Skip to main content

سَيَقُولُ
கூறுவார்(கள்)
لَكَ
உமக்கு
ٱلْمُخَلَّفُونَ
பின்தங்கியவர்கள்
مِنَ ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
شَغَلَتْنَآ
எங்களைஈடுபடுத்தின
أَمْوَٰلُنَا
எங்கள்செல்வங்களும்
وَأَهْلُونَا
எங்கள் குடும்பங்களும்
فَٱسْتَغْفِرْ
ஆகவே, நீர் பாவமன்னிப்புக் கோருவீராக!
لَنَاۚ
எங்களுக்காக
يَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
بِأَلْسِنَتِهِم
தங்கள் நாவுகளினால்
مَّا لَيْسَ
இல்லாதவற்றை
فِى قُلُوبِهِمْۚ
தங்கள் உள்ளங்களில்
قُلْ
கூறுவீராக!
فَمَن
யார்?
يَمْلِكُ
உரிமை பெறுவார்
لَكُم
உங்களுக்காக
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
شَيْـًٔا
எதற்கும்
إِنْ أَرَادَ
நாடினால்
بِكُمْ
உங்களுக்கு
ضَرًّا
தீங்கை
أَوْ أَرَادَ
அல்லது/நாடினால்
بِكُمْ
உங்களுக்கு
نَفْعًۢاۚ
நன்மையை
بَلْ
மாறாக
كَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
خَبِيرًۢا
ஆழ்ந்தறிபவனாக

Sa yaqoolu lakal mukhal lafoona minal-A'raabi shaighalatnaaa amwaalunaa wa ahloonaa fastaghfir lanaa; yaqooloona bi alsinatihim maa laisa fee quloobihim; qul famany yamliku lakum minal laahi shai'an in araada bikum darran aw araada bikum naf'aa; bal kaanal laahu bimaa ta'maloona Khabeeraa

(நபியே! போர் செய்ய உங்களுடன் வராது) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள் உங்களிடம் வந்து "நாங்கள் உங்களுடன் வர எங்களுடைய பொருள்களும் எங்களுடைய குடும்பங்களும் எங்களுக்கு அவகாசமளிக்கவில்லை" என்று (பொய்யாகக்) கூறி, "(இறைவனிடம்) நீங்கள் எங்களுக்கு மன்னிப்புக் கோருவீராக!" என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவை களைத் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். ஆகவே, (நபியே!) நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீமை செய்ய நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு யாதொரு நன்மை செய்ய நாடினாலும் அதில் எதையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்குத் தடுத்து விடக்கூடியவன் யார்? நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு இருக்கின்றான். (பின்னும் நீங்கள் அவர்களை நோக்கி,)

Tafseer

بَلْ
மாறாக
ظَنَنتُمْ
நீங்கள் எண்ணினீர்கள்
أَن لَّن
அறவே திரும்ப மாட்டார்(கள்) என்று
ٱلرَّسُولُ
தூதரும்
وَٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்களும்
إِلَىٰٓ أَهْلِيهِمْ
தங்கள் குடும்பங்களுக்கு
أَبَدًا
ஒருபோதும்
وَزُيِّنَ
இன்னும் அலங்கரிக்கப்பட்டு விட்டது
ذَٰلِكَ
இது
فِى قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களில்
وَظَنَنتُمْ
(இன்னும் நீ) எண்ணினீர்கள்
ظَنَّ
எண்ணம்
ٱلسَّوْءِ
கெட்ட
وَكُنتُمْ
நீங்கள் இருக்கின்றீர்கள்
قَوْمًۢا
மக்களாக
بُورًا
அழிந்து போகின்ற

Bal zanantum al lany yanqalibar Rasoolu walmu'minoona ilaaa ahleehim abadanw wa zuyyina zaalika fee quloobikum wa zanantum zannnas saw'i wa kuntum qawmam booraa

"(அல்லாஹ்வுடைய) தூதரும், அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (ஆதலால்தான் போருக்கு நீங்கள் வரவில்லை.) இதுவே உங்கள் மனதில் அழகாக்கப்பட்டது. ஆதலால், நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந் தீர்கள். அதனால் நீங்கள்தான் அழிந்துபோனீர்கள்" (என்று கூறுங்கள்.)

