Skip to main content

وَأُخْرَىٰ
இன்னும் வேறு பல
لَمْ تَقْدِرُوا۟
நீங்கள் ஆற்றல் பெறவில்லை
عَلَيْهَا
அவற்றின் மீது
قَدْ
திட்டமாக
أَحَاطَ
சூழ்ந்திருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهَاۚ
அவற்றை
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرًا
பேராற்றலுடையவனாக

Wa ukhraa lam taqdiroo 'alaihaa qad ahaatal laahu bihaa; wa kaanal laahu 'alaa kulli shai'in qadeera

(பாரசீகம், ரூம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கின்றது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர் களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதனை சூழ்ந்து கொண்டிருக் கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَلَوْ قَٰتَلَكُمُ
உங்களிடம் போருக்கு வந்தால்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
لَوَلَّوُا۟ ٱلْأَدْبَٰرَ
புறமுதுகு காட்டியிருப்பார்கள்
ثُمَّ
பிறகு
لَا يَجِدُونَ
காணமாட்டார்கள்
وَلِيًّا
பாதுகாவலரையும்
وَلَا نَصِيرًا
உதவியாளரையும்

Wa law qaatalakumul lazeena kafaroo la wallawul adbaara summa laa yajidoona waliyanw-wa laa naseeraa

நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு யாதொரு பாதுகாவலனையும் உதவி செய்பவனையும் காணார்கள்.

Tafseer

سُنَّةَ
நடைமுறைப்படிதான்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلَّتِى قَدْ
எது/சென்றுவிட்டது
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
وَلَن تَجِدَ
நீர் காணமாட்டீர்
لِسُنَّةِ
நடைமுறைக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تَبْدِيلًا
மாற்றத்தை(யும்)

Sunnatal laahil latee qad khalat min qablu wa lan tajida lisunnatil laahi tabdeelaa

(நிராகரிப்பவர்கள் விஷயத்தில் அனுசரிக்கும்) அல்லாஹ்வுடைய வழிமுறை இதுதான். இதற்கு முன்னரும் (இவ்வாறே) நடந்திருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வுடைய வழிமுறையில் நீங்கள் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
كَفَّ
தடுத்தான்
أَيْدِيَهُمْ
அவர்களின்கரங்களை
عَنكُمْ
உங்களை விட்டும்
وَأَيْدِيَكُمْ
இன்னும் உங்கள் கரங்களை
عَنْهُم
அவர்களை விட்டும்
بِبَطْنِ
நடுப்பகுதியில்
مَكَّةَ
மக்காவின்
مِنۢ بَعْدِ
அவன் வெற்றி கொடுத்த பின்னர்
أَظْفَرَكُمْ
அவன் வெற்றி கொடுத்த பின்னர் உங்களுக்கு
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
بَصِيرًا
உற்று நோக்கியவனாக

Wa Huwal lazee kaffa aydiyahum 'ankum wa aydiyakum 'anhum bibatni Makkata mim ba'di an azfarakum 'alaihim; wa kaanal laahu bimaa ta'maloona Baseera

மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக்கொண்டான். (அவ்வாறே) உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்தவைகளை உற்று நோக்கியவனாகவே இருந்தான்.

Tafseer

هُمُ
அவர்கள்தான்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
وَصَدُّوكُمْ
இன்னும் உங்களைத் தடுத்தார்கள்
عَنِ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதை விட்டு
ٱلْحَرَامِ
புனித(மானது)
وَٱلْهَدْىَ
பலிப் பிராணியையும்
مَعْكُوفًا
வழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்ட
أَن يَبْلُغَ
அது சேருவதை விட்டு
مَحِلَّهُۥۚ
அதனுடைய இடத்திற்கு
وَلَوْلَا
இல்லாமல் இருந்தால்
رِجَالٌ
ஆண்களும்
مُّؤْمِنُونَ
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
وَنِسَآءٌ
பெண்களும்
مُّؤْمِنَٰتٌ
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
لَّمْ
நீங்கள் அறியாமல்
تَعْلَمُوهُمْ
நீங்கள் அறியாமல் அவர்களை
أَن تَطَـُٔوهُمْ
நீங்கள் தாக்கிவிட
فَتُصِيبَكُم
அவர்களை உங்களுக்கு ஏற்பட்டு விடும்
مِّنْهُم مَّعَرَّةٌۢ
அவர்களினால்/பழிப்பு
بِغَيْرِ عِلْمٍۖ
அறியாமல்
لِّيُدْخِلَ
நுழைப்பதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
فِى رَحْمَتِهِۦ
தனது அருளில்
مَن يَشَآءُۚ
நாடுகின்றவர்களை
لَوْ تَزَيَّلُوا۟
அவர்கள் நீங்கியிருந்தால்
لَعَذَّبْنَا
தண்டித்திருப்போம்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
مِنْهُمْ
அவர்களில்
عَذَابًا
தண்டனையால்
أَلِيمًا
வலி தரக்கூடிய(து)

