Skip to main content

فَأَصَابَهُمْ
அவர்களை அடைந்தன
سَيِّـَٔاتُ
தீங்குகள்
مَا كَسَبُوا۟ۚ
அவர்கள் செய்ததின்
وَٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களையும்
مِنْ هَٰٓؤُلَآءِ
இவர்களில்
سَيُصِيبُهُمْ
விரைவில் அடையும்
سَيِّـَٔاتُ
தீங்குகள்
مَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின்
وَمَا هُم
அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்

Fa asaabahum saiyi aatu maa kasaboo; wallazeena zalamoo min haaa'ulaaa'i sa yuzeebuhum saiyi aatu maa kasaboo wa maa hum bimu'jizeen

அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீய பலன்கள்தாம் அவர்களை வந்தடைந்தன. அன்றி, (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீய பலன் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது.

Tafseer

أَوَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَبْسُطُ
விசாலமாகக் கொடுக்கின்றான்
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
وَيَقْدِرُۚ
சுருக்கமாகக் கொடுக்கின்றான்
إِنَّ فِى
நிச்சயமாக இதில் உள்ளன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்

Awalam ya'lamooo annal laaha yabsutur rizqa limai yashaaa'u wa yaqdir; inna fee zaalika la Aayaatil liqamai yu'minoon

அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகின்றான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

قُلْ
கூறுவீராக!
يَٰعِبَادِىَ
என் அடியார்களே
ٱلَّذِينَ أَسْرَفُوا۟
வரம்புமீறிய(வர்கள்)
عَلَىٰٓ أَنفُسِهِمْ
தங்கள் மீது
لَا تَقْنَطُوا۟
நிராசை ஆகாதீர்கள்
مِن
இருந்து
رَّحْمَةِ
கருணையில்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَغْفِرُ
மன்னிப்பான்
ٱلذُّنُوبَ
பாவங்களையும்
جَمِيعًاۚ
எல்லா
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Qul yaa'ibaadiyal lazeena asrafoo 'alaaa anfusihim laa taqnatoo mirrahmatil laah; innal laaha yaghfiruz zunooba jamee'aa; innahoo Huwal Ghafoorur Raheem

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَأَنِيبُوٓا۟
இன்னும் திரும்புங்கள்!
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவன் பக்கம்
وَأَسْلِمُوا۟
இன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள்
لَهُۥ
அவனுக்கு
مِن قَبْلِ
முன்னர்
أَن يَأْتِيَكُمُ
உங்களுக்கு வருவதற்கு
ٱلْعَذَابُ
வேதனை
ثُمَّ
பிறகு
لَا تُنصَرُونَ
நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்

Wa aneebooo ilaa Rabbikum wa aslimoo lahoo min qabli ai yaatiyakumul 'azaabu summ laa tunsaroon

ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

Tafseer

وَٱتَّبِعُوٓا۟
இன்னும் பின்பற்றுங்கள்
أَحْسَنَ
மிக அழகியவற்றை
مَآ أُنزِلَ
இறக்கப்பட்ட(து)
إِلَيْكُم
உங்களுக்கு
مِّن رَّبِّكُم
உங்கள் இறைவனிடமிருந்து
مِّن قَبْلِ
முன்னர்
أَن يَأْتِيَكُمُ
உங்களுக்கு வருவதற்கு
ٱلْعَذَابُ
வேதனை
بَغْتَةً
திடீரென
وَأَنتُمْ لَا
நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்

Wattabi'ooo ahsana maaa unzila ilaikum mir Rabbikum min qabli aiyaatiyakumal 'azaabu baghtatanw wa antum laa tash'uroon

(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான இதனைப் பின்பற்றுங்கள்.

Tafseer

أَن تَقُولَ
சொல்லாமல் இருப்பதற்காக
نَفْسٌ
ஓர் ஆன்மா
يَٰحَسْرَتَىٰ
எனக்கு நேர்ந்த துக்கமே!
عَلَىٰ مَا
நான் குறைசெய்து விட்டதனால்
فِى جَنۢبِ
விஷயங்களில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَإِن كُنتُ
நிச்சயமாக நான் இருந்தேன்
لَمِنَ ٱلسَّٰخِرِينَ
பரிகாசம் செய்வோரில்தான்

An taqoola nafsuny yaahasrataa 'alaa maa farrattu fee jambil laahi wa in kuntu laminas saakhireen

(உங்களில்) எவரும், "அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவைகளைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என்னுடைய கேடே! நான் (இவைகளைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

Tafseer

أَوْ تَقُولَ
அல்லது சொல்லாமல் இருப்பதற்காக
لَوْ أَنَّ
நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால்
لَكُنتُ
நானும் ஆகி இருப்பேனே
مِنَ ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களில்

Aw taqoola law annal laaha hadaanee lakuntu minal muttaqeen

அல்லது (உங்களில் எவரும்) "அல்லாஹ் எனக்கு நேரான வழியை அறிவித்திருந்தால், நானும் இறை அச்சமுடையவர்களில் ஒருவனாகி இருப்பேன்!" என்று கூறாமலிருப்பதற்காகவும்;

Tafseer

أَوْ تَقُولَ
அல்லது/அது சொல்லாமல் இருப்பதற்காக
حِينَ تَرَى
அது கண்ணால் பார்க்கும் நேரத்தில்
ٱلْعَذَابَ
வேதனையை
لَوْ أَنَّ
நிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால்
فَأَكُونَ
நானும் ஆகிவிடுவேன்
مِنَ ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களில்

Aw taqoola heena taral 'azaaba law anna lee karratan fa akoona minal muhsineen

அல்லது (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் "(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நன்மைகளையே செய்வேன்" என்று கூறாமல் இருப்பதற்காகவும்,

Tafseer

بَلَىٰ
இல்லை
قَدْ
திட்டமாக
جَآءَتْكَ
உன்னிடம் வந்தன
ءَايَٰتِى
எனது வசனங்கள்
فَكَذَّبْتَ
ஆனால், நீ பொய்ப்பித்தாய்
بِهَا
அவற்றை
وَٱسْتَكْبَرْتَ
இன்னும் பெருமை அடித்தாய்
وَكُنتَ
இன்னும் நீ ஆகி இருந்தாய்
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களில்

Balaa qad jaaa'atka Asyaatee fakazzabta bihaa wastak barta wa kunta minal kaafireen

(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; நீ அவைகளைப் பொய்யாக்கினாய்; கர்வம் கொண்டாய்; அதனை நிராகரிப்பவனாகவே இருந்தாய்" (என்று கூறுவான்).

Tafseer

وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
تَرَى
நீர் பார்ப்பீர்
ٱلَّذِينَ كَذَبُوا۟
பொய்யுரைத்தவர்களை
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
وُجُوهُهُم
அவர்களின் முகங்கள்
مُّسْوَدَّةٌۚ
கருப்பாக
أَلَيْسَ
இல்லையா?
فِى جَهَنَّمَ
நரகத்தில்
مَثْوًى
தங்குமிடம்
لِّلْمُتَكَبِّرِينَ
பெருமை அடிப்பவர்களுக்கு

Wa Yawmal Qiyaamati taral lazeena kazaboo 'alallaahi wujoohuhum muswaddah; alaisa fee Hahannama maswal lilmutakabbireen

(நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீங்கள் காண்பீர்கள். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)?

Tafseer