Tafseer

وَمَن
எவர்(கள்)
لَّمْ يُؤْمِنۢ
நம்பிக்கை கொள்ளவில்லையோ
بِٱللَّهِ
அல்லாஹ்வை(யும்)
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
فَإِنَّآ
நிச்சயமாக நாம்
أَعْتَدْنَا
தயார் செய்துள்ளோம்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நரகத்தை

Wa mal lam yu'mim billaahi wa Rasoolihee fainnaaa a'tadnaa lilkaafireena sa'eeraa

எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பவனுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
பூமியின்
يَغْفِرُ
மன்னிக்கின்றான்
لِمَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
وَيُعَذِّبُ
இன்னும் வேதனை செய்கின்றான்
مَن يَشَآءُۚ
தான் நாடுகின்றவர்களை
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
மகாகருணையாளனாக

Wa lillaahii mulkus samaawaati wal ard; yaghfiru limany yashaaa'u wa yu'azzibu many yashaaa'; wa kaanal laahu Ghafoorar Raheemaa

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகின்றான். அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

سَيَقُولُ
கூறுவார்(கள்)
ٱلْمُخَلَّفُونَ
பின்தங்கியவர்கள்
إِذَا ٱنطَلَقْتُمْ
நீங்கள் சென்றால்
إِلَىٰ مَغَانِمَ
கனீமத்துகளை நோக்கி
لِتَأْخُذُوهَا
அவற்றை நீங்கள் எடுப்பதற்காக
ذَرُونَا
எங்களை விடுங்கள்
نَتَّبِعْكُمْۖ
நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்
يُرِيدُونَ
அவர்கள் நாடுகின்றனர்
أَن يُبَدِّلُوا۟
அவர்கள் மாற்றிவிட
كَلَٰمَ
பேச்சை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
قُل
நீர் கூறுவீராக!
لَّن تَتَّبِعُونَا
அறவே நீங்கள் எங்களை பின்பற்ற மாட்டீர்கள்
كَذَٰلِكُمْ
இப்படித்தான்
قَالَ
கூறி இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِن قَبْلُۖ
இதற்கு முன்னரே
فَسَيَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
بَلْ
இல்லை
تَحْسُدُونَنَاۚ
நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்
بَلْ
மாறாக
كَانُوا۟
இருக்கின்றனர்
لَا يَفْقَهُونَ
விளங்காதவர்களாக
إِلَّا
தவிர
قَلِيلًا
குறைந்த விஷயங்களை

Sa yaqoolul mukhalla foona izan talaqtum ilaa maghaanima litaakhuzoohaa zaroonaa nattabi'kum yureedoona any yubaddiloo Kalaamallaah; qul lan tattabi'oonaa kazaalikum qaalal laahu min qablu fasa yaqooloona bal tahsudoonanna; bal kaanoo laa yafqahoona illaa qaleela

(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில், (உங்களை நோக்கி) "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர எங்களை (அனுமதித்து) விடுங்கள்" என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி "நீங்கள் எங்களைப் பின்பற்றிவர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்" என்றும் கூறுங்கள் அதற்கவர்கள், ("அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை;") நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள். அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.

Tafseer

قُل
கூறுவீராக!
لِّلْمُخَلَّفِينَ
பின்தங்கியவர்களை நோக்கி
مِنَ ٱلْأَعْرَابِ
கிராமவாசிகளில்
سَتُدْعَوْنَ
அழைக்கப்படுவீர்கள்
إِلَىٰ قَوْمٍ
கூட்டத்தின் பக்கம்
أُو۟لِى بَأْسٍ
பலமுடைய(வர்கள்)
شَدِيدٍ
கடுமையான(து)
تُقَٰتِلُونَهُمْ
அவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காக
أَوْ يُسْلِمُونَۖ
அல்லது/அவர்கள் பணிந்து விடுவதற்காக
فَإِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்தால்
يُؤْتِكُمُ
உங்களுக்கு கொடுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَجْرًا
கூலியை
حَسَنًاۖ
அழகிய(து)
وَإِن تَتَوَلَّوْا۟
நீங்கள் விலகினால்
كَمَا تَوَلَّيْتُم
நீங்கள் விலகியதை போன்று
مِّن قَبْلُ
இதற்கு முன்பு
يُعَذِّبْكُمْ
உங்களை தண்டிப்பான்
عَذَابًا
தண்டனையால்
أَلِيمًا
வலி தரக்கூடிய(து)

Qul lilmukhallafeena minal A'raabi satud'awna ilaa qawmin ulee baasin shadeedin tuqaati loonahum aw yuslimoona fa in tutee'oo yu'tikumul laahu ajran hasananw wa in tatawallaw kamaa tawallaitum min qablu yu'azzibkum 'azaaban aleemaa

(நபியே!) பின்தங்கிய நாட்டுப்புறத்து அரபிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "மிக பலசாலிகளான மக்களுடன் (போர்புரிய) அதிசீக்கிரத்தில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்கள் முற்றிலும் கட்டுப்படும் வரையில், நீங்கள் அவர்களுடன் போர்புரிய வேண்டியதிருக்கும். (இதில்) நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடப்பீர்களாயின், அல்லாஹ் உங்களுக்கு அழகான கூலியைக் கொடுப்பான். இதற்கு முன்னர் நீங்கள் (போர் செய்யாது) திரும்பி விட்டபடி (அச்சமயம் போர் புரியாது) நீங்கள் திரும்பி விடுவீர்களாயின், அவன் உங்களை மிக கடினமாகத் துன்புறுத்தி வேதனை செய்வான்."

