உங்களுடைய ஊரைவிட்டும் உங்களை வெளிப்படுத்திய இவர்களைவிட எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தனர். (அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக) அவர்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம். (அச்சமயம்) அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிருக்க வில்லை. (ஆகவே, இவர்கள் எம்மாத்திரம்! இவர்களையும் நாம் அழித்தே தீருவோம்.)

Tafseer

أَفَمَن
ஆவார்களா?
كَانَ
இருப்பவர்கள்
عَلَىٰ بَيِّنَةٍ
தெளிவான அத்தாட்சியில்
مِّن رَّبِّهِۦ
தமது இறைவனின்
كَمَن
போன்று/எவர்களுக்கு
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டது
لَهُۥ
தமக்கு
سُوٓءُ
கெட்ட
عَمَلِهِۦ
தங்களது செயல்கள்
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் பின்பற்றுகின்றார்கள்
أَهْوَآءَهُم
தங்கள் மன இச்சைகளை

Afaman kaana 'alaa baiyinatim mir Rabbihee kaman zuyyina lahoo sooo'u 'amalihee wattaba'ooo ahwaaa'ahum

எவர் தன் இறைவனின் தெளிவான (நேரான) பாதையின் மீது இருக்கின்றாரோ அத்தகையவருக்கு, எவன் தன்னுடைய தீய காரியங்களையே அழகாகக் கண்டு, தன்னுடைய சரீர இச்சை களையே பின்பற்றுகின்றானோ அவன் ஒப்பாவானா?

Tafseer

مَّثَلُ
தன்மையாவது
ٱلْجَنَّةِ ٱلَّتِى
சொர்க்கத்தின்/எது
وُعِدَ
வாக்களிக்கப்பட்டது
ٱلْمُتَّقُونَۖ
இறையச்ச முள்ளவர்களுக்கு
فِيهَآ
அதில்
أَنْهَٰرٌ
ஆறுகளும்
مِّن مَّآءٍ
தண்ணீரின்
غَيْرِ ءَاسِنٍ
துர் வாடை வீசாத
وَأَنْهَٰرٌ
ஆறுகளும்
مِّن لَّبَنٍ
பாலின்
لَّمْ يَتَغَيَّرْ
மாறவில்லை
طَعْمُهُۥ
அதன் ருசி
وَأَنْهَٰرٌ
ஆறுகளும்
مِّنْ خَمْرٍ
மதுவின்
لَّذَّةٍ
ருசியான
لِّلشَّٰرِبِينَ
அருந்துபவர்களுக்கு
وَأَنْهَٰرٌ
ஆறுகளும்
مِّنْ عَسَلٍ
தேனின்
مُّصَفًّىۖ
தூய்மையான(து)
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
فِيهَا
அதில்
مِن كُلِّ
எல்லாவற்றிலிருந்து(ம்)
ٱلثَّمَرَٰتِ
கனிகள்
وَمَغْفِرَةٌ
மன்னிப்பும்
مِّن رَّبِّهِمْۖ
அவர்களின் இறைவனிடமிருந்து
كَمَنْ هُوَ
போன்று/எவர்(கள்)/ அவர்(கள்)
خَٰلِدٌ
நிரந்தரமானவர்(கள்)
فِى ٱلنَّارِ
நரகத்தில்
وَسُقُوا۟
இன்னும் புகட்டப்படுவார்கள்
مَآءً
நீரை
حَمِيمًا
கொதிக்கின்றது
فَقَطَّعَ
அது துண்டு துண்டாக ஆக்கிவிடும்
أَمْعَآءَهُمْ
குடல்களை அவர்களின்

Masalul jannatil latee wu'idal muttaqoona feehaaa anhaarum mim maaa'in ghayri aasininw wa anhaarum mil labanil lam yataghaiyar ta'muhoo wa anhaarum min khamril lazzatil lishshaaribeena wa anhaarum min 'asalim musaffanw wa lahum feeha min kullis samaraati wa maghfiratum mir Rabbihim kaman huwa khaalidun fin naari wa suqoo maaa'an hameeman faqatta'a am'aaa'ahum

இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக்கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. அன்றி, அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவர்க்கங்கள் இருப்பதுடன், இறைவனின் மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. (இத்தகைய இன்பங்களை அனுபவிப் பவனுக்கு) நரகத்தில் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக்கூடிய நரகவாசி ஒப்பாக முடியுமா?

Tafseer

وَمِنْهُم
அவர்களில் உள்ளனர்
مَّن يَسْتَمِعُ
செவி சாய்க்கின்றவர்களும்
إِلَيْكَ
உம் பக்கம்
حَتَّىٰٓ
இறுதியில்
إِذَا خَرَجُوا۟
அவர்கள் வெளியே புறப்பட்டால்
مِنْ عِندِكَ
உம்மிடமிருந்து
قَالُوا۟
கூறுகின்றனர்
لِلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்களிடம்
ٱلْعِلْمَ
கல்வி
مَاذَا قَالَ
என்ன/இவர் கூறினார்
ءَانِفًاۚ
சற்று நேரத்திற்கு முன்பு
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
இவர்கள்தான்/எவர்கள்
طَبَعَ
முத்திரையிட்டு விட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ قُلُوبِهِمْ
இவர்களின் உள்ளங்களில்
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் இவர்கள் பின்பற்றினார்கள்
أَهْوَآءَهُمْ
தங்கள் மன இச்சைகளை