Humul lazeena kafaroo wa saddookum 'anil-Masjidil-Haraami walhadya ma'koofan any yablugha mahillah; wa law laa rijaalum mu'minoona wa nisaaa'um mu'minaatul lam ta'lamoohum an tata'oohum fatuseebakum minhum ma'arratum bighairi 'ilmin liyud khilal laahu fee rahmatihee many yashaaa'; law tazayyaloo la'azzabnal lazeena kafaroo minhum 'azaaban aleema

(நீங்கள் வெற்றி கொண்ட) இந்த மக்காவாசிகள்தாம் (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விட்டதுடன், உங்களையும் சிறப்புற்ற மஸ்ஜித் (என்னும் கஅபாவு)க்குச் செல்லாதும், குர்பானியையும் அது செல்ல வேண்டிய எல்லைக்குச் செல்லாதும் தடுத்து நிறுத்தியவர்கள். ஆயினும், அங்கு அவர்களுடன் நீங்கள் அறியாத நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இருந்தனர். (அச்சமயம் உங்கள் எதிரிகளை நீங்கள் வெட்டினால்,) இந்த நம்பிக்கையாளர்களும் (நீங்கள் அறியாமல்) உங்கள் காலில் மிதிபட்டு, அதன் காரணமாக நீங்கள் அறியாது உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பது இல்லாதிருந்தால், (அச்சமயம் அவர்களுடன் போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து, மக்காவில் நீங்கள் நுழையும்படியும் செய்திருப்பான். அப்பொழுது நீங்கள் மக்காவில் நுழையாது உங்களை அவன் தடுத்துக் கொண்டதெல்லாம், ஹுதைபியா உடன்படிக்கையின் மத்திய காலத்தில்) அல்லாஹ் தான் நாடியவர்களை (இஸ்லாம் என்னும்) தன் அருளில் புகுத்துவதற்காகவே ஆகும். (நீங்கள் அறியாத மக்காவிலுள்ள நம்பிக்கையாளர்கள்) அவர்களிலிருந்து விலகியிருப்பார்களேயானால், (அவர்கள் மீது போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களில் உள்ள நிராகரிப்பவர்களை நாம் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வோம்.

Tafseer

إِذْ جَعَلَ
ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்!
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
فِى قُلُوبِهِمُ
தங்கள் உள்ளங்களில்
ٱلْحَمِيَّةَ
திமிரை
حَمِيَّةَ
திமிரை
ٱلْجَٰهِلِيَّةِ
அறியாமைக்கால
فَأَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَكِينَتَهُۥ
தன் அமைதியை
عَلَىٰ رَسُولِهِۦ
தனது தூதர் மீதும்
وَعَلَى
மீதும்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
وَأَلْزَمَهُمْ
இன்னும் அவர்களுக்கு அவசியமாக்கினான்
كَلِمَةَ
வார்த்தையை
ٱلتَّقْوَىٰ
இறையச்சத்தின்
وَكَانُوٓا۟
இன்னும் இருந்தார்கள்
أَحَقَّ
மிகத் தகுதியுடைவர்களாக
بِهَا
அதற்கு
وَأَهْلَهَاۚ
இன்னும் அதற்கு சொந்தக்காரர்களாக
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمًا
நன்கறிந்தவனாக

Iz ja'alal lazeena kafaroo fee quloobihimul hamiyyata hamiyyatal jaahiliyyati fa anzalal laahu sakeenatahoo 'alaa Rasoolihee wa 'alal mu mineena wa alzamahum kalimatat taqwaa wa kaanooo ahaqqa bihaa wa ahlahaa; wa kaanal laahu bikulli shai'in Aleema

நிராகரித்தவர்கள் தங்களுடைய உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலைநிறுத்திக் கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அச்சமயம் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும், தன்னுடைய ஆறுதலையும், உறுதியையும் இறக்கி வைத்துப் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும், அதனை அடைய வேண்டியவர் களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனாக இருக்கின்றான்.

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
صَدَقَ
உண்மையாக நிகழ்த்தினான்
ٱللَّهُ
அல்லாஹ்
رَسُولَهُ
தனது தூதருக்கு
ٱلرُّءْيَا
கனவை
بِٱلْحَقِّۖ
யதார்த்தத்தில்
لَتَدْخُلُنَّ
நிச்சயமாக நீங்கள் நுழைவீர்கள்
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதில்
ٱلْحَرَامَ
புனிதமான(து)
إِن شَآءَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
ءَامِنِينَ
பாதுகாப்பு பெற்றவர்களாக
مُحَلِّقِينَ
சிரைத்தவர்களாக
رُءُوسَكُمْ
உங்கள் தலை(முடி)களை
وَمُقَصِّرِينَ
இன்னும் குறைத்தவர்களாக
لَا تَخَافُونَۖ
பயப்பட மாட்டீர்கள்
فَعَلِمَ
அவன் அறிவான்
مَا لَمْ
நீங்கள் அறியாதவற்றை
فَجَعَلَ
ஏற்படுத்தினான்
مِن دُونِ
அதற்கு முன்பாக
فَتْحًا
ஒரு வெற்றியை
قَرِيبًا
சமீபமான

Laqad sadaqal laahu Rasoolahur ru'yaa bilhaqq, latadkhulunnal Masjidal-Haraama in shaaa'al laahu aamineena muhalliqeena ru'oosakum wa muqassireena laa takhaafoona fa'alima maa lam ta'lamoo faja'ala min dooni zaalika fathan qareebaa

நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்துவிட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர் களாகவும், உங்களுடைய தலை ரோமத்தைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்பட மாட்டீர்கள். (அச்சமயம்) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதனையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான்.