Tafseer

لَّيْسَ
இல்லை
عَلَى ٱلْأَعْمَىٰ
குருடர் மீது
حَرَجٌ
சிரமம்
وَلَا
இன்னும் இல்லை
عَلَى ٱلْأَعْرَجِ
ஊனமானவர் மீது
حَرَجٌ
சிரமம்
وَلَا
இல்லை
عَلَى ٱلْمَرِيضِ
நோயாளி மீது
حَرَجٌۗ
சிரமம்
وَمَن
எவர்
يُطِعِ
கீழ்ப்படிவாரோ
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
يُدْخِلْهُ
அவரை நுழைப்பான்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
وَمَن
எவர்
يَتَوَلَّ
விலகுவாரோ
يُعَذِّبْهُ
அவரை தண்டிப்பான்
عَذَابًا
தண்டனையால்
أَلِيمًا
வலி தரக்கூடிய

Laisa 'alal a'maa harajunw wa laa 'alal a'raji harajunw wa laa 'alal mareedi haraj' wa many yutil'il laaha wa Rasoolahoo yudkhilhu jannaatin tajree min tahtihal anhaaru wa many yatawalla yu'azzibhu 'azaaban aleemaa

(போருக்கு வராததைப் பற்றிக்) குருடன் மீது யாதொரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் யாதொரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் யாதொரு குற்றமுமில்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே வழிப்பட்டு, (போருக்கு உங்களுடன்) வருகின்றாரோ, அவரை (அல்லாஹ்) சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உங்களுக்கு வழிப்படாது போருக்கு உங்களுடன் வராது) புறக்கணிக்கின்றாரோ, அவரை மிக கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான்.

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
رَضِىَ
திருப்தி அடைந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنِ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
إِذْ يُبَايِعُونَكَ
உம்மிடம் அவர்கள் விசுவாச வாக்குறுதி செய்தபோது
تَحْتَ ٱلشَّجَرَةِ
மரத்தின் கீழ்
فَعَلِمَ
அவன் அறிந்தான்
مَا فِى
அவர்களின் உள்ளங்களில் உள்ளதை
فَأَنزَلَ
ஆகவே, இறக்கினான்
ٱلسَّكِينَةَ
அமைதியை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَأَثَٰبَهُمْ
இன்னும் வெகுமதியாக கொடுத்தான்
فَتْحًا
ஒரு வெற்றியை(யும்)
قَرِيبًا
சமீபமான(து)

Laqad radiyal laahu 'anil mu'mineena iz yubaayi 'oonaka tahtash shajarati fa'alima maa fee quloobihim fa anzalas sakeenata 'alaihim wa asaa bahum fat han qareebaa

அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.

Tafseer

وَمَغَانِمَ
இன்னும் கனீமத்துகளை
كَثِيرَةً
அதிகமான
يَأْخُذُونَهَاۗ
அவர்கள் அவற்றை பெறுவார்கள்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزًا
மிகைத்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Wa maghaanima kaseera tany yaakhuzoonahaa; wa kaanal laahu 'Azeezan Hakeemaa

(அந்த போரில்) ஏராளமான பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படி செய்தான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَعَدَكُمُ
வாக்களித்தான் உங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مَغَانِمَ
கனீமத்துகளை
كَثِيرَةً
அதிகமான
تَأْخُذُونَهَا
அவற்றை நீங்கள் பெறுவீர்கள்
فَعَجَّلَ
விரைவாக கொடுத்தான்
لَكُمْ هَٰذِهِۦ
உங்களுக்கு/இதை
وَكَفَّ
இன்னும் அவன் தடுத்தான்
أَيْدِىَ
கரங்களை
ٱلنَّاسِ
மக்களின்
عَنكُمْ
உங்களை விட்டும்
وَلِتَكُونَ
இருப்பதற்காகவும்
ءَايَةً
இறை அத்தாட்சியாக
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
وَيَهْدِيَكُمْ
உங்களை வழி நடத்துவதற்காகவும்
صِرَٰطًا
பாதையில்
مُّسْتَقِيمًا
நேரான

Wa'adakumul laahu ma ghaanima kaseeratan taakhuzoo nahaa fa'ajjala lakum haazihee wa kaffa aydiyan naasi 'ankum wa litakoona aayatal lilmu'mineena wa yahdiyakum siraatam mustaqeema

ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் திருந்தான். இதனை உங்களுக்கு அதிசீக்கிரத்திலும் கொடுத்து விட்டான். (உங்களுக்கு எதிரான) மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டுத் தடுத்துவிட்டான். இது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஏற்பட்டது. அவனே உங்களை நேரான பாதையில் நடத்துவான்.

Tafseer