Wa minhum mai yastami' ilaika hattaaa izaa kharajoo min 'indika qaaloo lillazeena ootul 'ilma maazaa qaala aanifaa; ulaaa'ikal lazeena taba'al laahu 'alaa quloobihim wattaba'ooo ahwaaa'ahum

(நபியே! நீங்கள் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உங்களுக்குச் செவி சாய்ப்பவர்களைப் போல் இருந்து உங்களை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக "உங்களுடைய நபி) சற்று முன் என்ன கூறினார்?" எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகைய வர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ٱهْتَدَوْا۟
நேர்வழி பெற்றார்களோ
زَادَهُمْ
அவர்களுக்கு அதிகப்படுத்துவான்
هُدًى
நேர்வழியை
وَءَاتَىٰهُمْ
இன்னும் , அவர்களுக்கு வழங்குவான்
تَقْوَىٰهُمْ
அவர்களின் தக்வாவை

Wallazeenah tadaw zaadahum hudanw wa aataahum taqwaahum

எவர்கள் நேரான வழியில் செல்கின்றார்களோ (அவர்கள் இந்த வேதத்தைச் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்மையை (மென்மேலும்) அதிகப்படுத்தி இறை அச்சத்தையும் அவர்களுக்கு (இறைவன்) அளிக்கின்றான்.

Tafseer

فَهَلْ يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கின்றார்களா?
إِلَّا
தவிர
ٱلسَّاعَةَ
மறுமை
أَن تَأْتِيَهُم
அவர்களிடம் வருவதை
بَغْتَةًۖ
திடீரென
فَقَدْ
திட்டமாக
جَآءَ
வந்துவிட்டன
أَشْرَاطُهَاۚ
அதன் அடையாளங்கள்
فَأَنَّىٰ
எப்படி பலனளிக்கும்!
لَهُمْ
அவர்களுக்கு
إِذَا جَآءَتْهُمْ
அவர்களிடம் வரும் போது
ذِكْرَىٰهُمْ
அவர்கள் நல்லறிவு பெறுவது

Fahal yanzuroona illas Saa'ata an taatiyahum baghtatan faqad jaaa'a ashraatuhaa; fa-annnaa lahum izaa jaaa'at hum zikraahum

(நபியே! அந்தப் பாவிகள்) தங்களிடம் திடீரென வரக்கூடிய மறுமை(யின் வேதனை)யை தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கின்றனரா? அதன் அடையாளங்களில் பல நிச்சயமாக வந்து விட்டன. அது அவர்களிடம் வந்ததன் பின்னர், அதனைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துவதால் என்ன பயன்?

Tafseer

فَٱعْلَمْ
நன்கறிந்து கொள்வீராக!
أَنَّهُۥ
நிச்சயமாக
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
وَٱسْتَغْفِرْ
இன்னும் பாவமன்னிப்பு கோருவீராக!
لِذَنۢبِكَ
உமது தவறுகளுக்காக
وَلِلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும்
وَٱلْمُؤْمِنَٰتِۗ
நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும்
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
مُتَقَلَّبَكُمْ
நீங்கள் சுற்றித்திரியும் இடங்களை(யும்)
وَمَثْوَىٰكُمْ
நீங்கள் தங்குமிடங்களையும்

Fa'lam annahoo laaa ilaaha illal laahu wastaghfir lizambika wa lilmu'mineena walmu'minaat; wallaahu ya'lamu mutaqallabakum wa maswaakum

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டு, நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் மன்னிப்பு கோருங்கள்! (நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

وَيَقُولُ
கூறுகின்றார்(கள்)
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
لَوْلَا نُزِّلَتْ
இறக்கப்பட வேண்டாமா
سُورَةٌۖ
ஓர் அத்தியாயம்
فَإِذَآ أُنزِلَتْ
இறக்கப்பட்டால்
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
مُّحْكَمَةٌ
உறுதி செய்யப்பட்டது
وَذُكِرَ
இன்னும் கூறப்பட்டது
فِيهَا ٱلْقِتَالُۙ
அதில்/போர்
رَأَيْتَ
பார்ப்பீர்
ٱلَّذِينَ
எவர்கள்
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
مَّرَضٌ
நோய்
يَنظُرُونَ
பார்ப்பார்கள்
إِلَيْكَ
உம் பக்கம்
نَظَرَ
பார்ப்பது போல்
ٱلْمَغْشِىِّ عَلَيْهِ
மயக்கமுற்றவர்கள்
مِنَ ٱلْمَوْتِۖ
மரண பயத்தால்
فَأَوْلَىٰ
ஆகவே
لَهُمْ
அவர்களுக்கு

Wa yaqoolul lazeena aamanoo law laa nuzzilat Sooratun fa izaaa unzilat Sooratum Muhkamatunw wa zukira feehal qitaalu ra aytal lazeena fee quloobihim maraduny yanzuroona ilaika nazaral maghshiyyi 'alaihi minal mawti fa'awlaa lahum

நம்பிக்கை கொண்டவர்களிலும் பலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான்.

Tafseer