Tafseer

هُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
أَرْسَلَ
அனுப்பினான்
رَسُولَهُۥ
தனது தூதரை
بِٱلْهُدَىٰ
நேர்வழியைக் கொண்டு
وَدِينِ
இன்னும் மார்க்கத்தை
ٱلْحَقِّ
உண்மையான
لِيُظْهِرَهُۥ
அதை மேலோங்க வைப்பதற்காக
عَلَى ٱلدِّينِ
மார்க்கங்களை விட
كُلِّهِۦۚ
எல்லா
وَكَفَىٰ
போதுமான(வன்)
بِٱللَّهِ
அல்லாஹ்வே
شَهِيدًا
சாட்சியாவான்

Huwal lazeee arsala Rasoolahoo bilhudaa wa deenil haqqi liyuzhirahoo 'alad deeni kullih; wa kafaa billaahi Shaheeda

அவனே, தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான்.

Tafseer

مُّحَمَّدٌ
முஹம்மது
رَّسُولُ ٱللَّهِۚ
அல்லாஹ்வின் தூதர்
وَٱلَّذِينَ مَعَهُۥٓ
அவருடன் இருக்கின்றவர்கள்
أَشِدَّآءُ
கடினமானவர்கள்
عَلَى ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்கள்மீது
رُحَمَآءُ
கருணையாளர்கள்
بَيْنَهُمْۖ
தங்களுக்கு மத்தியில்
تَرَىٰهُمْ
நீர் அவர்களைக்காண்பீர்
رُكَّعًا
ருகூஃசெய்தவர்களாக
سُجَّدًا
சுஜூது செய்தவர்களாக
يَبْتَغُونَ
அவர்கள் விரும்புகிறார்கள்
فَضْلًا
அருளை(யும்)
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَرِضْوَٰنًاۖ
பொருத்தத்தையும்
سِيمَاهُمْ
அவர்களின் தோற்றம்
فِى وُجُوهِهِم
அவர்களின் முகங்களில்
مِّنْ أَثَرِ
அடையாளமாக
ٱلسُّجُودِۚ
சுஜூதின்
ذَٰلِكَ
இது
مَثَلُهُمْ
அவர்களின் தன்மையாகும்
فِى ٱلتَّوْرَىٰةِۚ
தவ்றாத்தில் கூறப்பட்ட
وَمَثَلُهُمْ
இன்னும் அவர்களின் தன்மையாவது
فِى ٱلْإِنجِيلِ
இன்ஜீலில் கூறப்பட்ட
كَزَرْعٍ
ஒரு விளைச்சலைப் போலாகும்
أَخْرَجَ
வெளியாக்கியது
شَطْـَٔهُۥ
தனது காம்பை
فَـَٔازَرَهُۥ
இன்னும் அதை பலப்படுத்தியது
فَٱسْتَغْلَظَ
பிறகு அது தடிப்பமாக ஆனது
فَٱسْتَوَىٰ
அது உயர்ந்து நின்று
عَلَىٰ سُوقِهِۦ
தனது தண்டின் மீது
يُعْجِبُ
கவர்கிறது
ٱلزُّرَّاعَ
விவசாயிகளை
لِيَغِيظَ
அவன் ரோஷமூட்டுவதற்காக
بِهِمُ
அவர்கள் மூலமாக
ٱلْكُفَّارَۗ
நிராகரிப்பாளர்களை
وَعَدَ
வாக்களித்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
مِنْهُم
அவர்களில்
مَّغْفِرَةً
மன்னிப்பை(யும்)
وَأَجْرًا عَظِيمًۢا
மகத்தானகூலியையும்

Muhammadur Rasoolul laah; wallazeena ma'ahooo ashiddaaa'u 'alal kuffaaari ruhamaaa'u bainahum taraahum rukka'an sujjadany yabtaghoona fadlam minal laahi wa ridwaanan seemaahum fee wujoohihim min asaris sujood; zaalika masaluhum fit tawraah; wa masaluhum fil Injeeli kazar'in akhraja shat 'ahoo fa 'aazarahoo fastaghlaza fastawaa 'alaa sooqihee yu'jibuz zurraa'a liyagheeza bihimul kuffaar; wa'adal laahul lazeena aamanoo wa 'amilus saalihaati minhum maghfiratanw wa ajran 'azeemaa

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளமிருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர் களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கின்றது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகின்றது. பின்னர், அது தடித்துக் கனமாகின்றது. பின்னர், விவசாயிக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன்னுடைய தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டு வருகின்றான். எனினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான்.

Tafseer